Skip to main content

ரூபாய் நிலவரம்!

பொதுவாகவே பங்கு சந்தைகளை பற்றி விவாதிக்கவும், பங்குகளை பற்றிய தகவல்களை பரிமாறவும் ஏராளமான வலைதளங்கள் உள்ளன. அதே சமயத்தில், ரூபாய் வர்த்தகத்தைப் பற்றி அதிக வலைதளங்கள் இருப்பதாக தெரிய வில்லை. வர்த்தக தொலைக்காட்சிகளில் கூட ரூபாய் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை.

உண்மையில் ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் பாமரர் முதல் பங்கு சந்தை வரை பலரையும் அதிக அளவில் பாதிக்கின்றன. உதாரணமாக ரூபாய் தன மதிப்பை இழக்கும் பட்சத்தில் பங்கு சந்தையை உச்சிக்கு கொண்டு செல்லும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். அதே போல நலிந்த ரூபாய் இறக்குமதி செலவினத்தை அதிகப் படுத்தி பணவீக்கத்திற்கு வழி வகுத்து விடும்.

அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றியும் ரூபாய் வர்த்தகத்தின் செயல்பாடு பற்றியும் விவாதிப்பதற்காக ஒரு புதிய பதிவு பூவை உருவாக்கியுள்ளேன்.

http://dailyrupee.blogspot.com/

அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.

நன்றி

Comments

//அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.//

ஹி..ஹி.. ஆமாம் சார், எனக்கு இரண்டிலும் தொடர்பிருக்கிறது.
Maximum India said…
நன்றி பீர்!

//ஹி..ஹி.. ஆமாம் சார், எனக்கு இரண்டிலும் தொடர்பிருக்கிறது.//

அப்படியென்றால் உங்களுக்கு இனிமேல் ரூபாய் நிலவரத்திலும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்று சொல்லுங்கள். :-)
Thomas Ruban said…
//அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.//

உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.எங்களுடைய
ஆதரவு என்றும் உண்டு.

நன்றி..நன்றி..
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
முடிந்த அளவு தமிழிலும்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//முடிந்த அளவு தமிழிலும்!//

நிச்சயமாக.

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...