Skip to main content

தமிழகம்! ஜாக்கிரதை!

இந்தியாவை பொறுத்த வரை பயங்கரவாதத்தினால் அதிகமாக பாதிக்கப் படாத மாநிலமாகத்தான் தமிழகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதாக இன்று வந்த செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ரயில்வே துறை ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாடுகள்தான் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் சந்திக்கவிருந்த மிகப் பெரிய விபத்தினை தவிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டம் இது என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.

ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து அச்சிடப் பட்ட நோட்டிஸ்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இது உறுதிபடுத்த முடியாத தகவல் என்பதால் உடனடியாக யார் மீதும் குற்றம் சாட்டி விட முடியாது என்றாலும், சதி வேலையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள் மற்றும் சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.

வட மாநிலங்களில் வாழ்ந்தவன் என்ற முறையில் பயங்கரவாதத்தின் வலியை நேரடியாக உணர்ந்தவன் நான். அந்த வகையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, எந்த காரணத்தினை முன்னிட்டும், பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமளித்துவிடக் கூடாது. சதிக்கும்பலை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்திடம் ஒப்படைக்க வேண்டியது அரசின் கடமை. அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் எதிர்கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

நன்றி!

Comments

Btc Guider said…
அரசியலில் உள்ள சில நாதேரிகள் திருந்திவிட்டாலே பல கேடு விளையும் செயல்களை விட்டு தமிழகம் பாதுகாப்பாக இருக்கும்.

முன்புபோல் அதிகமாக பதிவுகள் போடுவதில்லேயே சார்.

பகிர்வுக்கு நன்றி சார்.
Thomas Ruban said…
//ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து அச்சிடப் பட்ட நோட்டிஸ்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இது உறுதிபடுத்த முடியாத தகவல் என்பதால் உடனடியாக யார் மீதும் குற்றம் சாட்டி விட முடியாது//

தீவிரவாதம் நடக்கும் இடங்களில் எல்லாம் அது எப்படி துண்டு நோட்டிஸ்கள் போலீசார் கைகளில்
கிடைக்கிறது, ஆச்சிரியமாக உள்ளது.


//எந்த காரணத்தினை முன்னிட்டும், பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமளித்துவிடக் கூடாது. //

தமிழகத்தை மட்டும் ஏன் பிரித்து பார்க்கிறிர்கள். இந்தியவில் மடடும்மல்ல உலகத்தில் தீவிரவாதம்
எங்கு நடந்தாலும் கண்டிக்கக்கூடிய
விசயம்தான்.தீவிரவாதத்தால் அதிகம் பதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான்.

பதிவுக்கு நன்றி சார்.
Swengnr said…
வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/
Maximum India said…
நன்றி ரஹ்மான்!

//அரசியலில் உள்ள சில நாதேரிகள் திருந்திவிட்டாலே பல கேடு விளையும் செயல்களை விட்டு தமிழகம் பாதுகாப்பாக இருக்கும்.//
உண்மைதான் நண்பரே!

//முன்புபோல் அதிகமாக பதிவுகள் போடுவதில்லேயே சார்.//

பொதுவாகவே உற்சாகமான மனிதன்தான் நான். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள், எனது உற்சாகத்தில் ஓட்டை விழச் செய்து விட்டன. உலகில் உள்ள தனது எல்லா கெட்ட குணங்களையும் விலக்கிக் கொண்டாலும், "சலிப்பு தன்மையை" மட்டும் விலக்கிக் கொள்ள முடியாது என்று சாத்தான் ஒருமுறை சொன்னாராம். அந்த அளவுக்கு மோசமானது, "சலிப்பு தன்மை". இப்போது என்னுடைய போராட்டம் எல்லாம் அந்த சலிப்புத்தன்மையுடன்தான். மீண்டு வர வேண்டும். மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாமும்.

அக்கறையான விசாரிப்பு நன்றி ரஹ்மான்!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//தமிழகத்தை மட்டும் ஏன் பிரித்து பார்க்கிறிர்கள். இந்தியவில் மடடும்மல்ல உலகத்தில் தீவிரவாதம்
எங்கு நடந்தாலும் கண்டிக்கக்கூடிய
விசயம்தான்.தீவிரவாதத்தால் அதிகம் பதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். //

நீங்கள் சொல்வது போல தீவிரவாதம் எங்கு நடந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக நடத்தப் பட்டாலும் கண்டிக்கப் பட வேண்டியதுதான். அதே சமயம், தமிழகம் இது வரை அதிகம் பாதிக்கப் படாத பகுதியாக இருப்பதால், இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனவேதான், தமிழகத்திற்கான "சிறப்பு எச்சரிக்கையாக" இந்த பதிவு.

நன்றி!
Maximum India said…
//வணக்கம்,
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com///

உங்கள் வரவு பதிவுலகுக்கு நல்வரவாகட்டும்.

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்!
Anonymous said…
இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாயகவோ அல்லது மதரீதியாகவோ வேற்றுமை பார்க்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க பாடுபடவேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் அப்பாவி மக்களை ஏன் குறி வைக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (யாராயினும் சரி) அதிகபட்ச தண்டனை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
Thomas Ruban said…
//பொதுவாகவே உற்சாகமான மனிதன்தான் நான். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள், எனது உற்சாகத்தில் ஓட்டை விழச் செய்து விட்டன. உலகில் உள்ள தனது எல்லா கெட்ட குணங்களையும் விலக்கிக் கொண்டாலும், "சலிப்பு தன்மையை" மட்டும் விலக்கிக் கொள்ள முடியாது என்று சாத்தான் ஒருமுறை சொன்னாராம். அந்த அளவுக்கு மோசமானது, "சலிப்பு தன்மை". இப்போது என்னுடைய போராட்டம் எல்லாம் அந்த சலிப்புத்தன்மையுடன்தான். மீண்டு வர வேண்டும். மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாமும். //

உங்கள் நல்ல உள்ளத்துக்கு,எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் துணையிருப்பான்.

உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

நன்றி சார்.
Maximum India said…
நன்றி ஜாபர்!

//இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாயகவோ அல்லது மதரீதியாகவோ வேற்றுமை பார்க்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க பாடுபடவேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் அப்பாவி மக்களை ஏன் குறி வைக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (யாராயினும் சரி) அதிகபட்ச தண்டனை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.//

உண்மைதான் நண்பரே! பயங்கரவாதத்திற்கு மதமும் இல்லை, மொழியும் இல்லை, இனமும் இல்லை.

பயங்கரவாதிகள் உண்மையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தாத பொதுமக்களையே குறி வைக்கின்றனர். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அரசியல்வாதிகளுக்கு பொதுமக்களின் மீது எந்தவொரு அக்கறையுமில்லை ஆதலால் அவர்கள் முழுமுனைப்புடன் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்று. இவர்களுக்கு நோகாமல் பொழப்பு நடத்த எளிய இலக்கு பொதுமக்கள்தான்.

மீண்டும் சொல்கிறேன். பயங்கரவாதிகள் உண்மையில் கோழைகள்தான் என்று.

நன்றி!
Maximum India said…
//உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன்.//

மிக்க நன்றி தாமஸ் ரூபன்!

உங்களைப் போன்ற நண்பர்கள் பதிவுலகம் கொடுத்த கொடை ஆவர்.

மிக்க நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...