Skip to main content

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன்.

அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார்.

இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் பார்த்த போது, அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.

இவர்களும் இந்தியர்கள்தானே?

இந்தியாவின் இன்னொரு பக்கம் உள்ள இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் "ஒளிரும் இந்தியா" இவர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது?

நன்றி!

Comments

வணக்கம்! அதன் பிறகு அவர் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதா இல்லையா என்பதனையும் தெரிவித்து இருந்தால் இவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
Thomas Ruban said…
இந்தியாவில் இதேபோல் பல அவலங்கள் இருக்கிறது பெருமூச்சு விடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

வலை பக்கத்தில் நீண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைத்தேன்.
பகிர்வுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி இளங்கோ!

எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் நான். அந்த பெண்மணியின் தாயாரின் பெயரை நிரப்பிய பிறகு அவரது கணக்கை துவக்க அனுமதித்தேன்.

நன்றி!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

இந்தியாவின் இன்னொரு பக்கத்தை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவற்றை பதிய எனக்கு விருப்பம்தான் என்றாலும், இந்த பகுதியில் இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால், வலை பக்கம் அடிக்கடி வர இயல வில்லை..

நன்றி!
என்ன கொடுமை.

:(
// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//

we miss you lot.
KARTHIK said…
வேதனையான உண்மைணா :-(((


// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//

we miss you lot.

ஆமாம்....
Maximum India said…
நன்றி வால்பையன்!

//we miss you lot.//

நான் கூட!
Maximum India said…
நன்றி கார்த்திக்!
நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள உங்கள் ஒரு நிறைவான பதிவை வரவேற்கின்றேன்.
இன்டர்நெட் தரமும், வாழ்க்கை தரமும் இன்னமும் உயராத பகுதிகளைக் இந்த இந்தியாவிற்கு நாளை குடியரசு தினம். வாழ்க மக்களாட்சி.
//எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் நான்.//

சட்டங்கள் மக்களுக்காக இயற்றப்பட்டவை. அவை நடைமுறைகள் என்ற பெயரில் மக்களின் நியாயமான செயல்பாட்டுக்கு தடை விதித்து விடக் கூடாது. சூழலுக்கேற்ற தங்கள் முடிவு உடன் பாராட்டுதலுக்கு உரியது.
//அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.//

வேதனை..
Naresh Kumar said…
நல்ல பதிவு! சமூகத்தில் இன்னும் இந்தப் பழக்கங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...