Skip to main content

இந்தியாவிற்கு வயது இப்போ 61!

நேற்றைய பதிவின், பின் குறிப்பில் சொல்லியிருந்த கருத்து கீழே:

21 வயதில் சோசலிசம் பேசாதவனுக்கு இதயம் இல்லை.

50 வயதில் காபிடலிசம் பேசாதவனுக்கு மூளை இல்லை.

இதை எனக்கு நேற்று சொன்ன எனது மரியாதைக்குரிய நண்பர், இன்று மேற்சொன்ன வழக்கு மொழிக்கு புதிய விளக்கம் கூறினார்.

எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் கூட பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது 1947 இல்.

தனது இளமை வயதில் இதே நாடு (1980 கள் வரை), சோசலிசம் பேசியது. 29 ஆவது வயதில் (1976), இந்திய அரசியல் சட்ட முன்னுரையில் (Preamble) "SOCIALIST" என்ற வார்த்தை சேர்க்கப் பட்டது.

(ஆதாரம்:Introduction to the Constitution of India, by Durga Das Basu, பக்கம் 26, 42 ஆவது அரசியல் சட்ட திருத்தம், 1976)

சுதந்திர இந்தியாவிற்கு வயது இப்போ 61.

நமது நாடு 43 வயதிலிருந்து காபிடலிசம் பேசுகிறது (1990 களில் இந்திய பொருளாதாரம் மேற்கத்திய பாணியை பின் பற்ற ஆரம்பித்தது.)

நன்றி. வணக்கம்.

Comments

Naresh Kumar said…
என்னா அண்ணாச்சி,

பொருளாதாரத்தையே புட்டு புட்டு வெச்சீங்க, அடிப்படையில தப்பு பண்றீங்க!

1947 ல சுதந்திரம்னா, 1976 வர்றப்ப 29 வயசுல்ல, அதே மாதிரி இப்ப இந்தியா வயசு 61 தானே!

இல்லா நீங்க வேற எதாவது சொல்ல வர்றீஙகளா?
அருமையான உதாரணம்
Subash said…
நல்ல பதிவுகள் நண்பரே.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Anonymous said…
அன்புள்ள நரேஷ்!

என் நண்பருடன் 50 வருடம் என்பதை பற்றியே பேசி கொண்டிருந்ததால், சற்று எண்ணிக்கை குழப்பம் ஏற்பட்டு விட்டது.

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.

பதிவு சரி செய்யப் பட்டு விட்டது.

வணக்கம்.

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...