Skip to main content

மறு மதிப்பீடு அவசியம்!

கடந்த வெள்ளிக் கிழமை அன்று, இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கும் மேலே இருப்பதால் இன்போசிஸ் துவக்க்கத்திலேயே வெகுவாக உயரும் என்றும் இன்போசிஸ் பங்கு ஏற்றம் ஒட்டு மொத்த இந்திய சந்தையினையே மேலேடுத்துச் செல்லும் என்றும் சி என் பி சி தொலைக்காட்சியில் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பேசிக் கொண்டனர். அதிலும் ஒரு பங்குசந்தை விற்பன்னர் (?), அன்றைய தினம் உலக சந்தைகளுக்கே இந்தியா ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என்று மிகவும் நம்பிக்கையாக சொன்னார்.

பங்கு சந்தை தொடர்புகள் குறைந்து போனதால் பங்கு சந்தையின் உடனடி ரியாக்ஷன் பற்றிய நேரடி-புரிதல் வாய்ப்புக்கள் எனக்கு குறைவாக இருந்த நிலையிலும் கூட, இவர்களின் பேச்சுக்கள் எனக்கு அபத்தமாகவே பட்டது. இன்போசிஸ் பங்கின் வருடாந்திர வருவாய் (EPS) சுமார் 110 ரூபாயாக இருக்கும் நிலையில் (அப்போதைய) பங்கின் விலை சற்று அதிகமாகவே தோன்றியது. அதிலும், இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அதன் தலைவரே கவலை தெரிவித்த நிலையில், பங்கு சந்தை வல்லுனர்களின் (?) கணிப்புக்கள் வழக்கம் போலவே தவறுதான் என்பதை அன்றைய பங்குசந்தை முடிவுகள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்தன.

இன்போசிஸ் நிறுவனம் என்னதான் நல்ல நிறுவனமாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தாலும், விலை-வருவாய் விகிதம் (P/E Ratio) முப்பதுக்கு அருகே இருப்பது ஒரு வித நெருடலையே ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் மட்டுமல்ல ஒட்டு மொத்த சந்தையும் இப்போது அதிக விலை-வருவாய் விகிதத்திலேயே (கிட்டத்தட்ட 20௦) வர்த்தகமாகி வருகிறது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இந்திய பொருளாதார வளர்ச்சி எட்டு சதவீதம் மற்றும் பணவீக்கம் எட்டு சதவீதம் என மொத்தத்தில் பதினாறு சதவீத வளர்ச்சி இருக்கும் பட்சத்தில் பங்கு சந்தையின் விலை வருவாய் விகிதம் இருபதுக்கு அருகே இருப்பது, இது மலிவு விலை மார்க்கெட் அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இந்திய பங்குசந்தை வரலாற்றின் மிகப்பெரிய வெளியீட்டான இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Ltd) கதையும் கிட்டத்தட்ட ஒன்றேதான். இந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி விகிதம் பதினைந்து சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், பங்கின் விலை-வருவாய் விகிதம் 15 .4 ஆக நிர்ணயித்திருப்பது ஏமாற்றத்தையே வரவழைக்கிறது. பொதுவாக கனிம பொருட்களின் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக இருப்பதால், கனிம நிறுவனங்களின் விலை-வருவாய் விகிதம் குறைவாகவே இருப்பது வழக்கம். "கோல் இந்தியா" நிறுவனம் அடிப்படையில் சிறப்பான ஒன்று என்பதால், நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் என்றாலும், குறுகிய கால கண்ணோட்டத்தில், அரசின் விலை நிர்ணயம் மகிழ்ச்சியை தரவில்லை.

மொத்தத்தில் இந்திய பங்கு சந்தை இன்னும் ஏற்றத்தை காண வாய்ப்புக்கள் உண்டு என்றாலும், இது அறுவடை காலத்தின் ஆரம்பம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்திய தொழிற் வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்க புள்ளி விவரங்கள் சந்தைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், மந்தமான உலக பொருளாதார நிலை காரணமாக, இந்தியாவிற்குள் தொடரும் அந்நிய முதலீடுகள் நமது சந்தை வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.

