Skip to main content

Posts

Showing posts from September, 2008

அக நானூறு மட்டும் போதுமா?

நான், என்னுடைய சில (வெளி மாநில) நண்பர்களுடன், நமது மாநிலத்தைப் பற்றி விவாதிக்கும் போது சில கருத்துக்கள் வெளியாகின. அவையாவன. தமிழ் நாட்டில் மட்டுமே, பெரும் தலைவர்கள், கலை சார்ந்த துறைகளுக்கு (குறிப்பாக சினிமா) மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமே, சினிமா நடிகர்கள் கொண்டாடப்படுகின்றனர். சொல்லப் போனால், குஜராத்துக்கு எண்ணெய் சார்ந்த தொழில்கள், மும்பைக்கு நிதி சார்ந்த துறைகள் மற்றும் கர்நாடகத்திற்கு மென் பொருட்கள் எனக் குறிப்பிடுவது போல தமிழ்நாட்டிற்க்கு என்று இருப்பது சினிமா துறை மட்டுமே என்ற மாயை காணப் படுகிறது. பிரபல பத்திரிக்கைகள், கலை சார்ந்த செய்திகளுக்கே, முக்கியத்துவம் அளிப்பது போலவும தோன்றுகின்றது. நான், அவர்களிடம் அதெல்லாம் ஓரளவிற்கே உண்மை, . மற்றபடி தமிழ் நாடு பல துறைகளில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்று வாதிட்டாலும், உள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. நம்மிடம் பல திறமைகள் இருந்தும் கூட நாம் ஏன் பெருமளவிற்கு முன்னேற வில்லை.நமது மாநிலம் இந்தியாவில், கல்வியறிவில் மட்டுமே முன்னணி மாநிலமாக இருந்து என்ன பயன்? சோழர் கால பெருமையை என்றைக்கு மீட்டு எடுப்பது? (த...

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி - ஒரு இந்திய பார்வை - பகுதி 2

கடந்த வாரத்தில், நமது பங்கு சந்தை மிகப் பெரும் சரிவை சந்தித்தது. இது தொடக்கத்தின் முடிவா அல்லது முடிவின் தொடக்கமா? சரிவிற்கான முக்கிய காரணிகள்- * அமெரிக்க வங்கிகளின் தொடரும் வீழ்ச்சி. * அவற்றை மீட்பதற்க்காக தாக்கல் செய்யப் பட்ட மசோதா, அமெரிக்க பாராளுமன்றத்தில், ஒப்புதல் பெற தாமதம். * மேற்கண்ட பிரச்சினைகளினால், அமெரிக்க-இநதிய அணு சக்தி ஒப்பந்தத்தின் ஒப்புதலும் கால தாமதம் ஆவது * அமெரிக்க வங்கிகள், இந்திய பங்கு சந்தையில், தொடர்ந்து தங்களது முதலீட்டுகளை திரும்ப பெறுவது. நமது சந்தை தற்போது வாழ்வா அல்லது சாவா என்ற நெருக்கடி நிலையில் உள்ளது. சென்செக்ஸ், 12500 (approx), என்ற அளவில் நல்ல அரணின் (Support) மிக அருகாமையில் உள்ளது. கடந்த சில நாட்களில், இரு முறை இந்த அளவிலிருந்து மீண்டு எழுந்துள்ளது. இந்த முறை கூட, மேற்குறிப்பிட்டுள்ள அளவுகளுக்கு அருகே செல்ல அதிக வாய்ப்புள்ளது. அந்த "அரண்" முறிக்கப் பட்டால் , பத்தாயிரம் புள்ளிகளுக்கும் கீழ் செல்லவும் வாய்ப்புள்ளது. குறுகிய கால கண்ணோட்டத்தில், நோக்கும் போது, சந்தையின் நிலை மிகவும் தடுமாற்றமாகவே இருக்கும். கீழ் காணும் சில கேள்விகளுக்கு பதில...

இ(தயத்)தையும் கொஞ்சம் கவனியுங்கள்!

