பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன. வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது. இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும். வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள். ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய...
Comments
thanks
//மெயிலில் வந்தது தான்!//
அட! எனக்குக் கூட மெயிலில்தான் வந்தது!
:-)
நன்றி வடுவூர் குமார்!
அப்ப நம்ம வடிவேலு சொன்னது பலிச்சுடுசசுன்னு சொல்லுங்க!
:-)
தேங்க்ஸ்
//
நன்றி ஹாண்ட்சம்! சீனாவில் நடைபெறும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கும் இதே கதிதான் வருமோ?
:-)
அநேகமா இங்க விழுந்த வோட்டுக்கள் வடிவேலுவோட போசுக்காக இருக்குமோ?
இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு பரிகாரமா என்னோட சார்பா உங்களுக்கு ஒரு வோட்டு போட்டுட்டேன். இதுக்கு மேலே நான் வோட்டுபோடணும்னா அரசியல்வாதியாத்தான் இருக்கணும்.
:-)
பத்மநாபன்! நிறைய பதிவுகள் போடுங்க! உங்களுக்கு நான் வோட்டு போடறேன்,
நன்றி!
நன்றி பூனா சானா சார்! நீங்களும் அப்பப்ப இந்த பக்கம் வந்து போயிட்டே இருங்க!
:-)
ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html
நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.
It's ok padmanaban! Cheer up!
With best regards
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.ஹ்த்ம்ல்//
என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.
//நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.//
நிச்சயமாக! அதற்கு முன்பு பலரது பதிவுகளையும் குறிப்பாக அதிகம் பிரபலம் ஆகாத பதிவர்களின் பதிவுகளை படிக்க விரும்புகிறேன். ஏனென்றால் புதியவர்களுக்கு இத்தகைய விருதுகள் அதிக ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
நன்றி.