Sunday, September 21, 2008

சந்தை நிலவரம் 22.09.2008


அன்புள்ள தமிழ் வாசகர்களே!

அமெரிக்க அரசாங்கம் சென்ற வார இறுதியில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

1. பாதிக்கபட்ட நிதி நிறுவனங்களை அரசுடமை ஆக்குதல்
2. விற்று பின் வாங்கும் வியாபாரம் - சில நிறுவனங்களின் பங்குகளில் தடை செய்தல்.
3. நிதி தட்டுபாட்டை நீக்க புதியதொரு நிதிய கூட்டமைப்பை உருவாக்குதல்.

இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக சென்ற வார இறுதியில் அனைத்து உலக சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் உயர்ந்து காணப்பட்டது.

ஆனால் என்னை பொறுத்த வரையிலும் இது குறுகிய கால முன்னேற்றம் மட்டுமே.

வரும் வார துவக்கம் சிறப்பாக இருந்தாலும் கூட, வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சென்ற வாரம் வாங்கிய பங்குகள் நன்கு உயர்ந்து இருக்கும் பட்சத்தில் விற்று விடுவது நல்லது. பாரதி 835 , ரிலையன்ஸ் 2140, இன்போசிஸ் 1685, டாடா கன்சல்டன்சி 845 அளவுகளில் லாபத்தில் விற்கலாம்.

ரூபாய் 47 லில் கடும் எதிர்ப்பை சந்திக்கிறது. பங்கு சந்தை மற்றும் கச்சா ஆயில் நிலவரத்தை பொறுத்து ரூபாய் வியாபாரம் இருக்கும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

எச்சரிக்கை: பங்கு முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இங்கு தரப்படும் விவரங்கள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.

1 comment:

KARTHIK said...

தங்களின் இந்த தமிழ் வலைதளம் மகிழ்ச்சியளிக்கிறது
தொடருங்கள் வாழ்த்துக்கள்.

Blog Widget by LinkWithin