நேற்றைய தினத்தாள்களை படித்து கொண்டிருக்கும் போது, ஒரு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி தொகுப்பை பார்த்தேன். அதில், இந்தியாவில் மரணம் ஏற்படுத்தக் கூடிய வியாதிகளில் இதய நோயே முன்னணி வகிக்கிறது என்று குறிப்படப் பட்டிருந்தது. மேலும் WHO வின் ஒரு அறிக்கையில், வருங்காலத்தில், மேலை நாடுகளில், இதய நோய் வாய்ப்புக்கள் குறையும் போது, இந்தியாவில் மட்டும், இதய நோய் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகி உள்ளது என்றும் குறிப்படப் பட்டிருந்தது. . ஏற்கனவே, விவாதித்த படி, நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதாது. அதை வல்லமையானதாகவும், பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, நம்மை சார்ந்தது. இதயத்தை பாதுகாக்க சில குறிப்புகள். 30 நிமிட உடற்பயிற்சி, எளிமையானதே போதும். ஆனால் ரெகுலராக இருக்க வேண்டும். உற்சாக நடை அல்லது மெல்லிய ஓட்டம் (jogging) நல்லது. அது மட்டுமில்லாது அலுவலகத்திலும் தொடர்ந்து உட்கார்ந்தே இருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளுக்கு ஒருமுறை நடந்து வருவது நல்லது. புகை பிடித்தல் அறவே கூடாது. மது வகைகள் குறைக்கப் பட வேண்டும். காபி மற்றும் தேநீர் குறையுங்கள். சத்தற்ற உணவுகள் (Junk Foods like pizza, burger, carbo...

இந்தியாவிற்கு வயது இப்போ 61!

நேற்றைய பதிவின், பின் குறிப்பில் சொல்லியிருந்த கருத்து கீழே: 21 வயதில் சோசலிசம் பேசாதவனுக்கு இதயம் இல்லை. 50 வயதில் காபிடலிசம் பேசாதவனுக்கு மூளை இல்லை. இதை எனக்கு நேற்று சொன்ன எனது மரியாதைக்குரிய நண்பர், இன்று மேற்சொன்ன வழக்கு மொழிக்கு புதிய விளக்கம் கூறினார். எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் கூட பிடிக்கும் என நம்புகிறேன். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது 1947 இல். தனது இளமை வயதில் இதே நாடு (1980 கள் வரை), சோசலிசம் பேசியது. 29 ஆவது வயதில் (1976), இந்திய அரசியல் சட்ட முன்னுரையில் (Preamble) "SOCIALIST" என்ற வார்த்தை சேர்க்கப் பட்டது. (ஆதாரம்:Introduction to the Constitution of India, by Durga Das Basu, பக்கம் 26, 42 ஆவது அரசியல் சட்ட திருத்தம், 1976) சுதந்திர இந்தியாவிற்கு வயது இப்போ 61. நமது நாடு 43 வயதிலிருந்து காபிடலிசம் பேசுகிறது (1990 களில் இந்திய பொருளாதாரம் மேற்கத்திய பாணியை பின் பற்ற ஆரம்பித்தது.) நன்றி. வணக்கம்.

கம்யூனிச அமெரிக்காவும் முதாலாளித்துவ சீனாவும் - ஓர் அலசல்.

தற்போது உலக நாடுகள், முன் எப்போதும் சந்தித்திராத அளவிற்கு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை சந்தித்து வருகின்றன. அவற்றில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியவை - அமெரிக்கா கம்யூனிச நாடாகவும் சீனா முதலாளித்துவ நாடாகவும் மாறி வருவது ஆகும். அது குறித்து சற்றே இங்கு அலசுவோம். கார்ல் மார்க்ஸ் கண்ட கம்யூனிச சித்தாந்தந்தின் அடிப்படை கூறுகளாவன. 1. Egalitarian Society - எல்லாரும் சமம் என்ற சமுதாயம் 2. Classless Society - ஏற்ற தாழ்வற்ற நிலை 3. Stateless Society - அரசாங்கத்தின் தலையீடு குறைவான சமூகம். 4. மேலும் உற்பத்தி மற்றும் இதர சொத்துக்கள் பொது உடைமையாக இருத்தல். கார்ல் மார்க்ஸ், உழைக்கும் மக்களே மூல தனம் என்றும், கம்யூனிசம், தனி மனித சுதந்திரத்தின் முழுமையை அடைய உதவும் என்றும் நம்பினார். கம்யூனிச சித்தாந்தம் உலகம் ஒன்றே என்றே கூறுகிறது. உலக வரைபட எல்லைக்கோடுகளை எப்போதும் நம்புவதில்லை. அமெரிக்கா, கடந்த சிலகாலமாகவே கம்யூனிச பாதையில் சென்று வருகிறது. அமெரிக்காவின் கம்யூனிச போக்கிற்கு, சில உதாரணங்கள், கீழே கொடுக்க பட்டு உள்ளன. அமெரிக்கா...

