பந்தயக் குதிரை போல நமது பங்கு சந்தை இப்போது படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு இந்த ஓட்டம் இருக்கும்? இந்த பந்தயக் குதிரை மீது நாமும் "பந்தயம்" கட்டலாமா? இங்கு சற்று விவாதிப்போம். கடந்த இரண்டு மாதங்களில் நமது பங்கு சந்தை வரலாறு காணாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. (இந்திய பங்கு சந்தை மட்டுமல்ல, வேறு பல பங்கு மற்றும் கச்சா எண்ணெய், உலோக சந்தை போன்றவையும் இதே கால கட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.) இந்த முன்னேற்றத்திற்கு கூறப் படும் முக்கிய காரணங்கள். அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சில நம்பிக்கை (?) தரும் மாற்றங்கள். கூச்சப் படாமல், டாலர் நோட்டுக்களாக அச்சடித்துத் தள்ளும் அமெரிக்க அரசு. அந்த பணத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மற்றும் பொருட் சந்தைகளில் அதிக ரிஸ்க் (?) எடுத்து முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். இந்தியாவில் கூட்டணி கட்சிகளின் தலையீடு இல்லாமல் நிலையான ஒரு மத்திய அரசு அமைந்திருப்பது. இந்த முறை கம்யூனிஸ்ட் தொந்தரவு (?) இல்லாததால் மன்மோகன் சிங் பல பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் ...
கொஞ்சம் மாத்தி யோசி!