வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...
கொஞ்சம் மாத்தி யோசி!

Comments
நன்றி பெரியண்ணன்!
நன்றி சிவா!
மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!
நன்றி!
உலக சந்தைகளின் இறக்கத்திற்கு அமெரிக்காவின் கடன் கொள்கை ஏற்பட்ட இழுபறியும் முக்கிய காரணம் தானே? +
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.
//மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!//
மிக்கநன்றி.
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.//
நீங்கள் சொல்வது சரிதான் தாமஸ் ரூபன்!
நன்றி!