பங்கு சந்தை 2008 - புதிய கலை சொல் அகராதி

தமிழ் வாசகர்களே! பங்கு சந்தைக்கான புதிய கலை சொல் அகராதியை பார்க்க வேண்டுமா? இதற்க்கான ஆங்கில பதிப்பினை பாருங்கள். http://maximumindia.blogspot.com/2008/09/new-investment-vocabulary.ஹ்த்ம்ல் நன்றி. வணக்கம்.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி - ஒரு இந்திய பார்வை பகுதி 1.

அமெரிக்கா தற்போது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பங்கு மற்றும் இதர சந்தைகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. பழம்பெருமை மிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. ம ற்ற வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. பல வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளன. வங்கிகளை மீட்டெடுக்க அரசு சுமார் $1.8 trillion டாலர் (அதாவது 82 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்து உள்ளது. இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதார உற்பத்தியை (GDP) போல சுமார் 2 மடங்கு. பல்லாயிரக்கணக்கனோர் வேலை இழந்து உள்ளனர். இத்தகைய வீழ்ச்சிக்கான காரணிகள் யாவை மற்றும் இவற்றினால் இந்தியாவிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து இங்கு ஆராயலாம். கடந்த சில காலமாக Subprime Crisis (தரம் குறைந்த கடன் நெருக்கடி) குறித்து பல நிபுணர்களும் பல்வேறு ஊடகங்களில் விவாதித்து வருகின்றன. Subprime Crisis (தரம் குறைந்த கடன் நெருக்கடி) ஆதி மூலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள 2008 களின் துவக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏற்கனவே பொருளாதார சரிவை சந்தித்து கொண்டிருந்த அமெரிக்காவை ...

சந்தை நிலவரம் 22.09.2008

அன்புள்ள தமிழ் வாசகர்களே! அமெரிக்க அரசாங்கம் சென்ற வார இறுதியில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. 1. பாதிக்கபட்ட நிதி நிறுவனங்களை அரசுடமை ஆக்குதல் 2. விற்று பின் வாங்கும் வியாபாரம் - சில நிறுவனங்களின் பங்குகளில் தடை செய்தல். 3. நிதி தட்டுபாட்டை நீக்க புதியதொரு நிதிய கூட்டமைப்பை உருவாக்குதல். இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக சென்ற வார இறுதியில் அனைத்து உலக சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் என்னை பொறுத்த வரையிலும் இது குறுகிய கால முன்னேற்றம் மட்டுமே. வரும் வார துவக்கம் சிறப்பாக இருந்தாலும் கூட, வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சென்ற வாரம் வாங்கிய பங்குகள் நன்கு உயர்ந்து இருக்கும் பட்சத்தில் விற்று விடுவது நல்லது. பாரதி 835 , ரிலையன்ஸ் 2140, இன்போசிஸ் 1685, டாடா கன்சல்டன்சி 845 அளவுகளில் லாபத்தில் விற்கலாம். ரூபாய் 47 லில் கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. பங்கு சந்தை மற்றும் கச்சா ஆயில் நிலவரத்தை பொறுத்து ரூபாய் வியாபாரம் இருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள். எச்சரிக்கை: பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இங்கு தரப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் நோக்...

தற்போதைய சந்தை மதிப்பீடு 15.09.2008

சந்தையில் தற்போது இலக்கற்ற நிலையே நிலவுகிறது. எனவே முதலீட்டாளர்கள் சற்றே விலகி இருப்பது நல்லது. இருப்பினும் தொலைநோக்கில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் மேலும் சற்று விலை குறையும் பட்சத்தில் வாங்கலாம். ரிலையன்ஸ் பங்கு சுமார் ரூ 1900 க்கு கீழ் மற்றும் பாரதி ரூ.730 க்கு கீழ் வரும் போதும் வாங்கலாம். அதேபோல் டாட்டா கன்சல்டன்சி பங்கினை 800 அளவிலும் இன்போசிஸ் 1575 அளவிலும் தொலை நோக்கு இலக்குடன் வாங்கலாம். எச்சரிக்கை: பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இங்கு தரப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.