Skip to main content

நீதிக்கு தலை வணங்குவோம்!

இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இரண்டு முக்கிய தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை.

பல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

மற்றொரு தீர்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு.

"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேன். (இது பற்றிய எனது பழைய பதிவு)

மேலும் என்னைப் பொறுத்த வரை, சட்டப் படி ரிலையன்ஸ் நிறுவனம் என்பது ஒரு பொது நிறுவனம்தான் (Public Limited Company). ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலான குடும்ப ஒப்பந்தத்தில், பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த வரை பொது நிறுவனங்களிலும் கூட தனி நபர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் முகேஷ் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப் படின் அது ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
//சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.//
கண்டிப்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம் சார்.
//
"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேம்//

மூன்று நீதிபதிகளின் கருத்தும் ஒரேமாதிரி இருந்திருந்தால்(2:1) இன்னமும் சிறப்பாக இருந்துறுக்கும்.
//பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//
அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.

பதிவுக்கு நன்றி சார்.
MCX Gold Silver said…
வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.//

கண்டிப்பாக. ஒரு பொது நிறுவனத்தின் சொத்துக்களை தனது சொந்த சொத்துக்களைப் போல அனுபவிக்கும் மனப்பாங்கு தவிர்க்கப் பட வேண்டியது. இல்லையென்றால் தடை செய்யப் பட வேண்டியது என்று நினைக்கிறேன்.
Maximum India said…
நன்றி DG!

//வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி//
கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன் நண்பரே!

நன்றி!
கசாபை கசாப்பு கடைக்கு அனுப்பும் தீர்ப்பு . மொத்த மக்களின் உணர்வின் வெளிப்பாடு. ஓம்பலே சுட்டு கசாப் இறந்திருந்தால் சுலபமாக பாகிஸ்தான் பெயர் காப்பாற்ற பட்டிருக்கும். மக்களை நாயை விட கேவலமாக கொன்றவர்களை பற்றியும் அவர்களின் மூலம் பற்றியும் தெரிந்து சட்ட ரீதியாக விசாரணை மேற்கொண்டு தண்டனை அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தவகையில் ஓம்பலேக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்து துணிச்சலாகவும் திறமையாகவும் வாதாடிய வழக்கறிஞர் மற்றும் மிக முக்கிய வழக்கை பாரபட்சமின்றி விசாரித்த நீதிபதி. கண் முன்னே பலரை கொன்றவனுக்கும் வாதாட ஒரு வழக்கறிஞரை அனுமதித்த நம் சட்டம் . கசாப் குறி தவறாமல் எய்யப்பட்ட சக்தி வாய்ந்த அம்பு மட்டுமே. எய்தவர்கள் கர்ம சிரத்தையாக அடுத்த தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொண்டு இருக்கலாம். மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்..( ஆண்டவா! கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//( ஆண்டவா! கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)//

கண்டிப்பாக. நக்சல் பிரச்சினையில் கூட பல அரசியல்வாதிகள் இரட்டை வேடம்தான் போடுகின்றனர்.

நன்றி!

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...