உலக பொருளாதார சிக்கலை உருவாக்கியதில் சீனாவுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. கடன் வாங்கி செலவழித்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் என்றால், உற்பத்தி பொருட்களின் விலையை செயற்கையாக குறைவாக வைத்திருந்த சீனா மறு பக்கம், உலக வணிக அசமனிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது. தனது ஏற்றுமதி பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சீனா கையாண்ட பல்வேறு வழிமுறைகளில் முக்கியமானது, தனது தேசிய நாணயத்தின் மதிப்பை (செயற்கையாக) மாற்றாமல் வைத்திருந்தது ஆகும். சீனாவின் இந்த தவறான போக்கினால், மற்ற ஏற்றுமதி நாடுகளின் (கிழக்காசியா மற்றும் இந்தியா) "போட்டியிடும் வலு" வெகுவாக பாதிக்கப் பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நெசவு தொழில் மற்றும் இதர சிறு ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். உலக அரங்கில் சீனாவிற்கு இருந்த செல்வாக்கும், மேற்கத்திய நாடுகள் குறைந்த விலையில் மற்றவர்களின் சேவைகளை அனுபவித்து வந்த சௌகரியத்தை இழக்க விரும்பாததும், மற்ற ஏற்றுமதி நாடுகளின் குரல் எடுபடாமல் செய்தன. இப்போது நாணயத்தின் மீதான தனது கட்டுப்பாட்டினை குறைத்துக் கொள்வதாக சீனா அறிவித்திருப்பது, மற்ற நாடுகளின் ஏ...
கொஞ்சம் மாத்தி யோசி!