நான், என்னுடைய சில (வெளி மாநில) நண்பர்களுடன், நமது மாநிலத்தைப் பற்றி விவாதிக்கும் போது சில கருத்துக்கள் வெளியாகின. அவையாவன. தமிழ் நாட்டில் மட்டுமே, பெரும் தலைவர்கள், கலை சார்ந்த துறைகளுக்கு (குறிப்பாக சினிமா) மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமே, சினிமா நடிகர்கள் கொண்டாடப்படுகின்றனர். சொல்லப் போனால், குஜராத்துக்கு எண்ணெய் சார்ந்த தொழில்கள், மும்பைக்கு நிதி சார்ந்த துறைகள் மற்றும் கர்நாடகத்திற்கு மென் பொருட்கள் எனக் குறிப்பிடுவது போல தமிழ்நாட்டிற்க்கு என்று இருப்பது சினிமா துறை மட்டுமே என்ற மாயை காணப் படுகிறது. பிரபல பத்திரிக்கைகள், கலை சார்ந்த செய்திகளுக்கே, முக்கியத்துவம் அளிப்பது போலவும தோன்றுகின்றது. நான், அவர்களிடம் அதெல்லாம் ஓரளவிற்கே உண்மை, . மற்றபடி தமிழ் நாடு பல துறைகளில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்று வாதிட்டாலும், உள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. நம்மிடம் பல திறமைகள் இருந்தும் கூட நாம் ஏன் பெருமளவிற்கு முன்னேற வில்லை.நமது மாநிலம் இந்தியாவில், கல்வியறிவில் மட்டுமே முன்னணி மாநிலமாக இருந்து என்ன பயன்? சோழர் கால பெருமையை என்றைக்கு மீட்டு எடுப்பது? (த...
கொஞ்சம் மாத்தி யோசி!