குறுகிய கால நோக்கில், முந்தைய சந்தை எதிர்ப்பு நிலையான 5930 என்பது நல்ல அரணாக இருக்கும். குறுகிய கால வர்த்தகர்கள் இந்த நிலையை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு 6400 என்ற இலக்கை நோக்கி வர்த்தகம் செய்யலாம்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பங்கினையும் தனித்தனியாக மறு மதிப்பீடு செய்து கொள்வது நல்லது.

வரும் வாரம் சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

மேலும் அனைவருக்கும் தசரா , ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் !

நன்றி!

Comments

Thomas Ruban said…
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.

உங்கள் அறிவுரைக்கும்,எச்சரிக்கைக்கும் நன்றி சார்....
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
Unknown said…
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
periyannan said…
" நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பங்கினையும் தனித்தனியாக மறு மதிப்பீடு செய்து கொள்வது நல்லது."

ஒரு ப‌ங்கை தேர்வுசெய்யும்முன் அத‌ன் த‌ற்போதைய‌ விலை(த‌குந்த‌தா), EPS, P/E Ratio, Industry P/E Ratio, ஒட்டுமொத்த‌ ச‌ந்தையின் PE Ratio, இவ‌ற்றை க‌வ‌னித்து, (பங்குசந்தை விற்பன்னர் சொன்ன‌த‌ற்காக‌ வாங்காம‌ல்) ஒரு ம‌திப்பீடு செய்து தேர்வுசெய்வேன். அன்று பங்குசந்தை விற்பன்னர் சொன்ன‌த‌ற்காக‌ எவ‌றேனும் இன்போசிஸில் வ‌ர்த்த‌க‌ம்(buy) செய்திருந்தால்? ந‌ன்றி சார்.
periyannan said…
" நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பங்கினையும் தனித்தனியாக மறு மதிப்பீடு செய்து கொள்வது நல்லது."

ஒரு ப‌ங்கை தேர்வுசெய்யும்முன் அத‌ன் த‌ற்போதைய‌ விலை(த‌குந்த‌தா), EPS, P/E Ratio, Industry P/E Ratio, ஒட்டுமொத்த‌ ச‌ந்தையின் PE Ratio, இவ‌ற்றை க‌வ‌னித்து, (பங்குசந்தை விற்பன்னர் சொன்ன‌த‌ற்காக‌ வாங்காம‌ல்) ஒரு ம‌திப்பீடு செய்து தேர்வுசெய்வேன். அன்று பங்குசந்தை விற்பன்னர் சொன்ன‌த‌ற்காக‌ எவ‌றேனும் இன்போசிஸில் வ‌ர்த்த‌க‌ம்(buy) செய்திருந்தால்? ந‌ன்றி சார்.
Maximum India said…
நன்றி பெரியண்ணன்!

//ஒரு ப‌ங்கை தேர்வுசெய்யும்முன் அத‌ன் த‌ற்போதைய‌ விலை(த‌குந்த‌தா), EPS, P/E Ratio, Industry P/E Ratio, ஒட்டுமொத்த‌ ச‌ந்தையின் PE Ratio, இவ‌ற்றை க‌வ‌னித்து, (பங்குசந்தை விற்பன்னர் சொன்ன‌த‌ற்காக‌ வாங்காம‌ல்) ஒரு ம‌திப்பீடு செய்து தேர்வுசெய்வேன்.//

உங்கள் பாணி சிறப்பானது. வாழ்த்துக்கள்!

//அன்று பங்குசந்தை விற்பன்னர் சொன்ன‌த‌ற்காக‌ எவ‌றேனும் இன்போசிஸில் வ‌ர்த்த‌க‌ம்(buy) செய்திருந்தால்?//

அதுவும் எதிர்கால சந்தையில் வாங்கும்படி அறிவுரைத்தனர் அந்த விற்பன்னர்கள்(?).

நன்றி!
Maximum India said…
நன்றி ஸ்வேதா!
bandhu said…
To research stocks, in US, I use s&p as well as valueline. I find the data in yahoo finance to be insufficient as it does not have past earning details. can you suggest a good place to research the fundamentals of Indian stocks?

thanks

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...