Skip to main content

பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பாதி ஆரம்பம்?

ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னே உருவாகும் பணவீக்க சுழற்சியின் முதல் பகுதி எப்பொழுதுமே விரும்பக் கூடியதாகத்தான் இருக்கும். பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுதலை, அதிகப் படியான பண புழக்கம், அதிக வேலை வாய்ப்புக்கள், ரியல் எஸ்டேட் உயர்வு, தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றம் என பல வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அதிகப் படியான விலை அளவுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் லாபத்தை உயர்த்தும். அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகமாகும். மக்களிடையே உருவாகும் அதிகப் படியான பணபுழக்கம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் குஷிப் படுத்தும். அதிகப்படியான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சம்பள உயர்வு நடுத்தர வர்க்கத்தினையும் மகிழ்ச்சிப் படுத்தும்.

அதே சமயத்தின் பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான் இருக்கும். விலைவாசிகள் விண்ணை முட்டும் பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் வெகுவாக பாதிக்க படும். அதிகப் படியான கடன் வட்டி வீதங்கள் உற்பத்தியாளர்களை நஷ்டத்தில் தள்ளும். புதிய முதலீடுகள் குறையும். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை உருவாகும்.

இப்போதைய சூழ்நிலையில், மேலோட்டமாக பார்க்கும் போது பணவீக்கம் ஒரு கட்டுக்குள் இருப்பது போல தோன்றினாலும், அடிப்படை பணவீக்கம் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே இருந்து வருகிறது. இந்திய மத்திய வங்கி வட்டி வீதங்களை தொடர்ந்து அதிகரித்து வருவது, விலைவாசியை கட்டுப் படுத்த ஓரளவு உதவும் என்றாலும், கடன் வட்டி வீதங்களின் உயர்வு புதிய முதலீடுகளை மந்த படுத்துவதுடன் இந்திய பொருளாதார வளர்ச்சியையும் வெகுவாக பாதிக்கும்.


வரும் வாரம் சிறப்பானதாக இருக்க அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நன்றி!

Comments

periyannan said…
பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான்இருக்கும்.

அதிக‌ கசப்பாகத்தான் இருக்கிற‌து. ஆர‌ம்பமா, முடிவா என்று த‌வித்துகொண்டிருந்தேன். இரண்டாம் ப‌குதி என்று வ‌ழிகாட்டியுள்ளீர்க‌ள். மிக‌வும் ந‌ன்றி.

வ‌ரைப‌ட‌ம்(support,resistance) மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து.

ப‌திவுக்கு மிக‌வும் ந‌ன்றி.
Thomas Ruban said…
பதிவுக்கு நன்றி சார்.

பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி எப்போது ஆரம்பமாகும்?

நன்றி.
Maximum India said…
நன்றி பெரியண்ணன்!
Maximum India said…
//பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி எப்போது ஆரம்பமாகும்?//

அநேகமாக ஆரம்பித்து விட்டது என்றே நினைக்கிறேன்.

நன்றி தாமஸ் ரூபன்!
aotspr said…
நல்ல பதிவு.
நன்றி.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...