Skip to main content

ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!

உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது.

இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது.

பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான்.

உலக பயங்கரவாதத்தின் பிம்பமாக கருதப் படும் பின் லாடனின் அழிவு பயங்கரவாதத்திற்கு வைக்கப் பட்ட முற்றுப் புள்ளி அல்ல என்றாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய வெற்றியாகும். அதே போல இரண்டு அலைற்றை ஊழல்வாதிகள் தண்டிக்கப் பட்டால், இந்தியாவில் ஊழலுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும்.

இரண்டு அலைகற்றை அலைவரிசை மீதான விசாரணை உச்ச நீதி மன்றம் முதல் சாதாரண மக்கள் வரை அனைவராலும் கூர்மையாக கவனிக்கப் படும் இந்த வேளையில், ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டால், இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கை வெகுவாக பாதிக்கப் படும்.

நிரா ராதியா டேப்புகள் மற்றும் கலைஞர் டிவி பணமாற்ற விவகாரங்கள், இரண்டு அலைகற்றை ஊழலில் கனிமொழியின் பங்கினை வெளிப்படையாக காட்டுகின்றன. அவரை தி மு க வெளிப்படையாக ஆதரிப்பதும் கனிமொழி விவகாரத்தினை மாநில ஆட்சியில் பங்கெடுப்பதற்கான மாஸ்டர் ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுத்திருப்பதும் ஊழல் அரசியல்வாதிகளின் உண்மையான முகத்தை தோலுரித்து காட்டுகின்றன. இப்போதைக்கு பொது மக்களுக்கு மிச்சமுள்ள நம்பிக்கையெல்லாம் நீதி மன்றங்களின் மீதுதான்.

திமுகவின் தாக்கத்தையும் மீறி, காங்கிரஸின் இரட்டை நாடகங்களையும் தாண்டி, கனிமொழி கைது செய்யப் பட்டால், அந்த நிகழ்வு இந்திய அரசியல் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்பதுடன் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று நம்புகிறேன்.

மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

கனிமொழியின் கைது ஊழலுக்கு வைக்கப் படும் முற்றுப் புள்ளியாக அமையாவிடினும், ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்.

நன்றி!

Comments

periyannan said…
உங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி சார்.

"ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!"

மிக‌ அருமையான ஒப்பீடு. இந்தியாவில் ஊழ‌ல், ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை போல் ப‌ல‌வேர்க‌ளைவிட்டு ப‌ர‌ந்துவிரிந்துள்ள‌து. ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தின் ஒரு வேரை வெட்டிய‌துபோல் (ஆணிவேர் என்று கூற‌முடிய‌வில்லை அது ப‌ல‌வேர்க‌ளை உருவாக்கி ப‌ல‌ப்ப‌டுத்திவிட்ட‌து),ஊழ‌லின் அனைத்துவேர்க‌ளையும் வெட்ட‌முடியாவிட்டாழும், இந்த வ‌ழுவான‌ வேர்க‌ளை வெட்டினாலே (த‌ண்டித்தால்) போதும்.

"கனிமொழியின் கைது ஊழலுக்கு வைக்கப் படும் முற்றுப் புள்ளியாக அமையாவிடினும், ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்."

க‌ண்டிப்பாக‌, ஊழலுக்கான சாவு மணியின் முதலோசையாக இருக்கும்.

உங்களின் தொட‌ர்ப‌திவை ஆவ‌லுட‌ன் எதிர்பார்க்கிறேன்.

பதிவுக்கு ந‌ன்றி.
Maximum India said…
நன்றி வாசு!

நன்றி பெரியண்ணன்!

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.