tag:blogger.com,1999:blog-84095348945635771282024-02-21T10:59:13.315+05:30சந்தை நிலவரம்கொஞ்சம் மாத்தி யோசி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger345125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-13786168842987737682017-07-16T20:18:00.000+05:302017-07-16T20:19:33.609+05:30தொங்கும் மனிதன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
இந்த வாரம் பங்கு சந்தையில் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை காண முடிந்தது. பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ந்ததும், உற்பத்தி குறியீட்டில் ஏற்பட்ட தாழ்ச்சியும் இந்திய மைய வங்கி வட்டி வீதத்தை மேலும் குறைக்கலாம் என்ற நம்பிக்கையை சந்தையில் ஏற்படுத்தியது இந்த முன்னேற்றத்திற்கான முக்கிய காரணமாகும். மேலும் நம்பிக்கை தரும் விதத்திலான அமெரிக்க பொருளாதார தகவல் வெளியீடுகளும் அதன் தொடர்ச்சியாக சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமும் இந்திய பங்கு சந்தைகளை புதிய உச்சத்திற்கு இட்டு சென்றன.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis8bhQirc6u1-geXNN8LaAJoP6rFK625jUnqLsG2Ej8EzTvaxI33oLJPClIO9r5QEOOsxha0F_pUuhhu7aU9eSyVeSKNZCrTO1I1fauDWmQYAiDh79PqQf7xEW_kWLpzdR-CDKHe3Vt34/s1600/Chart+-+NIFTY.NSI+-+NIFTY+50+-+Daily.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="435" data-original-width="1160" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis8bhQirc6u1-geXNN8LaAJoP6rFK625jUnqLsG2Ej8EzTvaxI33oLJPClIO9r5QEOOsxha0F_pUuhhu7aU9eSyVeSKNZCrTO1I1fauDWmQYAiDh79PqQf7xEW_kWLpzdR-CDKHe3Vt34/s640/Chart+-+NIFTY.NSI+-+NIFTY+50+-+Daily.jpg" width="640" /></a><br />
<br />
<br />
பங்கு வணிகர்களின் தற்போதைய மனநிலையின் அடிப்படையில் சந்தையில் காளையின் ஆதிக்கமே தொடர அதிக வாய்ப்பு இருந்தாலும், கடைசி வெள்ளிக்கிழமை நிப்டி வரைபடத்தில் உருவான "தொங்கும் மனிதன்" (HANGING MAN) அமைப்பு ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. வரும் வாரத்தில் நிப்டி ஒரு புதிய உச்சத்தை அடைய முடியாத பட்சத்தில் பங்கு சந்தை அதிக விற்பனையை சந்திக்க வாய்ப்புள்ளது.<br />
<br />
நன்றி.</div>
Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-47875656265467845312016-07-10T20:36:00.002+05:302016-07-10T20:36:49.838+05:30இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBUn76aRyoA-j8EkWSt9-S07YYdr_XuBgTMsZx8vDrz7xDej5hSAD-MDYz46EmDW1kb6tG3WengGmxWE1VYIQLhqQVFbIEwKPZLGbcX-mmkB5PUlc-YJB9RqKlhoXw7A20h7TxQydDIag/s1600/NIFTY_Weekly_10-07-2016.png" imageanchor="1"><img border="0" height="379" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBUn76aRyoA-j8EkWSt9-S07YYdr_XuBgTMsZx8vDrz7xDej5hSAD-MDYz46EmDW1kb6tG3WengGmxWE1VYIQLhqQVFbIEwKPZLGbcX-mmkB5PUlc-YJB9RqKlhoXw7A20h7TxQydDIag/s1600/NIFTY_Weekly_10-07-2016.png" width="640" /></a></div>
<br />
<br />
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.<br />
<br />
நன்றி.</div>
Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-71124056203046245142016-07-03T15:23:00.001+05:302016-07-03T15:23:35.847+05:30வரும் வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வரும் வாரம் நிஃப்டி 8350 என்ற நிலையில் ஒரு முக்கியமான எதிர்ப்பு நிலையை (Resistance ) எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதை எளிதாக கடக்கும் பட்சத்தில் வரும் வாரத்தில் பங்கு சந்தை ஏற்றமான நிலையை காண வாய்ப்புக்கள் உள்ளன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4zh4MUQbKJHBaI8I_uExhgWl3cX9_k5MUOeM5ygNpt7SGv5zan0oYQmUVzPDFGMAT6UPisxNrmPgaeli90yGqbPDP7LeC6p5genbUQPCoKWHaZ7aRZ0r4YVy9yvR1S_rhI3K-vntJAwg/s1600/NIFTY_Weekly_03-07-2016.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4zh4MUQbKJHBaI8I_uExhgWl3cX9_k5MUOeM5ygNpt7SGv5zan0oYQmUVzPDFGMAT6UPisxNrmPgaeli90yGqbPDP7LeC6p5genbUQPCoKWHaZ7aRZ0r4YVy9yvR1S_rhI3K-vntJAwg/s1600/NIFTY_Weekly_03-07-2016.png" /></a></div>
<br />
<br />
வரும் வாரம் சிறக்க வாழ்த்துக்கள். </div>
Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-30792628319728347362012-11-03T20:23:00.000+05:302012-11-03T20:23:37.666+05:30கடன். கவனம் தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இது கலியுகம் இல்லை. ஒரு கடன் யுகம். சாமான்யன் முதல் சகல வசதி கொண்டவர் வரை கடனாக வாங்கித் தள்ளி கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் கூட இன்று கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான அரசாங்கங்கள் (இந்தியா உட்பட) புதிது புதிதாக கடன் வாங்கித்தான் வட்டியை கட்டிக் கொண்டிருக்கின்றன. <br />
<br />
சமீபத்தில் கடன் படுத்தும் பாடு பற்றிய ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். அதன் இணைப்பு கீழே!<br />
<br />
<a href="http://www.streettalklive.com/daily-x-change/1279-debt-driving-the-economy-since-1980.html">http://www.streettalklive.com/daily-x-change/1279-debt-driving-the-economy-since-1980.html</a><br />
<br />
இந்த கலியுகம் மன்னிக்கவும் கடன் யுகத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எம்பெருமான்தான் இன்னுமொருமுறை அவதாரம் எடுக்க வேண்டும். <br />
<br />
நன்றி!</div>
Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-44456939110360367102012-04-24T13:34:00.000+05:302012-04-24T13:34:35.845+05:30வேண்டாமே ஹீரோயிசம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<br />
<br />
சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் கடத்தப் பட்டதை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கைகளில் படித்தேன். தகுந்த பாதுகாப்பின்றி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானது என்று காவல் துறை அறிவுறுத்திய பின்னரும், மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்ட் பகுதிகளுக்கு முறையான பாதுகாப்பின்றி சென்றததால்தான் இந்த விபரிதம் ஏற்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு உரியவரே. அவர் துணிச்சல் மிகுந்தவராக இருக்கலாம் மேலும் அவருக்கு அவரது உயிர் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்து ஒரு ஹீரோவைப் போல பேட்டியும் கொடுக்கலாம்.<br />
