Skip to main content

பயமா? லாப விற்பனையா?

நீண்ட காலத்திற்கு பின்னர் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் சென்ற வாரம் பெருமளவு விற்பனை செய்துள்ளனர். இந்த அதிரடி விற்பனை காரணமாக சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் மிகப் பெரிய ஊழலான 2G விவகாரம் இந்தியாவின் நம்பகத்தன்மையை பெருமளவில் பாதித்துள்ளததால் அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாறு விற்பனை செய்கின்றனர் என்று சில பங்கு சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா ஒரு ஊழல் தேசம் என்பதையும் அதனால்தான் இங்கு குறுகிய கால லாப வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நன்கு உணர்ந்தே இந்தியாவிற்குள் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதால், 2G ஊழல் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதே சமயத்தில் சிறு நிதி துறையை கட்டுப் படுத்த ஆந்திர அரசு எடுத்த முயற்சியும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை திரும்பி பெற வேண்டும் என்று எழும்பும் சில கருத்துக்களும் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் லேசான அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சீனா தனது வங்கி கையிருப்பு விகிதத்தை அதிகரித்திருப்பதும் அயர்லாந்து விவகாரம் ஐரோப்பிய நிதி சிக்கல் இன்னும் தீர்ந்து விட வில்லை என்பதை வெளிக் கொணர்ந்திருப்பதும் கூட இந்த விற்பனைக்கான இதர காரணங்கள் என்று கூறப் படுகின்றன. கிட்டத்தட்ட நூறு சதவீத லாபத்தை கொடுத்திருக்கும் இந்திய பங்கு சந்தைகளில் நிகழும் இப்போதைய விற்பனை, அந்நிய முதலீட்டாளர்களின் லாபத்தை பதிவு செய்யும் ஒரு முயற்சியாகவும் இருக்கக் கூடும். அமெரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் டாலர் மேலேறுவதும் கூட இதர காரணங்களாக இருக்கலாம்.

ஆக மொத்தத்தில், இந்திய பங்கு சந்தை புதிய உயரத்தை எட்டும் வாய்ப்பு இப்போதைக்கு பறி போயுள்ளது மட்டுமல்லாமல், முக்கிய குறியீடுகள் வலுவான அரண் நிலைகளுக்கு கீழேயும் (நிபிட்டி 5930, சென்செக்ஸ் 19800) முடிவடைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும் .



குறுகிய கால வர்த்தகர்கள் நிபிட்டி அளவு 5850 க்கு அருகே ஸ்டாப் லாஸ் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். 6050க்கு மேலே சந்தையில் வாங்கும் நிலை எடுக்கலாம் (இலக்கு 6400) .

நீண்ட கால முதலீட்டாளர்கள் நிபிட்டி 5700க்கு கீழே அடிப்படையில் சிறந்த பங்குகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம்.

வரும் வாரம் சிறந்த வாரமாக அமைந்திட அனைவரும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

manjoorraja said…
பயனுள்ள பதிவு.

ஒரு சிறு சந்தேகம்:

ஏன் சில நிறுவனங்களில் இரண்டாம் காலாண்டு லாபம் அதிகமாக இருந்தும் சந்தையில் அவற்றின் பங்கு விலைகள் சரிகிறது?
Maximum India said…
//ஏன் சில நிறுவனங்களில் இரண்டாம் காலாண்டு லாபம் அதிகமாக இருந்தும் சந்தையில் அவற்றின் பங்கு விலைகள் சரிகிறது?//

ஏற்கனவே ஒருமுறை சொன்னபடி சந்தை எப்போதும் வருங்காலத்தை குறிவைத்தே நகர்கிறது. முடிந்து போன செய்திகளுக்கு இங்கு மதிப்பில்லை. எனவே சென்ற காலாண்டு லாபத்தை விட வரும் காலாண்டு (களின்) லாபம் எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்துதான் ஒரு பங்கினை மதிப்பீடு செய்ய வேண்டும்.

நன்றி!
Thomas Ruban said…
இந்த வாரத்தில் இந்த மாதத்திற்குகாண F&O செட்டில்மெண்ட் இருப்பதால் சந்தை அதிக ஏற்ற,இறங்களுடன் இருக்கும் என நான் நினைக்கிறேன்.


முதன்மைசந்தையில் இனிமேல் வரும் IPO க்கள் ஏழுநாட்கள்குள் பட்டியல் இடப்படும் என செபி இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

செபிக்கு புதிய இயக்குனர் கூடிய விரைவில் நியமிக்கப்பட உள்ளார் அது சந்தையை பாதிக்குமா?

வேதந்தகுழுமத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் சார்?

பகிர்வுக்கு நன்றி சார்.
periyannan said…
எப்பொழுதும் அவ‌ர்க‌ள் (அந்நிய முதலீட்டாளர்கள்) வ‌ந்துசெல்லும் விருந்தாளிக‌ள். அடிப்ப‌டையில் சிற‌ந்த‌ பங்குகளை தேர்வு செய்து உற்ற‌ந‌ண்ப‌னாக‌ இருப்பேன்(போம்).ப‌திவுக்கு ந‌ன்றி ஸார்.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

// இந்த வாரத்தில் இந்த மாதத்திற்குகாண F&O செட்டில்மெண்ட் இருப்பதால் சந்தை அதிக ஏற்ற,இறங்களுடன் இருக்கும் என நான் நினைக்கிறேன்.//

உண்மைதான் நண்பரே!

//முதன்மைசந்தையில் இனிமேல் வரும் IPO க்கள் ஏழுநாட்கள்குள் பட்டியல் இடப்படும் என செபி இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.//

முதலீட்டாளர்களின் பணம் விரைவில் THIRUMBUVADHU நல்ல விஷயம்தான்!


//செபிக்கு புதிய இயக்குனர் கூடிய விரைவில் நியமிக்கப்பட உள்ளார் அது சந்தையை பாதிக்குமா? //

இது போன்று நிர்வாக மாற்றங்கள் சந்தையை PERUMALAVIL PAADHIKKAADHU என்றே நினைக்கிறேன். பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தாராளமயமாக்கல் ஆகியவை இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்ட நிலையில் எந்த தலைவரும் சந்தைக்கு சாதகமானவராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

//வேதந்தகுழுமத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் சார்? //

வேதாந்தா இந்தியாவின் ஊழல் வாய்ப்புக்களை அதிக அளவில் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒரு நிறுவனம். இந்தியாவில் ஊழல் ஓயாதவரை இவர்களின் எதிர்காலம் சிறப்பானதாகவே இருக்கும்.

நன்றி!
Maximum India said…
நன்றி பெரியண்ணன்!
Thomas Ruban said…
MOIL IPO பற்றி உங்கள் கருத்துகளை பதிவிட்டால் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி சார்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...