Skip to main content

வேண்டாமே ஹீரோயிசம்!





சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் கடத்தப் பட்டதை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கைகளில் படித்தேன். தகுந்த பாதுகாப்பின்றி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானது என்று காவல் துறை அறிவுறுத்திய பின்னரும், மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்ட் பகுதிகளுக்கு முறையான பாதுகாப்பின்றி சென்றததால்தான் இந்த விபரிதம் ஏற்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு உரியவரே. அவர் துணிச்சல் மிகுந்தவராக இருக்கலாம் மேலும் அவருக்கு அவரது உயிர் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்து ஒரு ஹீரோவைப் போல பேட்டியும் கொடுக்கலாம்.



ஆனால் அவர் கடத்தப் பட்டதன் விலையை அரசாங்கமும் அதன் மூலம் நாடும்தான் கொடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருக்கும் மாவோயிஸ்டுகள் விடுதலை மற்றும் திரைக்கு பின்னே கொடுக்கப் படும் பணத்திற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்?



இதற்கு முந்தைய எல்லா கடத்தல் மற்றும் பிந்தைய விடுதலைகள் போலில்லாமல், இந்த முறையாவது, பாதுகாப்பு குறைவுக்கு யார் காரணம் என்பதை முறையாக விசாரித்து, ஒரு வேளை ஆட்சியரே பொறுப்பாக இருந்தால், அரசின் நஷ்டத்திற்கு அவரை பொறுப்பாக்கி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அந்த நடவடிக்கை வருங்காலத்தில் பொறுப்பற்ற இதர அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.



நன்றி!

Comments

Naresh Kumar said…
மாறுபட்ட கோணம்! யோசிக்க வைக்கிறது!

நரேஷ்
Maximum India said…
நன்றி நரேஷ்!

பொதுவாகவே இந்தியாவில் தனி மனித வழிபாடே முன்னிறுத்தப் படுகிறது. ஆட்சியருக்காக உயிரை நீத்த காவலரைப் பற்றியோ, அனாதையான அவரது குடும்பத்தை பற்றியோ யாரும் கவலைப் பட்டதாக தெரிய வில்லை. அந்த உயிரிழப்புக்கு யார் பொறுப்பு என்பதைப் பற்றியும் யாரும் அக்கறை காட்டவில்லை.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...