<br />
<br />
<br />
ஆனால் அவர் கடத்தப் பட்டதன் விலையை அரசாங்கமும் அதன் மூலம் நாடும்தான் கொடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருக்கும் மாவோயிஸ்டுகள் விடுதலை மற்றும் திரைக்கு பின்னே கொடுக்கப் படும் பணத்திற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்?<br />
<br />
<br />
<br />
இதற்கு முந்தைய எல்லா கடத்தல் மற்றும் பிந்தைய விடுதலைகள் போலில்லாமல், இந்த முறையாவது, பாதுகாப்பு குறைவுக்கு யார் காரணம் என்பதை முறையாக விசாரித்து, ஒரு வேளை ஆட்சியரே பொறுப்பாக இருந்தால், அரசின் நஷ்டத்திற்கு அவரை பொறுப்பாக்கி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். <br />
<br />
<br />
<br />
அந்த நடவடிக்கை வருங்காலத்தில் பொறுப்பற்ற இதர அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். <br />
<br />
<br />
<br />
நன்றி!</div>Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-15151244937385648952012-01-01T08:16:00.000+05:302012-01-01T08:18:04.711+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!<div style="text-align: center;"><span style="color: rgb(0, 0, 153);font-size:180%;" ><span style="font-family: courier new;">அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!</span></span></div>Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-26161071930743516042011-12-15T08:58:00.001+05:302011-12-15T09:01:04.217+05:30நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். <br /><br />அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார்.<br /><br />இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் பார்த்த போது, அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.<br /><br />இவர்களும் இந்தியர்கள்தானே?<br /><br />இந்தியாவின் இன்னொரு பக்கம் உள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் "ஒளிரும் இந்தியா" இவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது? <br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-21363247898176455302011-08-07T17:22:00.004+05:302011-08-07T17:25:38.759+05:30டாலர் செல்லா காசாகுமா?<div align="justify">நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது.<br /><br />நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின.<br /><br />சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு மாற்றாக, பல நாடுகளின் அரசாங்கங்கள் இன்னும் அதிக கடனை வாங்கின. குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் அளவு, பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், நான்கு மடங்காக உயர்ந்ததுள்ளது.<br /><br />கடனை திருப்புவதிலான அமெரிக்க அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இப்போது பெருமளவு சரிந்திருப்பதற்கான அடையாளமாக, உலக தர நிர்ணய நிறுவனம், அமெரிக்க அரசாங்க கடன் பத்திரங்களின் மீதான தர வரிசையை குறைத்துள்ளது. இதன் தாக்கம் ஏற்கனவே உலக சந்தைகளில் கடந்த வாரம் எதிரொலித்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களை பெருமளவில் வாங்கிக் குவித்துள்ள உலக வங்கிகளும், பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த தர இழப்பால் அதிக அளவில் பாதிக்கப் படும் வாய்ப்புக்கள் உள்ளன.<br /><br />பொருளாதார மீட்சி என்பது பொய்யாகிப் போய், ஒரு இரட்டை பொருளாதார வீழ்ச்சியாக உருப்பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக பல பொருளாதார வல்லுனர்களும் கருதும் இன்றைய சூழ்நிலையில், அமெரிக்கா இந்த கடன் இக்கட்டில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளிவர போகிறது என்பதைப் பொறுத்தே டாலரின் வருங்காலம் அமையும்.<br /><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWfaMQlOwGXtLfNgsKhPoxeuZF6KLOasfOt-3-JLocOKQp7fRtUYFutzHE3hnNVJXc3mMRjUOcsNFYOPrHqrR4DLYR5N6QyydnmpH1gysf2uPaSbAvc3gJwr6TJmxWZmUnlS0tHEXEihI/s1600/NIFTY+07.08.11.png"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 253px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5638080992090159842" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWfaMQlOwGXtLfNgsKhPoxeuZF6KLOasfOt-3-JLocOKQp7fRtUYFutzHE3hnNVJXc3mMRjUOcsNFYOPrHqrR4DLYR5N6QyydnmpH1gysf2uPaSbAvc3gJwr6TJmxWZmUnlS0tHEXEihI/s400/NIFTY+07.08.11.png" /></a><br /><br />வரும் வாரம் மிகவும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-84577251416867942392011-07-31T22:35:00.002+05:302011-07-31T22:38:38.863+05:30பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பாதி ஆரம்பம்?ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னே உருவாகும் பணவீக்க சுழற்சியின் முதல் பகுதி எப்பொழுதுமே விரும்பக் கூடியதாகத்தான் இருக்கும். பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுதலை, அதிகப் படியான பண புழக்கம், அதிக வேலை வாய்ப்புக்கள், ரியல் எஸ்டேட் உயர்வு, தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றம் என பல வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அதிகப் படியான விலை அளவுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் லாபத்தை உயர்த்தும். அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகமாகும். மக்களிடையே உருவாகும் அதிகப் படியான பணபுழக்கம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் குஷிப் படுத்தும். அதிகப்படியான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சம்பள உயர்வு நடுத்தர வர்க்கத்தினையும் மகிழ்ச்சிப் படுத்தும்.<br /><br />அதே சமயத்தின் பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான் இருக்கும். விலைவாசிகள் விண்ணை முட்டும் பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் வெகுவாக பாதிக்க படும். அதிகப் படியான கடன் வட்டி வீதங்கள் உற்பத்தியாளர்களை நஷ்டத்தில் தள்ளும். புதிய முதலீடுகள் குறையும். