Skip to main content

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!

இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம்.

தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான்.

அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?

நன்றி.

Comments

test said…
நீங்களே ஐடியா குடுத்தா எப்படி ?
Unknown said…
நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

(அது சரி, “கஜுராஹோ” கோவிலுக்கு என்ன விலை? அரசுவையோ, மதனையோ கேட்க வேண்டிய கேள்வியோ?
http://www.sathyamurthy.com
"இழைத்து இழைத்து கட்டிய தாஜ் மஹால் ஒரு ரூபாய் . அரிசி ஒரு ருபாய். டெலிபோன் ஒரு ரூபாய் . ஒட்டு ஆயிரம் ரூபாய்.! " எங்கள ஒன்னும் அசய்க்க முடியாது மாப்ளே
Maximum India said…
நன்றி பௌலொஸ் ராஜா!

//நீங்களே ஐடியா குடுத்தா எப்படி ?//

நான் ரொம்ப லேட்! நமது அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களெல்லாம் இந்த விஷயத்தில் ரொம்ப பாஸ்ட். இப்பவே, எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்கும்.

நன்றி.
Maximum India said…
நன்றி சாம

//நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

முல்லா கதை ஒன்று! நீங்கள் கூட படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குதிரை விலை ஒரு ரூபாய்! ஆனால், கூட உள்ள ஒரு பூனையின் விலை ஆயிரம் ரூபாய். இரண்டையும் ஒன்றாகத்தான் வாங்க வேண்டும் என்பது முல்லாவின் நிபந்தனை.

இப்படித்தான் அரசு சொத்துக்களின் விலையும்! மாமல்லபுரம் ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் அதனை வாங்க பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கு மாமல்லபுறம் விற்க அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள்.

நன்றி
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//"இழைத்து இழைத்து கட்டிய தாஜ் மஹால் ஒரு ரூபாய் . அரிசி ஒரு ருபாய். டெலிபோன் ஒரு ரூபாய் . ஒட்டு ஆயிரம் ரூபாய்.! " எங்கள ஒன்னும் அசய்க்க முடியாது மாப்ளே//

தாஜ் மகால வச்சு என்ன பண்ண? வேடிக்கைதான் பார்க்க முடியும். டெலிபோன்? பேசத்தான் முடியும். அரிசியை வைத்து பொங்கி திங்கத்தான் முடியும். ஆனால் ஒட்டு அப்படியா? இவ்வளவு குறைஞ்ச முதல் போட்டு கொள்ளை லாபம் அடிக்க முடியற தொழில் வேறு ஏதாவது உண்டான்னு சொல்லுங்க மச்சி!
KARTHIK said…
நீங்களும் இந்தியா கேட்ட வாங்கிப்போடலாம்.

// நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

:-))
மெரினா கடற்கரை அவ்வளவு கூட வராதுன்னு நினைக்கிறேன்!

ப்ளாட் போட்டு வித்துறலாமா?
Maximum India said…
நன்றி வால்பையன்!
Naresh Kumar said…
//மெரினா கடற்கரை அவ்வளவு கூட வராதுன்னு நினைக்கிறேன்!//

மெரீனா மாதிரி காதல் பேசும் இட்த்தை நான் பார்த்ததே இல்லை!!! காதல் பண்ணா, பக்கத்துலியே பாரு சமாதி, அந்த கதிதான் உனக்குன்னு சிம்பாலிக்கா சொல்லியிருப்பாங்க:))))

நரேஷ்
www.nareshin.wordpress.com
Maximum India said…
அன்புள்ள நரேஷ்!

நல்லாவே யோசிக்கிறீங்க.

:-)

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...