Skip to main content

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!

இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம்.

தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான்.

அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?

நன்றி.

Comments

test said…
நீங்களே ஐடியா குடுத்தா எப்படி ?
Unknown said…
நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

(அது சரி, “கஜுராஹோ” கோவிலுக்கு என்ன விலை? அரசுவையோ, மதனையோ கேட்க வேண்டிய கேள்வியோ?
http://www.sathyamurthy.com
"இழைத்து இழைத்து கட்டிய தாஜ் மஹால் ஒரு ரூபாய் . அரிசி ஒரு ருபாய். டெலிபோன் ஒரு ரூபாய் . ஒட்டு ஆயிரம் ரூபாய்.! " எங்கள ஒன்னும் அசய்க்க முடியாது மாப்ளே
Maximum India said…
நன்றி பௌலொஸ் ராஜா!

//நீங்களே ஐடியா குடுத்தா எப்படி ?//

நான் ரொம்ப லேட்! நமது அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களெல்லாம் இந்த விஷயத்தில் ரொம்ப பாஸ்ட். இப்பவே, எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்கும்.

நன்றி.
Maximum India said…
நன்றி சாம

//நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

முல்லா கதை ஒன்று! நீங்கள் கூட படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குதிரை விலை ஒரு ரூபாய்! ஆனால், கூட உள்ள ஒரு பூனையின் விலை ஆயிரம் ரூபாய். இரண்டையும் ஒன்றாகத்தான் வாங்க வேண்டும் என்பது முல்லாவின் நிபந்தனை.

இப்படித்தான் அரசு சொத்துக்களின் விலையும்! மாமல்லபுரம் ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் அதனை வாங்க பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கு மாமல்லபுறம் விற்க அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள்.

நன்றி
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//"இழைத்து இழைத்து கட்டிய தாஜ் மஹால் ஒரு ரூபாய் . அரிசி ஒரு ருபாய். டெலிபோன் ஒரு ரூபாய் . ஒட்டு ஆயிரம் ரூபாய்.! " எங்கள ஒன்னும் அசய்க்க முடியாது மாப்ளே//

தாஜ் மகால வச்சு என்ன பண்ண? வேடிக்கைதான் பார்க்க முடியும். டெலிபோன்? பேசத்தான் முடியும். அரிசியை வைத்து பொங்கி திங்கத்தான் முடியும். ஆனால் ஒட்டு அப்படியா? இவ்வளவு குறைஞ்ச முதல் போட்டு கொள்ளை லாபம் அடிக்க முடியற தொழில் வேறு ஏதாவது உண்டான்னு சொல்லுங்க மச்சி!
KARTHIK said…
நீங்களும் இந்தியா கேட்ட வாங்கிப்போடலாம்.

// நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

:-))
மெரினா கடற்கரை அவ்வளவு கூட வராதுன்னு நினைக்கிறேன்!

ப்ளாட் போட்டு வித்துறலாமா?
Maximum India said…
நன்றி வால்பையன்!
Naresh Kumar said…
//மெரினா கடற்கரை அவ்வளவு கூட வராதுன்னு நினைக்கிறேன்!//

மெரீனா மாதிரி காதல் பேசும் இட்த்தை நான் பார்த்ததே இல்லை!!! காதல் பண்ணா, பக்கத்துலியே பாரு சமாதி, அந்த கதிதான் உனக்குன்னு சிம்பாலிக்கா சொல்லியிருப்பாங்க:))))

நரேஷ்
www.nareshin.wordpress.com
Maximum India said…
அன்புள்ள நரேஷ்!

நல்லாவே யோசிக்கிறீங்க.

:-)

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...