Skip to main content

வாதாடாமல் வழக்கை முடித்தவர்! போரிடாமல் வென்றவர்!

சாலை சந்திப்பு ஒன்றில் சிக்னலுக்காக காத்திருந்த போது கவனித்த நிகழ்வு இது.

டாக்ஸி ஒன்று எந்த ஒரு சைகையும் காட்டாமல் ஒரு சாலைக்குள் முரட்டுத்தனமாக வளைந்து நுழைந்த போது, பின்னே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென்று குறுக்கே வந்த டாக்ஸியால் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்து விட்டார். அவரிடம் இருந்த மொபைல் போன்ற பொருட்கள் எல்லாம் சாலையில் சிதறி விழுந்தன. நல்ல வேளையாக அவருக்கு பெரிய அடி ஒன்றும் பட வில்லை.

சைகை அல்லது இண்டிகேட்டர் போட்டுக் கொண்டு சாலையில் திரும்பி இருக்கலாம் அல்லவா என்று மோட்டார் சைக்கிள் மனிதர் கேட்க, வண்டியை விட்டு வெளியில் வந்த டாக்ஸி டிரைவர் (தவறு அவர் மீதே இருந்த போதும்) சத்தம் போட ஆரம்பித்தார். ஒழுங்காக முன்னே பார்த்து வண்டியை ஒட்டி வர வேண்டியதுதானே என்று மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீதே குற்றத்தை சுமத்தினார். இத்தனைக்கும் அவர் வண்டியில் (டாக்ஸி) எந்த ஒரு பாதிப்பும் இல்லை. குற்ற மனப்பான்மையை மறைக்கவே அப்படி சத்தம் போடுகிறார் என்று உணர முடிந்தது.

அப்போது மோட்டார் சைக்கிள் நண்பரின் நடவடிக்கை என்னை கவர்ந்தது. அமைதியாக சென்று கீழே விழுந்த பொருட்களை சேகரித்தார். எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், நிறுத்தாமல் தொடர்ந்து இரைந்து கொண்டே இருந்த டாக்ஸி ஓட்டுனரைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர் அவருக்கு ஒரு பெரிய சல்யூட் வைத்து "சென்று வாருங்கள்" என்று சைகை செய்தார். இப்போது டாக்ஸி டிரைவர் மூச்சடைத்துப் போய் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் எனக்கும் கூட பேசாமலேயே ஏதோ உணர்த்தியது போல இருந்தது,

"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."

இந்த உண்மை அனைவருக்கும் புரிந்தால் இன்று எத்தனை பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து போய் இருக்கக் கூடும்?

அப்போது அவருக்கு நான் கூட ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.

நன்றி.

Comments

Raman Kutty said…
super... really super...
Maximum India said…
நன்றி ராமன்!
Suresh said…
சூப்பர் தலைவா
Maximum India said…
நன்றி சுரேஷ்!
மோட்டர் சைக்கிளில் வந்தவர் கண்டிப்பாக ஒரு ஞானியின் மனநிலையில் இருப்பவர் தான்!
Tech Shankar said…
gud yaar

//"குற்ற மனப்பான்மை இல்லாதவருக்குத்தான் சமாதானம் பேச முன்வரும் தைரியம் இருக்கும். விட்டுக் கொடுப்பவர்தான் வெற்றி பெற்றவராகிறார் ."
நிஜமாவே நல்ல மனிதர் அவர்...
ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
www.kalakalkalai.blogspot.com
udhaya said…
ஒரு சின்ன ஷார்ட் பிலீமா கூட எடுக்கலாம் , அழகு.

உதயா.
Maximum India said…
நன்றி வால்பையன்!
Maximum India said…
நன்றி தமிழ் நெஞ்சம்!
Maximum India said…
நன்றி தீப்பெட்டி!
Maximum India said…
நன்றி உதயா!
Maximum India said…
நன்றி கலையரசன்!

கண்டிப்பாக கவனிக்கிறேன்! கொஞ்சம் டைம் கொடுங்கள்!

நன்றி!
வித்தியாசமான அணுகுமுறை
என்னையும் கவர்ந்தது.
ஆம் விலங்குகளிடம் பேச மனிதர்களுக்கு என்ன இருக்கமுடியும்,,
Maximum India said…
நன்றி முனைவர். குணசீலன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...