Skip to main content

Posts

Showing posts from May, 2011

தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்!

காசுக்கும் இலவசத்துக்கும் தமிtழக வாக்காளர்கள் விலை போவார்கள் என்ற பரவலான ஊடக கணிப்புக்களுக்கு முற்று புள்ளி வைத்து, தமது கண்ணியத்துக்கு முக்கியத்துவம் குடுத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜாதி கணக்குகளையும் கூட்டணி கணக்குகளையும் மனதில் நிறுத்தி தேர்தலை சந்தித்தவர்களின் கணக்குகளை முடித்து வைத்ததற்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்! குடும்ப ஆட்சியை முடித்து வைத்ததற்கும் குறுநில மன்னர்களை வீட்டிற்கு அனுப்பியதற்கும் மீண்டுமொரு வாழ்த்துக்கள்! ஒரு தேர்தலுக்கு ஒரு கூட்டணி என ஜாதி பெயரை சொல்லி வோட்டு கேட்டவர்களுக்கும், தமிழீழ பிரச்சனையில் பஞ்சோந்தியாக நாட்கமாடியவர்களையும் சரியாக இனம் கண்டதற்கும் நல்வாழ்த்துக்கள்! அறுபது சீட்டு கேட்டு அடம் பிடித்தவர்களை ஐந்து சீட்டுடன் அடக்கி வைத்ததற்கும் வாழ்த்துக்கள்! கவர்ச்சியும் காமெடியும் திரையில் (சில சமயங்களில் நேரில்) ரசிப்பதற்கு மட்டுமே. திரை மயக்கம் தேர்தலில் செல்லாது என்று மீண்டுமொரு முறை நிருபித்ததற்கும் வாழ்த்துக்கள்! பண பலம், அதிகார பலம், ரௌடி பலம் அனைத்தையும் அடக்கி அஞ்சா நெஞ்சர்களை அஞ்சா நோஞ்சான்களாக ஆக்கிய தேர்தல்...

ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!

உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது. இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது. பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப்...