Skip to main content

Posts

Showing posts from May, 2009

"பந்தயம்" கட்டும் பங்கு சந்தை!

பந்தயக் குதிரை போல நமது பங்கு சந்தை இப்போது படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு இந்த ஓட்டம் இருக்கும்? இந்த பந்தயக் குதிரை மீது நாமும் "பந்தயம்" கட்டலாமா? இங்கு சற்று விவாதிப்போம். கடந்த இரண்டு மாதங்களில் நமது பங்கு சந்தை வரலாறு காணாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. (இந்திய பங்கு சந்தை மட்டுமல்ல, வேறு பல பங்கு மற்றும் கச்சா எண்ணெய், உலோக சந்தை போன்றவையும் இதே கால கட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.) இந்த முன்னேற்றத்திற்கு கூறப் படும் முக்கிய காரணங்கள். அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சில நம்பிக்கை (?) தரும் மாற்றங்கள். கூச்சப் படாமல், டாலர் நோட்டுக்களாக அச்சடித்துத் தள்ளும் அமெரிக்க அரசு. அந்த பணத்தை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மற்றும் பொருட் சந்தைகளில் அதிக ரிஸ்க் (?) எடுத்து முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். இந்தியாவில் கூட்டணி கட்சிகளின் தலையீடு இல்லாமல் நிலையான ஒரு மத்திய அரசு அமைந்திருப்பது. இந்த முறை கம்யூனிஸ்ட் தொந்தரவு (?) இல்லாததால் மன்மோகன் சிங் பல பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் ...

படைத்தவர்களை விஞ்சும் பாத்திரங்கள்!

கல்கி அவர்களின் பிரபல சரித்திர நாவலான "பொன்னியின் செல்வனை" பலரும் படித்திருப்பீர்கள். அந்த நாவல் சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் இளமைக் கால சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டது. எல்லாவகையிலும் சோழ சாம்ராஜ்யத்தின் அரசு பதவிக்கு தகுதியானவனாகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவனாகவும் இருந்த போதும் தனக்கு வந்த அரியணை வாய்ப்பை தனது சித்தப்பனுக்கு விட்டுக் கொடுத்த மேலான குணத்தை விளக்குவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு, ராஜராஜ சோழனின் பல பெயர்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலேயே, அந்த நாவல் எழுதப் பட்டது. நாவலின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக மட்டுமே, கோமாளித்தனமும் குறும்பும் நிறைந்த ஒரு இளம் வீரனாக வந்தியத் தேவன் கதாபாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பின்னர் கதை போகும் போக்கில் நாவலின் ஆசிரியரே ஒரு கட்டத்தில், "நமது கதையின் நாயகனாகிய வந்தியத் தேவன்" என்று சொல்லும் அளவுக்கு அந்த பாத்திரம் வெற்றி பெற்று விடுகிறது. மேலும் இன்றளவும் அந்த கேரக்டர் நம் மனதில் அழியாமல் நிலை கொண்டுள்ளது. சமீபத்தில் வெளி வந்து சக்கைப் போடு போட்ட பைரேட்ஸ் ஆப் கரீபியன் என்ற தொடர் சினிமா...

பாதிக் கிணறு தாண்டியாச்சு! மீதிக் கிணறு?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் நம் மக்கள் அளித்த உறுதியான தீர்ப்பு மற்றும் பொருளாதார சீர்த்திருந்தங்களின் தந்தையாக கருதப் படும் மன்மோகன் சிங் அவர்கள் மீது பங்கு சந்தை வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவை கடந்த வாரம் சரித்திரம் காணாத அளவு முன்னேற்றத்தை பங்குகளுக்கு தந்தன. இந்த முன்னேற்றம் நீடிக்குமா? அல்லது "இதெல்லாம் கொஞ்சம் ஓவர்" கதையா? சற்று சிந்திப்போம். நாட்டின் முன்னேற்றத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்போதுமே ஒரு பெரிய வித்தியாசம் இருந்து வந்துள்ளது. அதாவது சீனாவில் இருப்பது போல இந்தியாவில் (சமீப காலத்தில்) ஒரு நிலையான உறுதியான மத்திய அரசு இருந்ததில்லை. சீனா தனது இரும்புக் கரங்களின் உதவியுடன் வெகு வேகமான கடினமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, உள்ளூர் கூட்டணி சிக்கல்களால் இந்திய அரசு ஒரு சிறிய சீர்திருத்தம் செய்யக் கூட தடுமாறியே வந்துள்ளது. இதை நாமே கூடே இதே பதிவு வலையில் பல முறை விவாதித்துள்ளோம். இப்போது அந்தக் குறை ஓரளவு (ஓரளவு மட்டுமே) தீர்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஒரு வலுவான நிலையை அடை...