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை உருவாகும்.<br /><br />இப்போதைய சூழ்நிலையில், மேலோட்டமாக பார்க்கும் போது பணவீக்கம் ஒரு கட்டுக்குள் இருப்பது போல தோன்றினாலும், அடிப்படை பணவீக்கம் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே இருந்து வருகிறது. இந்திய மத்திய வங்கி வட்டி வீதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது, விலைவாசியை கட்டுப் படுத்த ஓரளவு உதவும் என்றாலும், கடன் வட்டி வீதங்களின் உயர்வு புதிய முதலீடுகளை மந்த படுத்துவதுடன் இந்திய பொருளாதார வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும்.<br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKIVSUH-yUx32F_qKumOSX4YOfWu88DmJ_SON_H4J0A8tWXjftZ1-k2fukNjqQ0q9HxK1vQ7TTOdRTtiOsPVDkCGlfq5Jhn_Ywuv3ZKIDLnso9bAbWeSeZ5YLAZ3tPgLnbl9dywj2Cq7o/s1600/nifty+31.07.11.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKIVSUH-yUx32F_qKumOSX4YOfWu88DmJ_SON_H4J0A8tWXjftZ1-k2fukNjqQ0q9HxK1vQ7TTOdRTtiOsPVDkCGlfq5Jhn_Ywuv3ZKIDLnso9bAbWeSeZ5YLAZ3tPgLnbl9dywj2Cq7o/s400/nifty+31.07.11.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5635564277810486946" /></a><br /><br />வரும் வாரம் சிறப்பானதாக இருக்க அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22871212869185563052011-07-17T21:23:00.002+05:302011-07-17T21:24:49.729+05:30சந்தை இப்போது ஒரு முக்கிய தருணத்தில்!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis1P7Ae6dBIqCIctSGuWsg90t_WXEq3-9TJohCiB-n76C0XI9wP0Pam6yuWWvPi15qwfadNmVvEQGD9855eAwrO9dQEKyNL1T0xBbv0ceade7l0Lxzy4CwfGHVQddSOu0r0OTptSxUYa8/s1600/july+17.png"><img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 549px; DISPLAY: block; HEIGHT: 316px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5630350179137050226" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis1P7Ae6dBIqCIctSGuWsg90t_WXEq3-9TJohCiB-n76C0XI9wP0Pam6yuWWvPi15qwfadNmVvEQGD9855eAwrO9dQEKyNL1T0xBbv0ceade7l0Lxzy4CwfGHVQddSOu0r0OTptSxUYa8/s400/july+17.png" /></a>Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-72857253987823925642011-05-15T23:31:00.000+05:302011-05-15T23:32:56.440+05:30தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்!காசுக்கும் இலவசத்துக்கும் தமிtழக வாக்காளர்கள் விலை போவார்கள் என்ற பரவலான ஊடக கணிப்புக்களுக்கு முற்று புள்ளி வைத்து, தமது கண்ணியத்துக்கு முக்கியத்துவம் குடுத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!<br /><br />ஜாதி கணக்குகளையும் கூட்டணி கணக்குகளையும் மனதில் நிறுத்தி தேர்தலை சந்தித்தவர்களின் கணக்குகளை முடித்து வைத்ததற்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்!<br /><br />குடும்ப ஆட்சியை முடித்து வைத்ததற்கும் குறுநில மன்னர்களை வீட்டிற்கு அனுப்பியதற்கும் மீண்டுமொரு வாழ்த்துக்கள்!<br /><br />ஒரு தேர்தலுக்கு ஒரு கூட்டணி என ஜாதி பெயரை சொல்லி வோட்டு கேட்டவர்களுக்கும், தமிழீழ பிரச்சனையில் பஞ்சோந்தியாக நாட்கமாடியவர்களையும் சரியாக இனம் கண்டதற்கும் நல்வாழ்த்துக்கள்!<br /><br />அறுபது சீட்டு கேட்டு அடம் பிடித்தவர்களை ஐந்து சீட்டுடன் அடக்கி வைத்ததற்கும் வாழ்த்துக்கள்!<br /><br />கவர்ச்சியும் காமெடியும் திரையில் (சில சமயங்களில் நேரில்) ரசிப்பதற்கு மட்டுமே. திரை மயக்கம் தேர்தலில் செல்லாது என்று மீண்டுமொரு முறை நிருபித்ததற்கும் வாழ்த்துக்கள்!<br /><br />பண பலம், அதிகார பலம், ரௌடி பலம் அனைத்தையும் அடக்கி அஞ்சா நெஞ்சர்களை அஞ்சா நோஞ்சான்களாக ஆக்கிய தேர்தல் கமிஷன் குறிப்பாக சகாயம் போன்ற சிறந்த அரசு அதிகாரிகளுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! <br /><br />தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் உண்மையான ஜனநாயகம் மலர இந்த தேர்தல் ஒரு சிறந்த துவக்கமாக அமையவும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-25242146085291895392011-05-06T19:04:00.000+05:302011-05-06T19:05:54.083+05:30ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது. <br /><br />இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது. <br /><br />பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான். <br /><br />உலக பயங்கரவாதத்தின் பிம்பமாக கருதப் படும் பின் லாடனின் அழிவு பயங்கரவாதத்திற்கு வைக்கப் பட்ட முற்றுப் புள்ளி அல்ல என்றாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய வெற்றியாகும். அதே போல இரண்டு அலைற்றை ஊழல்வாதிகள் தண்டிக்கப் பட்டால், இந்தியாவில் ஊழலுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும். <br /><br />இரண்டு அலைகற்றை அலைவரிசை மீதான விசாரணை உச்ச நீதி மன்றம் முதல் சாதாரண மக்கள் வரை அனைவராலும் கூர்மையாக கவனிக்கப் படும் இந்த வேளையில், ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டால், இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை வெகுவாக பாதிக்கப் படும். <br /><br />நிரா ராதியா டேப்புகள் மற்றும் கலைஞர் டிவி பணமாற்ற விவகாரங்கள், இரண்டு அலைகற்றை ஊழலில் கனிமொழியின் பங்கினை வெளிப்படையாக காட்டுகின்றன. அவரை தி மு க வெளிப்படையாக ஆதரிப்பதும் கனிமொழி விவகாரத்தினை மாநில ஆட்சியில் பங்கெடுப்பதற்கான மாஸ்டர் ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்திருப்பதும் ஊழல் அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை தோலுரித்து காட்டுகின்றன. இப்போதைக்கு பொது மக்களுக்கு மிச்சமுள்ள நம்பிக்கையெல்லாம் நீதி மன்றங்களின் மீதுதான். <br /><br />திமுகவின் தாக்கத்தையும் மீறி, காங்கிரஸின் இரட்டை நாடகங்களையும் தாண்டி, கனிமொழி கைது செய்யப் பட்டால், அந்த நிகழ்வு இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்பதுடன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று நம்புகிறேன். <br /><br />மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.<br /><br />கனிமொழியின் கைது ஊழலுக்கு வைக்கப் படும் முற்றுப் புள்ளியாக அமையாவிடினும், ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்.