Skip to main content

இ(தயத்)தையும் கொஞ்சம் கவனியுங்கள்!

நேற்றைய தினத்தாள்களை படித்து கொண்டிருக்கும் போது, ஒரு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி தொகுப்பை பார்த்தேன். அதில், இந்தியாவில் மரணம் ஏற்படுத்தக் கூடிய வியாதிகளில் இதய நோயே முன்னணி வகிக்கிறது என்று குறிப்படப் பட்டிருந்தது.

மேலும் WHO வின் ஒரு அறிக்கையில், வருங்காலத்தில், மேலை நாடுகளில், இதய நோய் வாய்ப்புக்கள் குறையும் போது, இந்தியாவில் மட்டும், இதய நோய் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகி உள்ளது என்றும் குறிப்படப் பட்டிருந்தது. .

ஏற்கனவே, விவாதித்த படி, நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதாது. அதை வல்லமையானதாகவும், பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, நம்மை சார்ந்தது.

இதயத்தை பாதுகாக்க சில குறிப்புகள்.

30 நிமிட உடற்பயிற்சி, எளிமையானதே போதும். ஆனால் ரெகுலராக இருக்க வேண்டும்.

உற்சாக நடை அல்லது மெல்லிய ஓட்டம் (jogging) நல்லது.

அது மட்டுமில்லாது அலுவலகத்திலும் தொடர்ந்து உட்கார்ந்தே இருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளுக்கு ஒருமுறை நடந்து வருவது நல்லது.

புகை பிடித்தல் அறவே கூடாது.

மது வகைகள் குறைக்கப் பட வேண்டும்.

காபி மற்றும் தேநீர் குறையுங்கள்.

சத்தற்ற உணவுகள் (Junk Foods like pizza, burger, carbonated drinks etc) கூடவே கூடாது.

கவனம்.

உணவின் அளவை குறைப்பதை விட உணவு பழக்க முறை மாற்றுவது நல்லது.

தமிழர்க்கு ஒரு கெட்ட பழக்கம். வயிறு நிறைய சாப்பிட வேண்டும். அதுவும் அரிசி உணவே எப்போதும். சாதம், இட்லி, தோசை (ம) ஆப்பம் என ஒரே அரிசி வகையறாதான்.

40-50 வருடங்களுக்கு (அதாவது பசுமை புரட்சிக்கு முன்) இவ்வளவு அரிசி உபயோகம் இல்லை.

அரிசி உபயோகத்தை குறைப்பது நல்லது. அதற்க்கு பதிலாக, கோதுமை, கம்பு, கேழ்வரகு, பருப்பு வகைகள் அதிகம் சேர்ப்பது நல்லது. மேலும் வயிறு இன்னும் கொஞ்சம் கேட்கும் போதே நிறுத்தி கொள்வது நல்லது.

காலையில் அதிகம், மதியம் சற்றே குறைவு மற்றும் இரவில் மிக குறைவு என்ற வழக்கம் ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

ஜெய்னர்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, சூரியன் மறைவுக்கு பின் சாப்பிட மாட்டார்கள்.

அதன் சாராம்சம். இரவில் வயிற்றில் குறைந்த அளவு எனில் இருதயத்துக்கு குறைந்த பளு மற்றும் வேலை.

கொழுப்பு குறைந்த மாமிச உணவுகளை குறைத்து மீன் போன்ற உணவை அதிகம் சேருங்கள்.

பழம், காய்கறி மற்றும் கீரைகள் நல்லது.

உப்பு, எண்ணெய் அளவு குறையுங்கள்.

எடை அளவாக இருப்பது நல்லது (உயரத்திற்கு தகுந்தால் போல்). அதற்காக ஒரேயடியாக, ஒரே வேகத்தில் குறைப்பது நல்லது அல்ல.

மன சமநிலை முக்கியம்.

அலுவலக சிந்தனைகளை வீட்டில் உலவ விடாதீர்கள், குழந்தைகளுடன், அதிக நேரம் செலவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். வருத்தப் படுவதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை.

தியானம் நல்லது. கடவுள் பக்தி உதவும்.


நாளை (28.09.2008), உலக இருதய நாள்.

நாளை, நாம் அனைவரும் ஒரு உறுதி மொழி எடுத்து கொள்வோம்.

அனைவர்க்கும் சொல்வோம்!


இதயத்தைப் பாதுகாப்போம்!


வருமுன் காப்போம்!


உலக இருதய நாள் வாழ்த்துக்கள்!

Comments

நலம் பயக்கும் அறிவுரைகள்.
இதய நாளை முன்னிட்டு வந்த உங்கள் பதிவு மிகவும் அருமை.
நன்றி.
Mohana Murali said…
இரா.மோகன முரளி

உலக இதய தினத்தை முன்னிட்டு வெளி இட்ட வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த இதய நாளில் உடல் தானத்தை ஊக்குவிப்போம்.
KARTHIK said…
// புகை பிடித்தல் அறவே கூடாது.

மது வகைகள் குறைக்கப் பட வேண்டும்.

காபி மற்றும் தேநீர் குறைங்கள்.//

((-:

plz remove this Word Verification

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...