எடை குறைய வேண்டுமா?

உடற்பயிற்சி செய்யாமல், சாப்பாடு அளவை குறைக்காமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடாமல், சிறப்பு வைத்தியம் என்று காசைக் கரைக்காமலேயே மிகப் பெரிய அளவில் எடையை குறைக்க ஒரு அருமையான யோசனை இங்கே! மேலே உள்ள படி தலைகீழாக எடை பாருங்கள் போதும். எடை கன்னாபின்னாவென்று குறைந்து காணப் படும். இந்த யோசனை இத்தனை நாளாக தெரியாமல் போயிற்றே என்கிறீர்களா? நன்றி!

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!

இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம். தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்த...

வாதாடாமல் வழக்கை முடித்தவர்! போரிடாமல் வென்றவர்!

சாலை சந்திப்பு ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்த போது கவனித்த நிகழ்வு இது. டாக்ஸி ஒன்று எந்த ஒரு சைகையும் காட்டாமல் ஒரு சாலைக்குள் முரட்டுத்தனமாக வளைந்து நுழைந்த போது, பின்னே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென்று குறுக்கே வந்த டாக்ஸியால் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்து விட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்ற பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறி விழுந்தன. நல்ல வேளையாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் பட வில்லை. சைகை அல்லது இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு சாலையில் திரும்பி இருக்கலாம் அல்லவா என்று மோட்டார் சைக்கிள் மனிதர் கேட்க, வண்டியை விட்டு வெளியில் வந்த டாக்ஸி டிரைவர் (தவறு அவர் மீதே இருந்த போதும்) சத்தம் போட ஆரம்பித்தார். ஒழுங்காக முன்னே பார்த்து வண்டியை ஒட்டி வர வேண்டியதுதானே என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீதே குற்றத்தை சுமத்தினார். இத்தனைக்கும் அவர் வண்டியில் (டாக்ஸி) எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குற்ற மனப்பான்மையை மறைக்கவே அப்படி சத்தம் போடுகிறார் என்று உணர முடிந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் நண்பரின் நடவடிக்கை என்னை கவர்ந்தது. அமைதியாக சென்று கீழே விழுந்த பொருட்களை சேகரித்தார். எந...

நெருக்கடி = வாய்ப்பு?

ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது. சில சந்தர்ப்பங்களில், பிரச்சினையின் வீச்சு அவனை நிலைகுலைய செய்யும் அளவுக்குக் கூட அமைந்து விடுகிறது. அந்த சந்தர்ப்பங்களில் அவனுக்கு இரண்டு சாய்ஸ் உண்டு. ஒன்று, தோல்வி மனப்பான்மை. வருத்தமடைவது, புலம்பித் தீர்ப்பது, மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவது மற்றும் சுய பச்சாதாபம் கொள்வது. அடுத்தது, வெற்றி மனப்பான்மை. எங்கே தவறு நடந்தது என்று ஆராய்ச்சி செய்வது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்வது என்று யோசிப்பது மற்றும் இந்த சோதனையை எப்படி வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது பற்றி சிந்திப்பது. பொதுவாக இரண்டாவது சாய்ஸ் கடினமான ஒன்று என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால் உண்மையில் அதுதான் எளிமையான சாய்ஸ்தான் என்பதை சரித்திரம் சொல்கிறது. எந்த ஒரு கடினமான தருணமும் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. ஒவ்வொரு இருளுக்குப் பின்னர் ஒளி மறைந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுக்குப் பின்னரும் பகல் காத்திருக்கிறது. எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையை தளர விடாமல் இருப்பது, அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிப்பது மற்றும் அந்த இ...