<br /> <br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37411995451992594782011-01-16T22:37:00.002+05:302011-01-16T23:43:11.518+05:30பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்!பரதப்பட்டி ஜனங்களெல்லாம் பாவப் பட்ட ஜனங்களாம். பலதரப் பட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப் படுவார்களாம். ஒரு முறை எல்லாரும் ஒண்ணா கூடி இந்த பிரச்சினைக்கு வழி என்னன்னு யோசிச்சாங்களாம். அப்ப வந்த யோசனைப்படி ஒரு டாக்டரை அதுவும் வெளிநாட்டில் படிச்ச டாக்டரை ஊர் தலைவரா போட்டாங்களாம். அவருக்கு துணையா நிறையா படிச்ச டாக்டர்களாக வச்சுகிட்டாங்கலாம். <br /> <br />நம்மூரு தலைவரா ஒரு டாக்டர் இருக்காருன்னு, இனிமேல நமக்கு வியாதி தொல்லை இருக்காது நினைச்ச பரதப்பட்டி ஜனங்களோட சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலையாம். திடீரென்னு ஒரு விஷக் காய்ச்சல் ஊரெல்லாம் பரவுச்சாம். <br /> <br />பரத் பவார் என்கிற ஒரு டாக்டர் சொன்னாராம், காசு அதிகமாக சம்பாதிக்கிறதால ஊரு ஜனங்க எல்லாரும் நிறைய சாப்பிடறாங்க. அதனாலதான் காய்ச்சல் வருதுன்னு. பாரினில படிச்ச இன்னொரு டாக்டர் பதம்பரம் சொன்னாராம், "இது ஒலக பிரச்சினை. எல்லா இடத்திலும்தான் காய்ச்சல் இருக்கு. அங்க எல்லாருக்கும் சரியாப் போனா, நம்மூரிலும் சரியாப் போயிடும்'னு". திட்டம் போடுற படா டாக்டர் பளுவாலியா சொன்னாராம். "நேத்திக்கு நூறு டிகிரி இருந்த காய்ச்சல், இன்னைக்கு ஒரு டிகிரிதான் ஏறி இருக்கு. இதுல இருந்து தெரிய வருது என்னான்னா, காய்ச்சல் ஏறுற வேகம் கட்டுக்குள்ளதான் இருக்கு'ன்னு". இன்னொரு டாக்டர் பப்பா ரெட்டி சொன்னாராம், "யாரும் கவலைப் படாதீங்க, வருகிற மார்ச் மாதத்துக்குள்ள, காய்ச்சல் நூறு டிகிரிக்குள்ள வந்துடும்'னு. <br /> <br />எல்லாரும் ரொம்பவே நம்புன டாக்டர் பன்மோகன் சிங் சபதம் போட்டாராம். நூறு நாள்ல இந்த விஷக் காய்ச்சல கட்டுப் படுத்துவேன்னு. சொன்ன அதே வேகத்துல அந்த ஊருல வித்த மருந்தோட விலை எல்லாத்தயும் ஏத்திட்டாராம். விலைய எத்தி எப்படி விஷக் காய்ச்சலை கட்டுப் படுத்த முடியும்னு காரணம் கேட்டா, இதெல்லாம் ஒலக சமாசாரம் , உங்களுகெல்லாம் புரியாதுன்னு சொல்லிட்டாராம். குட்டி டாக்டர் பாகுல் காந்தி சொன்னாராம். "இதே எங்க பாட்டி மட்டும் இருந்திருந்தா கை வைத்தியம் பாத்தே எல்லா காய்ச்சலையும் விரட்டி இருப்பாங்க. அதுக்குத்தான் சொல்றேன், இந்த பணநாயகம் எல்லாம் வேணாம், எங்க நாட்டாமை ஆட்சியை மறுபடியும் கொண்டு வந்தா போதும்" <br /> <br />பரதப் பட்டி தெக்கு தெரு கவுன்சிலர் பருனாநிதி ஒரு கலைப் பிரியராம். அதுவும் கூத்துக் கலை மேல கொலைப் பிரியராம். அவங்க தெருவுல இருந்த எல்லாருக்கும் கூத்து காட்டி காட்டியே, காய்ச்சலோட கடுமைய மறக்கச் செஞ்சாராம். விஷக் காய்ச்சல குறைக்க அடிக்கடி பன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுனாராம். மருந்தோட விலைய பன்மோகன் சிங் பத்து ரூபா ஏத்தினா, அதுல ஒரு ரூபாய் விலய குறைச்சு மக்கள் மேல கருணை மழை பொளிஞ்சாராம். <br /><br />பரதப்பட்டி மக்களுக்கு இந்த விஷ காய்ச்சல் பத்தியெல்லாம் அதிக கவலை எல்லாம் இல்லையாம். மருந்து வியாபாரிகளும் டாக்டர்களும், இந்த ஆட்சி பொற்காலம் என்றார்களாம். பரதப் பட்டி உலக அரங்கில் உயர்ந்த இடம் பிடிக்க இது போன்ற காய்ச்சல்களும் அதிக மருந்து விற்பனையும் ரொம்ப முக்கியம் என்றார்களாம். இன்னும் கொஞ்ச நாளில் பைனாப் பட்டியை விட இந்தியாவில் மருந்து விற்பனை ஜாஸ்தியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்களாம். விஷ காய்ச்சல் வராதவர்களுக்கு இந்த பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதே தெரிய வில்லையாம். பாதிக்கப் பட்டவங்களோ இது தம்மோட தலை எழுத்துன்னு அமைதியா இருந்துட்டாங்களாம். நல்ல லாபம் பாத்த ஒலக மருந்து வியாபாரிகளெல்லாம், பன்மோகன் சிங் ஒரு ஒலக நாயகன்னு பட்டம் கொடுத்தாங்களாம். <br /><br />இந்த காய்ச்சலால பணபுழக்கம் அதிகமாகி இருக்கலாமுங்க. ஆனால் காலப் போக்கில் விஷக் காய்ச்சல் உடம்பை உருக்கி எடுத்த பின்னர்தான் தெரியும், இது ஒரு மீளாப் பயணம் என்று புரிந்த ஒரு சிலரும், தம் பேச்சை கேக்க ஆளின்றி அமைதியாக இருந்து விட்டார்களாம். <br /><br />ஓகே நண்பர்களே! இப்ப நம்ம சந்தை நிலவரத்திற்கு வருவோம்.<br /><br />தொடர்ந்து வெளிவந்த ஊழல் பூதங்கள், அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக வட்டி வீதம் அதிகரிக்குமோ என்ற கவலை, சாதகமில்லாத உலக சந்தை தகவல்கள், உயரும் கச்சா எண்ணெய் விலைகள், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, குறைந்த இந்திய தொழிற் வளர்ச்சி, பங்கு லாப விற்பனை போன்றவை சந்தையை கடந்த இரு வாரங்களாக படாத பாடு படுத்தி விட்டன. முக்கிய குறியீடுகள் எட்டு சதவீதம் வரை குறைய, சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலைக்கு கீழே சரிந்துள்ளது. நிபிட்டி மீண்டும் 5900 புள்ளிகளுக்கு மேலே செல்லும் வரை வாங்கும் நிலையை வர்த்தகர்கள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdwQrTAe53QE4_bO4eEe0yVGlsUwAgJPvH7PxbsV5fuiOmoRfGkBigUrF316NnlVfcj0fNF8IFa2Hn8hDXnBrdF7BBP6Q3qSmxJPVAN3cv5_vq8hPoek7GMi5SMPgvRL_f3tBa7J4X9Kg/s1600/nifty+15.01.2011.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 253px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdwQrTAe53QE4_bO4eEe0yVGlsUwAgJPvH7PxbsV5fuiOmoRfGkBigUrF316NnlVfcj0fNF8IFa2Hn8hDXnBrdF7BBP6Q3qSmxJPVAN3cv5_vq8hPoek7GMi5SMPgvRL_f3tBa7J4X9Kg/s400/nifty+15.01.2011.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5562848206204663330" /></a><br /><br />அதே சமயத்தில், 5600 புள்ளிகளுக்கு அருகே நிபிட்டி நல்ல அரனை கொண்டுள்ளது. இந்தியாவில் எல்லா விலைகளையும் பாதித்த பணவீக்கம் சந்தையின் புள்ளிகளையும் பாதித்துள்ளது. முந்தைய 21000 (சென்செக்ஸ்) நிலைக்கும் இன்றைய 21000 நிலைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் அடிப்படையில் சிறந்த பங்குகளை மெல்ல மெல்ல சேகரிக்கலாம். மேலும், வங்கி வட்டி வீதங்கள் உயர்ந்துள்ள நிலையில், வங்கி சேமிப்பினையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளலாம். <br /><br />வருகிற வாரம் வெகு சிறப்பாக அமைந்திட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-56183093393324796672011-01-13T22:24:00.000+05:302011-01-13T22:26:15.488+05:30தந்தியடிக்கும் கலைஞர்!விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். <br /> <br />எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை. <br /> <br />கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது. <br /> <br />மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறார் போல. <br /><br />நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்.<br /><br />அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-32327398205555579322010-12-31T23:25:00.000+05:302010-12-31T23:28:20.626+05:30புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!நண்பர்களே!<br /><br />வரும் வருடம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும்!<br /><br />அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!<br /> <br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-58217148155981484892010-12-18T20:54:00.001+05:302010-12-18T20:58:26.244+05:30ஒரு அரசியல்வாதியின் புலம்பல் !இது கலிகாலம். பலரும் பார்த்து பெருமூச்சு விடும் அரசியல்வாதிகளையும் இந்த கலிகாலம் விட்டு வைப்பதில்லை. <br /><br />கர்நாடகத்தில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஒரு பெரிய கட்சியின் சார்பில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் போட்டியிட முனைந்து, பின்னர் போட்டியில் இருந்து விலகி கொண்ட ஒரு உள்ளூர் அரசியல் தலையுடன் பேச இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள வலிமையான கட்சியில் கிடைத்த வாய்ப்பிலிருந்து ஏன் விலகி கொண்டீர்கள் என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர் ஒரு பெரிய புலம்பலை பதிலாக தந்தார். <br /><br />"எங்கே சார்! நாற்பது நாற்பத்தைந்து லட்சங்களை இந்த தேர்தலுக்காக விட வேண்டியிருக்கும். ஆனால் போட்ட முதலை திருப்பி எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகி விட்டது. நூறு நாள் வேலை திட்டத்தில் இப்போதெல்லாம் ஆன்லைன் கிரெடிட் செய்து விடுகிறார்கள். மாவட்ட அளவிலான சிறிய பணிகளுக்காக இப்போதெல்லாம் அதிக பணத்தை ஒதுக்குவதில்லை. பெரிய தொழிலதிபர்கள் பெரிய இடத்தில் நேரடியாக காண்டக்ட் வைத்துக் கொண்டு மொத்த காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அரசியல் செய்வது ரொம்ப கஷ்டம் ஆகி விட்டது சார். " <br /><br />சிறிது நேர மௌனத்திற்கு பின்னர், அந்த ஒரு லட்சம் கோடியை எப்படித்தான் அடித்திருப்பார்கள் சார் என்று ஒருவித ஏக்கத்துடன் கேட்ட அவரை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. <br /><br />முதல் பத்தியிலேயே சொன்னபடி பலரையும் புலம்ப விடும் அரசியல்வாதிகளையும் கூட புலம்ப வைக்கும் அளவுக்கு இப்போது காலம் கெட்டுப் போய் விட்டது. <br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-87544124502280456622010-12-18T00:13:00.002+05:302010-12-18T00:18:35.531+05:30இந்தியாவின் வண்ணங்களும் ராகுல் காந்தியின் எண்ணங்களும்!முகரம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடகத்தின் வடபகுதியில் உள்ள எனது அலுவலகத்தில் இந்த வாரம் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அங்குள்ள ஒரு தமிழ் நண்பரிடம் இது பற்றி விவாதிக்கும் போது, அவருடைய தொழிற்சாலையில் கூட பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும், இந்த பகுதியில் முகரம் வெகு விசேஷமாக கொண்டாடப் படுவதாகவும் கூறினார். முகரத்தை ஒரு இஸ்லாமிய திருநாளாக மட்டுமே அறிந்திருந்த நான், "முஸ்லிம்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தால் கூட பரவாயில்லை, பல இந்து ஊழியர்களும் கூட முகரத்தை முன்னிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக உள்ளது" என்று அவரிடம் வினவினேன். அதிலும் ஒரு இந்து பெண் ஊழியர், தீபாவளிக்கு ஊருக்கு போவதை விட முகரத்திற்கு சொந்த ஊருக்கு போவது மிகவும் முக்கியம் என்று என்னிடம் விடுமுறைக்காக மன்றாடியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக கூறினேன். அதற்கு அவர், இந்த பகுதியில் முகரம் இந்துக்களால் மிக விசேஷமாக கொண்டாடப் படுகிறதாக கூறினார். முகரத்தின் போது தீமிதிப்பது, பூ தேங்காய் பழங்களுடன் மசூதிக்கு சென்று வழி படுவது போன்ற பழக்கங்கள் உண்டு என்று வேறு சில உள்ளூர் நண்பர்களும் கூறினர். வரும் ஞாயிற்றுக் கிழமையன்று தவறாமல் தர்காவிற்கு வந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இன்று <a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=147749">தினமலர் வலைதளத்தில் வந்த ஒரு செய்தி</a>, இது ஏதோ இந்தியாவின் ஒரு பகுதியில் மட்டும் நடக்கும் அபூர்வமான நிகழ்வு அல்ல என்பதை சுட்டிக் காட்டியது. மேலும் இது போன்ற மத இணக்க நிகழ்வுகள் இந்தியாவில் ஏராளம் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் உணர்ந்திருப்பான். உடல் நிலை பாதிப்புகளின் போது மசூதிக்கு சென்று தாயத்து கட்டுவதும் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவதும் இந்தியாவில் தினந்தோறும் பார்க்கக் கூடிய மிகவும் சகஜமான நிகழ்வுகள் ஆகும். <br /> <br />இந்த நிலையில் இந்தியாவின் வருங்கால பிரதமராக வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள நிற தீவிரவாதத்தை பற்றிய அமெரிக்க தூதரிடம் அடித்த கமன்ட்டுக்களை விகிலீக்ஸ் வழியாக அறிய நேரிட்டது. <br /> <br />அவரிடம் சொல்ல விரும்புவது இதுதான். <br /> <br />"பலதரப்பட்ட வண்ணங்களை விரும்புவர்கள் இந்தியர்கள். <br /> <br />அவர்களின் விருப்பத்திற்குரிய பலதரப்பட்ட வண்ணங்களிலும், எதை தின்றால் பித்தம் தீரும் என்று அன்றாட சமூக பொருளாதார சிக்கல்களில் அவதிப்படும் சாதாரண இந்தியர்களின் எண்ணங்களிலும் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு இடம் இருந்தததில்லை. <br /> <br />தீவிரவாதம் வாழ்வதும் வளர்வதும், எப்போதும் ஒட்டுக் கணக்கு போடும், நிமிடத்திற்கு நிமிடம் பல வண்ணங்களை மாற்றும் பச்சோந்தி அரசியல்வாதிகளின் எண்ணங்களில்தான்! <br /> <br />தீவிரவாதத்தின் வீரியம் ஒருபோதும் குறையாமல் பார்த்துக் கொள்வது, நீங்கள் கமன்ட் அடித்த அமெரிக்கா போன்ற மேலாண்மைவாதிகள்தான். <br /> <br />முதலில் சாதாரண இந்தியர்களை போல எல்லா வண்ணங்களையும் இயல்பாக நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! <br /><br />உங்கள் எண்ணங்கள் தானாக மாறிப்போகும்." <br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-35818115720202716942010-11-21T22:41:00.005+05:302010-11-21T22:46:11.898+05:30பயமா? லாப விற்பனையா?நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. <br /><br />சீனா தனது வங்கி கையிருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பதும் அயர்லாந்து விவகாரம் ஐரோப்பிய நிதி சிக்கல் இன்னும் தீர்ந்து விட வில்லை என்பதை வெளிக் கொணர்ந்திருப்பதும் கூட இந்த விற்பனைக்கான இதர காரணங்கள் என்று கூறப் படுகின்றன. கிட்டத்தட்ட நூறு சதவீத லாபத்தை கொடுத்திருக்கும் இந்திய பங்கு சந்தைகளில் நிகழும் இப்போதைய விற்பனை, அந்நிய முதலீட்டாளர்களின் லாபத்தை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவும் இருக்கக் கூடும். அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் டாலர் மேலேறுவதும் கூட இதர காரணங்களாக இருக்கலாம். <br /><br />ஆக மொத்தத்தில், இந்திய பங்கு சந்தை புதிய உயரத்தை எட்டும் வாய்ப்பு இப்போதைக்கு பறி போயுள்ளது மட்டுமல்லாமல், முக்கிய குறியீடுகள் வலுவான அரண் நிலைகளுக்கு கீழேயும் (நிபிட்டி 5930, சென்செக்ஸ் 19800) முடிவடைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும் . <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNXemGOSNEfLUG55mcZsVXI38HIuhQvnImuzt_cGjCIwvTg1WiSElEK-vLFJAUklidRA2Zwre7W80z47flwTHv9FTiSP-qzfnnJ2iBtRjkTot9gvWw31E0SabdMC3iBndx39_eo45blSY/s1600/chart+on+21.11.10.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 245px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNXemGOSNEfLUG55mcZsVXI38HIuhQvnImuzt_cGjCIwvTg1WiSElEK-vLFJAUklidRA2Zwre7W80z47flwTHv9FTiSP-qzfnnJ2iBtRjkTot9gvWw31E0SabdMC3iBndx39_eo45blSY/s400/chart+on+21.11.10.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542052198221015394" /></a><br /><br />குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி அளவு 5850 க்கு அருகே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். 6050க்கு மேலே சந்தையில் வாங்கும் நிலை எடுக்கலாம் (இலக்கு 6400) . <br /><br />நீண்ட கால முதலீட்டாளர்கள் நிபிட்டி 5700க்கு கீழே அடிப்படையில் சிறந்த பங்குகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம். <br /><br />வரும் வாரம் சிறந்த வாரமாக அமைந்திட அனைவரும் நல்வாழ்த்துக்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88802934242184756852010-11-18T21:15:00.002+05:302010-11-18T21:18:08.531+05:30ஊழலின் ஊற்றுக்க்கண்!ஓய்வு பெற்ற வங்கி உயர் அதிகாரி ஒருவர் சமீபத்தில் தம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த போதும் கூட, கல்லூரி கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாததால், அவர் தனது மருத்துவர் கனவை கைவிட்டு வங்கி வேலையில் சேர நேர்ந்ததாம். <br /> <br />கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த அவர், வங்கியில் உயர் பதவிக்கு வந்ததும் கல்விக் கடன்களை, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு, உணர்வோடு வழங்கி வந்தார். ஆனால் அந்த கடன்களை திருப்பி வசூலிக்க முனைந்த போது அவருக்கு கிடைத்த அனுபவம் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. <br /> <br />தவணைகளை விடுங்கள்! <br /> <br />கடன் தொகையின் மொத்த அளவு சம்பளம் கிடைக்கும் படியாக வாழ்வில் பெருமளவுக்கு உயர்ந்த மாணவர்கள் கூட கல்விக் கடன்களை திருப்பிச் செலுத்த முனையவில்லை. மாறாக அலட்சியப் படுத்தி உள்ளனர். <br /> <br />வயதில் மூத்தவரும் "அந்த கால மனிதருமான" அவரால் இதை ஜீரணிக்கவே முடிய வில்லை. யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.ஆனால் வாழ்வின் முதல் படியினையே "ஏமாற்றும் படியாக" எப்படி இவர்களால் ஆரம்பிக்க முடிகிறது என்று புலம்பிக் கொண்டே இருந்தார். இந்த அனுபவம் எங்கேயோ எப்போதோ ஏற்பட்ட ஒன்றல்ல. இந்தியாவில் உயர்ந்து கொண்டே வரும் கல்வி வாராக் கடன்கள் இந்த நிகழ்வை உறுதிப் படுத்துகின்றன.<br /> <br />அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது அந்த கால பழமொழி. <br /> <br />ஊழல் சமூகத்தில் இருந்துதான் ஸ்பெக்ட்ரம் ராஜாக்கள் உருவாகிறார்கள் என்பது இந்த கால புதுமொழி. <br /> <br />கல்மாதிகளும், எட்டியூரப்பாக்களும், ரெட்டிகளும்,அசோக் சவான்களும் இன்றைய குப்பன்களையும் சுப்பன்களையும், ரமேஷ்களையும் சுரேஷ்களையுமே பிரதிபலிக்கிறார்கள் என்பது மிகையாகாது. <br /> <br />ஊழலை ஒழிப்பது என்பது ஒவ்வொரு தனி இந்தியரிடமிருந்தும் துவங்க வேண்டும். <br /><br />சுத்தமான சமூகத்தில் ஊழல் பெருச்சாளிகளுக்கு எப்போதுமே இடமில்லை. <br /> <br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-66566860488503846142010-11-16T23:00:00.001+05:302010-11-16T23:02:35.368+05:30எப்போதும் சந்தோசமாக இருக்க எளிமையான ஏழு வழிகள்!எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டுமா? <br /><br />இதோ பிடியுங்கள் ஏழு டிப்சுகளை! <br /><br />1. யாரையும் வெறுக்காதீர்கள்.<br /><br />2. எதற்கும் கவலைப் படாதீர்கள்!<br /><br />3. எளிமையாக இருங்கள்!<br /><br />4. குறைவாக எதிர்பாருங்கள்!<br /><br />5. நிறைவாக கொடுங்கள்!<br /><br />6. நிறைய புன்னகையுங்கள்!<br /><br />7. அப்புறம், அடிக்கடி இந்த பதிவு வலை பக்கம் வாருங்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33015641550734502872010-11-09T23:13:00.003+05:302010-11-09T23:17:04.387+05:30வேலை தேடி வந்த ஒபாமா!பொதுவாக, வேலை தேடி அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களின் வாடிக்கை. அதுவும் அமெரிக்க தூதகரங்களின் வாசலில் விசா வேண்டி தவமிருப்பவர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் ஒரு மாறுதலுக்காக இப்போது ஒபாமா வேலை தேடி இந்தியாவிற்கு வந்துள்ளார். <br /><br />எப்போதுமே அமெரிக்க அதிபர்களின் வருகைகள் தில்லியை குறிவைத்தே அமைவதுண்டு. அவ்வப்போது அமெரிக்க சேவை தொழிலாளிகளின் தலை நகரங்களான பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அமெரிக்க அதிபர்களின் காலடிகள் படுவதுண்டு. <br /><br />ஆனால் இந்த முறை டில்லிக்கு கொடுக்கப் பட்டது ஒரு நாள் மட்டுமே. பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் திரும்பிக் கூட பார்க்கப் படவில்லை. முதலாளிகளின் நகரமான மும்பைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதுவும் இந்திய தொழில் அதிபர்களுடன் போடப் பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு பின்னரும், அந்த ஒப்பந்தத்தினால் எத்தனை அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகப் போகின்றன என்று வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது, இந்த பயணத்தின் முக்கிய நோக்கத்தினையும், காலசக்கரத்தின் மாற்றத்தையும் பறை சாற்றியது. <br /><br />யாருக்குத் தெரியும்?