Skip to main content

மீண்டும் ஒரு யேன்-பண-மாற்றும் (Yen Carry Trade) சுனாமி?

தொடர்ந்து எட்டாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. பெரிய நிறுவனங்களின் பங்குகளில் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத போதும் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் ஏராளமாக முன்னேறியுள்ளன. தொடர்ந்த அந்நிய பணவரவு, இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் மீதான புதிய நம்பிக்கைகள், உலக சந்தைகளின் சாதகமான சூழ்நிலை ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்றாலும், சமீபத்தில் ஜப்பானிய யேன் நாணயத்தில் நிலவி வரும் மாறுதல்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறைந்த வட்டியில் கிடைக்கும் ஜப்பானிய நாணயத்தை மற்ற சந்தைகளில் முதலீடு செய்யும் போக்கு, 2006 -07 ஆம் ஆண்டிற்கு மீண்டும் துவங்கியுள்ளதாக பங்குசந்தை நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இத்தகைய குறைந்த வட்டி பண வரவு துவக்கத்தில் பங்குசந்தைகள் வேகமாக முன்னேற உதவினாலும், இறுதி நேர திடீர் பண-திருப்புதல்கள் பங்குசந்தையின் மோசமாக பாதித்து விட வாய்ப்புள்ளது.

இந்திய பெரிய பங்குகளின் குறியீடான நிபிட்டி தனது முக்கிய எதிர்ப்பு நிலையான 5300 க்கு மிக அருகிலேயே முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வேலை இழப்புகள் குறைந்து வருவதாக கடந்த வெள்ளியன்று (இங்கு விடுமுறை) வெளிவந்த செய்தியின் துணையோடு இந்த எதிர்ப்பு நிலை முறியடிக்கப் பட நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அப்படி முறியடிக்கப் படும் பட்சத்தில், நிபிட்டி தனது அடுத்த குறிக்கோளான 5400 என்ற அளவை நோக்கி முன்னேற வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில், நண்பர்கள் தமது வாங்கும் நிலையை (விற்று) முடித்துக் கொள்ளலாம். புதிய வாங்கும் நிலைகளை தவிர்ப்பது நல்லது. சிறிய மற்றும் இடைநிலை பங்குகளை பற்றிய யூகங்களை எடுத்த எடுப்பில் நம்பி விட வேண்டாம். ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.

மேலும் அடுத்த வாரத்தில் இருந்து வெளிவரும் காலாண்டு நிதி நிலை அறிக்கைகளின் அடிப்படையில் புதிய வாங்கும் நிலைகளை எடுக்கலாம். கிரீஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவி வரும் "அரசு கடன் நிலை", சீனா அதிபரின் அமெரிக்க பயணத்தில் எடுக்கப் படும் முடிவுகள், உலக சந்தையில் "யேன்" நாணயத்தின் போக்கு ஆகியவையும் நமது பங்கு சந்தையை பாதிக்கும்.

ஏற்கனவே சொன்னபடி இது லாப-விற்பனைக்கான நேரம். முதலீடு செய்திருக்கும் பங்குகள் நல்ல லாபத்தை தரும் பட்சத்தில் விற்று விடலாம். அதே போல ஒரு பங்கினை (நிறுவனத்தைப்) பற்றி தெளிவாக தெரியாமல் புதிய முதலீடுகளில் இறங்க வேண்டாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

Unknown said…
உண்மையான தெளிவான கருத்துகள். நன்றி.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
INDIA 2121 said…
NICE ARTICLE
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.