Skip to main content

மென்பொருள் நிறுவனங்களின் இப்போதைய நிலை - ஒரு நீதிக் கதை.

ஒரு மாவட்டத்தில் அடிக்கடி திருட்டுப் போய் கொண்டிருந்தது. அந்த மாவட்டத்தில் குறைந்த அளவு போலீசார் இருந்ததால், போலீஸ் தலைவர், மாவட்டத்திலுள்ள ஊர் தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அந்தந்த ஊரில் உள்ளூர் ஊர்காவல் படையை அமைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அந்த ஊர் பஞ்சாயத்தார் ஊர் காவலர்களாக ஐந்து பேரை நியமித்தனர். சில நாள் கழிந்தது.

நிர்வாக மேலாண்மை படித்த ஒரு புத்திசாலியின் யோசனையின் படி காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் காவல் காக்க வேண்டும் என்று அறிவுரை செய்வதற்காக ஒரு திட்டப் பிரிவு (Planning Department) அமைக்கப் பட்டது. அந்த குழுவில் பணி செய்வதற்காக இரண்டு பேர் (Developers) அமர்த்தப் பட்டனர். மேலும் சில நாள் கழிந்தது. இந்த காவலாளிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்றும் சரியான நேரத்தில் பணியை முடிக்கிறார்களா என்று கவனிப்பதற்காக ஒரு டைம் கீப்பர் பணியமர்த்தப் பட்டார்.

உள்ளூர் காவலர்களுக்கு காவல் பணியில் பயிற்சி அளிக்க ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் (Domain Expert) நியமிக்கப் பட்டார். பின்னர், இவர்களின் பணிகளைப் பற்றி உள்ளூர் தலைகளுக்கும் மாவட்ட போலீசுக்கும் தகவல் தெரிவிக்க ஒரு ரிலேசன்ஷிப் மேனேஜர் நியமிக்கப் பட்டார்.

இவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் தரவேண்டுமே? எனவே ஒரு சம்பள குமாஸ்தா, கணக்குகளை சரிபார்க்க ஒரு தணிக்கையாளர், அலுவலகத்தை மேற்பார்வை இட ஒரு உதவி நிர்வாக அலுவலர் இவர்கள் எல்லாரையும் மேய்க்க ஒரு ப்ராஜெக்ட் ஹெட் ஆகியோரும் நியமிக்கப் பட்டனர்.

இப்படியே கொஞ்ச நாள் போனது. எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து பஞ்சாயத்திற்கு கட்டுப் படியாக வில்லை. செலவுகளை கட்டுப் படுத்த பக்கத்திலிருக்கும் ஒரு கன்சல்டன்சியின் உதவி கோரப் பட்டது. அவர்கள் "ஊரைக் காவல் காக்கும் இந்த ப்ரொஜெக்ட்டை" ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அளித்தனர். அதன் படி ஊரைக் காவல் காக்க முதன் முதலாக நியமிக்கப் பட்ட ஐந்து ஊர்காவலர்களும் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

இந்த கதையின் நீதி - விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த கதை கடந்த சில வருடங்களில் வெகுவாக ஆட்களை வேலைக்குச் சேர்த்து இப்போது அதே வேகத்தில் நீக்கும் (கிட்டத் தட்ட) அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Comments

இதைவிட புரியறாப்புல வேற எப்படியும் சொல்ல முடியாது. சூப்பர்
Maximum India said…
அன்புள்ள நந்து f/o நிலா

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
எனக்கு ஒண்ணு மட்டும் புரியல
ஒருவர் வேலை செய்கிறாரா என்று கவனிக்க இன்னொருவர், அவரை கவனிக்க மற்றொருவர். இந்த உலகில் நேர்மை என்ற வார்த்தை அர்த்தம் தொலைத்து விட்டதா?
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி

//எனக்கு ஒண்ணு மட்டும் புரியல
ஒருவர் வேலை செய்கிறாரா என்று கவனிக்க இன்னொருவர், அவரை கவனிக்க மற்றொருவர். இந்த உலகில் நேர்மை என்ற வார்த்தை அர்த்தம் தொலைத்து விட்டதா?//

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் வணிக நிறுவனங்கள் அடித்த கூத்து சொல்லி மாளாது. ஒரு கிரிக்கெட் மாட்ச்சை ஒரு நடிகை பார்க்க வேண்டுமென்பதற்காக, ஒரு கம்பெனி (அந்த கம்பெனி தலைவர்) தனி விமானம் அனுப்பி அவரை வரவழைத்தது. இந்த பணம் யாரோடது? அப்பாவி பங்குதாரர்களின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டதும் இப்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.

நன்றி
Maximum India said…
Dear Observer

It will be done
Maximum India said…
Dear Siva

Thanks for the compliments :)

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...