<br /><br />ஒரு ஒபாமா வேலைகள் தேடி இந்தியா வருகை தந்த இந்த காலமும் மாறிப் போய் பல ஒபாமாக்கள் வேலை தேடி இந்தியாவிற்கு ஓடி வரும் காலமும் வரலாம்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-34385458964815327642010-10-31T23:08:00.008+05:302010-10-31T23:20:41.312+05:30தீப ஒளி பரவட்டும்!நிச்சயமற்ற உலக பொருளாதார சூழல் மற்றும் லாப விற்பனை நம்மூர் சந்தையை சென்ற வாரமும் தளர்ச்சியாகவே வைத்திருந்தன. ரியாலிடி மற்றும் எரிசக்தி துறை பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பண்டிகை கால எதிர்பார்ப்புக்கள் வாகன மற்றும் நுகர் பொருட் துறை பங்குகளை உயரச் செய்தன.<br /><br />அமெரிக்க அரசு மற்றும் அதன் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி கடந்த ஒரு வருடத்தில் சிறப்பாக இல்லாமல் போனது பொருளாதார ரீதியாக ஒரு பாதகமான அம்சமாக இருந்தாலும், அமேரிக்கா மீண்டும் ஒருமுறை பெரிய அளவில் மீட்சி திட்டங்களை அறிவிக்கலாம் என்ற புதிய எதிர்பார்ப்பு சந்தையை வார இறுதியில் சற்று நிமிர செய்துள்ளது. நாம் முன்னரே எதிர்பார்த்தது போலவே நிபிட்டி 5930 அளவில் ஒரு சிறப்பான அரணை அமைத்துக் கொண்டு வலுவாக மீண்டுள்ளது. <br /><br /> குறுகிய கால நோக்கில், நிபிட்டி 6130 எனும் இடைக்கால தடையை உடைத்தால், தீபாவளி உற்சாகம் மற்றும் அமெரிக்க புதிய திட்ட எதிர்பார்ப்புக்கள் நிபிட்டியை 6350 வரை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அதே சமயம் சிறிய மற்றும் இடை நிலை பங்குகளை வாங்கும் போது கவனம் அவசியம். ஏற்கனவே சொன்னபடி வர்த்தகர்கள் 5930 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட்டாக வைத்துக் கொள்ளலாம்.<br /><br />இப்போது தீபாவளிக்கு வருவோம்.<br /><br />எப்போதுமே தீபாவளிக்கு முந்தைய வாரம் ஒரு உற்சாகமான வாரம்.<br /><br />தேடி தேடி செய்யும் தீபாவளி பர்ச்சேஸ் நமது பர்சை காலி செய்தாலும், அது மனதை நிரப்பும் ஒரு டானிக். எனவே இந்த தீபாவளி வாரத்தை மகிழ்ச்சியோடு வரவேற்ப்போம்.<br /><br />இந்த தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாடும் அன்பு நண்பர்கள் கார்த்திக், மஞ்சள் ராஜன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.<br /><br />மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17352510985670791742010-10-17T18:31:00.007+05:302010-10-17T19:24:49.059+05:30மறு மதிப்பீடு அவசியம்!<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdQP3wybDUx6Wz6osi4hGNR2A1Q-_8-NerjVcLcI3e6VkFAQ71oggwlRIoby7zOswAxq2GZSrTtMd0ZcwD3HhMG9hs-07fl-zl1Br_aNELiL8b5u4YWTZ0Uax9o2yOYo7mM07TtWoep78/s1600/coal-india.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5529009346987874226" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 280px; CURSOR: hand; HEIGHT: 169px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdQP3wybDUx6Wz6osi4hGNR2A1Q-_8-NerjVcLcI3e6VkFAQ71oggwlRIoby7zOswAxq2GZSrTtMd0ZcwD3HhMG9hs-07fl-zl1Br_aNELiL8b5u4YWTZ0Uax9o2yOYo7mM07TtWoep78/s400/coal-india.jpg" border="0" /></a> கடந்த வெள்ளிக் கிழமை அன்று, இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கும் மேலே இருப்பதால் இன்போசிஸ் துவக்க்கத்திலேயே வெகுவாக உயரும் என்றும் இன்போசிஸ் பங்கு ஏற்றம் ஒட்டு மொத்த இந்திய சந்தையினையே மேலேடுத்துச் செல்லும் என்றும் சி என் பி சி தொலைக்காட்சியில் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பேசிக் கொண்டனர். அதிலும் ஒரு பங்குசந்தை விற்பன்னர் (?), அன்றைய தினம் உலக சந்தைகளுக்கே இந்தியா ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என்று மிகவும் நம்பிக்கையாக சொன்னார்.<br /><br />பங்கு சந்தை தொடர்புகள் குறைந்து போனதால் பங்கு சந்தையின் உடனடி ரியாக்ஷன் பற்றிய நேரடி-புரிதல் வாய்ப்புக்கள் எனக்கு குறைவாக இருந்த நிலையிலும் கூட, இவர்களின் பேச்சுக்கள் எனக்கு அபத்தமாகவே பட்டது. இன்போசிஸ் பங்கின் வருடாந்திர வருவாய் (EPS) சுமார் 110 ரூபாயாக இருக்கும் நிலையில் (அப்போதைய) பங்கின் விலை சற்று அதிகமாகவே தோன்றியது. அதிலும், இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அதன் தலைவரே கவலை தெரிவித்த நிலையில், பங்கு சந்தை வல்லுனர்களின் (?) கணிப்புக்கள் வழக்கம் போலவே தவறுதான் என்பதை அன்றைய பங்குசந்தை முடிவுகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்தன.<br /><br />இன்போசிஸ் நிறுவனம் என்னதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தாலும், விலை-வருவாய் விகிதம் (P/E Ratio) முப்பதுக்கு அருகே இருப்பது ஒரு வித நெருடலையே ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் மட்டுமல்ல ஒட்டு மொத்த சந்தையும் இப்போது அதிக விலை-வருவாய் விகிதத்திலேயே (கிட்டத்தட்ட 20௦) வர்த்தகமாகி வருகிறது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இந்திய பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதம் மற்றும் பணவீக்கம் எட்டு சதவீதம் என மொத்தத்தில் பதினாறு சதவீத வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையின் விலை வருவாய் விகிதம் இருபதுக்கு அருகே இருப்பது, இது மலிவு விலை மார்க்கெட் அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது.