Skip to main content

தந்தியடிக்கும் கலைஞர்!

விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை.

கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது.

மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறார் போல.

நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

MCX Gold Silver said…
ilavasathal tamizhaka ilaigargal somperi akirarkal:(
அம்மையார் முதல்வராக காலத்திலேயே, இன்னின்ன தேதிகளில் இவ்வாறு நடந்தது, அவற்றை சட்டை செய்யாமல், சுடப்படும் மீனவர் குடும்பங்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல், கொடநாடு மாளிகையில் ஒய்வு எடுக்க சென்றார் என்ற விவரம் எல்லாம் கூறி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதாமல், இந்தமுறை நேரடியாக தந்தி அனுப்பியது பாராட்டுக்குரியது. ஜகத்ரக்ஷகன் போன்றோர் இன்னொரு விழா எடுக்கலாம்
periyannan said…
"விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்."

த‌ன் சுய‌(க‌ட்சி)தேவைக்கு த‌ன் குடும்ப‌த்துட‌ன் டெல்லிக்கு ப‌டையெடுப்பார். ம‌க்க‌ளின் தேவைக்கு தந்தியை ப‌ய‌ன்ப‌டுத்துவார். நேராக‌ ச‌ந்தித்து முறையிட்டாலே ஒன்றும் ந‌ட‌க்காது (குறிப்பாக‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு).

"கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது."

த‌க‌வ‌ல்தொழில்நுட்ப‌ துறை ப‌றிபோன‌தால் அந்த‌ துறைசார்ந்த‌ ந‌ப‌ர்க‌ள் மீதுதான் வெறுப்பு என்றால், அந்த‌ துறையின் மீதே வெறுப்போ?

"நாமும் கலைஞர் (இலவச) டிவியில் சினிமா சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கலையும் வழக்கம் போல கண்களை கட்டிக் கொண்டு கனவுலகில் கொண்டாடுவோம்."

நாமும் க‌லைஞ‌ர் (இலவச) டிவியில், க‌லைஞ‌ர் சேன‌லில், க‌லைஞ‌ர் வாரிசு தயாரித்த‌ த‌மிழ்சினிமாவை (விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை ம‌ற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழ‌ல் வரை பிரச்சனைகளை ம‌ற‌ந்து) இல‌வ‌ச‌மாக க‌ண்டுக‌ளிப்போம்.

இல‌வ‌ச‌ம் அய்யா இல‌வ‌ச‌ம், எங்கும் இல‌வ‌ச‌ம்.

குரு அவ‌ர்க‌ளுக்கு என் இனிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

பதிவுக்கு ந‌ன்றி குரு.
Maximum India said…
இலவசம் என்பது ஒருவனை மொட்டை அடித்து விட்டு சீப்பை இனாமாக தருவது போலத்தான்.!

நன்றி DG !
Maximum India said…
நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

நீங்கள் சொல்வது போல கலைஞரிடம் ஒரு முன்னேற்றம் தெரிந்தாலும், ஆயிரம் தந்தி அடித்து அருஞ்சாதனை படைத்தவர் என்று ஒரு புதிய பட்டம் கொடுத்து பாராட்டு விழாவும் நடத்தி விடுவார்கள் நமது உடன் பிறப்புக்கள்!

நன்றி!
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி பெரியண்ணன்!

கற்றவர்களால் ஆபத்து என்று மக்களை மாக்களாகவே வைத்திருந்தது ORU காலம் என்று (சுய) உணர்வு பெற்றவர்களால் ஆபத்து என்று அவர்களை கையேந்துபவர்களாகவே வைத்திருப்பது இந்த காலம்.

சுய மரியாதை பெயர் சொல்லி பதவிக்கு வந்த இவர்களிடம் இருந்து தப்பிக்க இன்னொரு சுய மரியாதை இயக்கம் உருவாக வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.

நன்றி!
Naresh Kumar said…
முன்னலாம், தந்தினாலே எங்கியாவுது எழவு உழுந்திடுச்சோன்னு மக்கள் ஒரு மூட நம்பிக்கையை கொண்டிருந்தார்கள்...

கலைஞரை நம்புவது கூட அப்படி ஒரு மூட நம்பிக்கைதான்னு சிம்பாலிக்கா சொல்றாரோ என்னமோ???

காலை வருடும் உடன்பிறப்புகள் இருக்கும் வரை மாநிலம் வெளங்குவதற்கு வாய்ப்பில்லை...

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...