<br /><br />இந்திய பங்குசந்தை வரலாற்றின் மிகப்பெரிய வெளியீட்டான இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Ltd) கதையும் கிட்டத்தட்ட ஒன்றேதான். இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி விகிதம் பதினைந்து சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், பங்கின் விலை-வருவாய் விகிதம் 15 .4 ஆக நிர்ணயித்திருப்பது ஏமாற்றத்தையே வரவழைக்கிறது. பொதுவாக கனிம பொருட்களின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக இருப்பதால், கனிம நிறுவனங்களின் விலை-வருவாய் விகிதம் குறைவாகவே இருப்பது வழக்கம். "கோல் இந்தியா" நிறுவனம் அடிப்படையில் சிறப்பான ஒன்று என்பதால், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் என்றாலும், குறுகிய கால கண்ணோட்டத்தில், அரசின் விலை நிர்ணயம் மகிழ்ச்சியை தரவில்லை.<br /><div><br /></div><div>மொத்தத்தில் இந்திய பங்கு சந்தை இன்னும் ஏற்றத்தை காண வாய்ப்புக்கள் உண்டு என்றாலும், இது அறுவடை காலத்தின் ஆரம்பம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்திய தொழிற் வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்க புள்ளி விவரங்கள் சந்தைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், மந்தமான உலக பொருளாதார நிலை காரணமாக, இந்தியாவிற்குள் தொடரும் அந்நிய முதலீடுகள் நமது சந்தை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.<br /><br />குறுகிய கால நோக்கில், முந்தைய சந்தை எதிர்ப்பு நிலையான 5930 என்பது நல்ல அரணாக இருக்கும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த நிலையை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு 6400 என்ற இலக்கை நோக்கி வர்த்தகம் செய்யலாம்.<br /></div><div><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2QmeGtks13kDXbRh7TQkMEiNZxA3nt_1VwU6GIgayjy_wYoRghvoopWhtKCYpmctz1NIr0ooyLsQqd2085zACxjmpBpj0sBIQ9-2DVNk2fhADk9dZlTIu3_R8wzUrv4kmcPbWdwf0xso/s1600/16.10.2010.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5529010970006477810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 298px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2QmeGtks13kDXbRh7TQkMEiNZxA3nt_1VwU6GIgayjy_wYoRghvoopWhtKCYpmctz1NIr0ooyLsQqd2085zACxjmpBpj0sBIQ9-2DVNk2fhADk9dZlTIu3_R8wzUrv4kmcPbWdwf0xso/s400/16.10.2010.bmp" border="0" /></a></div><div>நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பங்கினையும் தனித்தனியாக மறு மதிப்பீடு செய்து கொள்வது நல்லது. </div><div><div><br />வரும் வாரம் சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்! </div><div></div><br /><div>மேலும் அனைவருக்கும் தசரா , ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ! </div><div></div><br /><div>நன்றி! </div></div>Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-62091433884566842172010-10-11T22:04:00.002+05:302010-10-11T22:10:40.915+05:30இது ஒரு அறுவடைக் காலம்!பங்குசந்தையில் தீபாவளி முன்கூட்டியே ஆரம்பித்து விட்டது. அதிரடியான அந்நிய முதலீடுகளும் இந்திய பொருளாதாரத்தின் வெகு வேகமான மீட்சியும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். விதை முளையாகி, விருட்சமாக வளர்ந்திருப்பது சரியான சமயத்தில் விதைத்தவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தரும்.<br /><br />அதே சமயத்தில் சரியான சமயத்தில் அறுவடை செய்ய வில்லை என்றால் உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விடும் அல்லவா?<br /><br />ஒரு முதலீடு எவ்வளவு முக்கியமோ, சரியான தருணத்தில் லாப விற்பனை செய்வதும் அவ்வளவு முக்கியமானது. எனவே நண்பர்களே, உங்களிடம் உள்ள முதலீடுகளை ஓரளவிற்கு விற்று விடுங்கள்! எந்த எந்த பங்கை எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.<br /><br />நெல் கோதுமை போன்ற ஒரு சில ஆயுள் குறைந்த பயிர்கள் முழுமையாக அறுவடை செய்யப் படுகின்றன. காய்கறி, காப்பி போன்ற செடிகளின் உற்பத்திப் பொருட்கள் மாத்திரம் அறுவடை செய்யப் படுகின்றன. அதே சமயம் தென்னை, மாங்கனி போன்றவை விருட்சமாக வளரும் வரை பொறுத்திருக்கிறோம்.<br /><br />இந்த பதிவு வலையிலேயே பரிந்துரைக்கப் பட்ட மைத்தாஸ் போன்ற பங்குகள் முதல் வகையை சேர்ந்தவை. முழுமையாக விற்று லாபம் பார்க்கலாம். அதே போல இன்னொரு பதிவில் பரிந்துரைக்கப் பட்ட எஸ் பேங்க் போன்ற பங்குகள் இரண்டாம் மூன்றாம் வகையை சேர்ந்தவை. பகுதியை விற்று விட்டு சற்று விலைகுறையும் வரை பொறுமையாக இருக்கலாம்.<br /><br />மொத்தத்தில் இந்த அறுவடைக் காலத்தை திறமையாக உபயோகிப்பவர்கள் அடுத்த பருவத்தில் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெறலாம்.<br /><br />மீண்டும் சந்திப்போம்.<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-28022727213508263542010-10-10T10:37:00.003+05:302010-10-10T10:41:06.516+05:30அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!என்னைப் போன்ற அனைத்திந்திய பணியில் உள்ள வங்கி அதிகாரிகளின் வாழ்க்கை முறை ஒரு பணி மாறுதல் உத்தரவில் தலைகீழாக மாறிப் போய் விடுகிறது. அதுவும் பணி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் என்றால் கேட்கவே வேண்டாம். கிராமப் புற/ சிறு நகர சேவைகள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற அரசின் கொள்கையின் படி, கர்நாடக மாநிலத்தின் வட பகுதியில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு நான் இப்போது மாறுதலாகி உள்ளேன். இதுவரை பெரிய நகரங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த நான், அதுவும் பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் பல வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு இங்கே முற்றிலும் புதிய அனுபவங்கள்.<br /><br />குடி நீர், சாலை வசதி, மின்சாரம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற வாழ்வியல் ஆதார வசதிகள் மிகவும் குறைந்த இது போன்ற பகுதிகள் இந்தியாவின் மறுபக்கமா அல்லது இதுதான் இந்தியாவின் உண்மையான பக்கமா என்ற கேள்வி என்னுள்ளே இப்போது எழுகின்றது.<br /><br />அதே சமயம் இந்தியாவின் இந்த பக்கத்தை (அல்லது உண்மையான பக்கத்தை) அறிந்து கொள்ள /புரிந்து கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த பணிக்காலத்தைக் கருதுகின்றேன். எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.<br /><br />பங்கு சந்தை மற்றும் பொருளாதார பதிவுகளையும் தொடரவும் முயற்சி செய்வேன்.<br /><br />மீண்டும் சந்திப்போம்.<br /><br />நன்றி!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com19