Saturday, September 27, 2008

இ(தயத்)தையும் கொஞ்சம் கவனியுங்கள்!


நேற்றைய தினத்தாள்களை படித்து கொண்டிருக்கும் போது, ஒரு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி தொகுப்பை பார்த்தேன். அதில், இந்தியாவில் மரணம் ஏற்படுத்தக் கூடிய வியாதிகளில் இதய நோயே முன்னணி வகிக்கிறது என்று குறிப்படப் பட்டிருந்தது.

மேலும் WHO வின் ஒரு அறிக்கையில், வருங்காலத்தில், மேலை நாடுகளில், இதய நோய் வாய்ப்புக்கள் குறையும் போது, இந்தியாவில் மட்டும், இதய நோய் மரணங்கள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகி உள்ளது என்றும் குறிப்படப் பட்டிருந்தது. .

ஏற்கனவே, விவாதித்த படி, நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதாது. அதை வல்லமையானதாகவும், பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, நம்மை சார்ந்தது.

இதயத்தை பாதுகாக்க சில குறிப்புகள்.

30 நிமிட உடற்பயிற்சி, எளிமையானதே போதும். ஆனால் ரெகுலராக இருக்க வேண்டும்.

உற்சாக நடை அல்லது மெல்லிய ஓட்டம் (jogging) நல்லது.

அது மட்டுமில்லாது அலுவலகத்திலும் தொடர்ந்து உட்கார்ந்தே இருக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளுக்கு ஒருமுறை நடந்து வருவது நல்லது.

புகை பிடித்தல் அறவே கூடாது.

மது வகைகள் குறைக்கப் பட வேண்டும்.

காபி மற்றும் தேநீர் குறையுங்கள்.

சத்தற்ற உணவுகள் (Junk Foods like pizza, burger, carbonated drinks etc) கூடவே கூடாது.

கவனம்.

உணவின் அளவை குறைப்பதை விட உணவு பழக்க முறை மாற்றுவது நல்லது.

தமிழர்க்கு ஒரு கெட்ட பழக்கம். வயிறு நிறைய சாப்பிட வேண்டும். அதுவும் அரிசி உணவே எப்போதும். சாதம், இட்லி, தோசை (ம) ஆப்பம் என ஒரே அரிசி வகையறாதான்.

40-50 வருடங்களுக்கு (அதாவது பசுமை புரட்சிக்கு முன்) இவ்வளவு அரிசி உபயோகம் இல்லை.

அரிசி உபயோகத்தை குறைப்பது நல்லது. அதற்க்கு பதிலாக, கோதுமை, கம்பு, கேழ்வரகு, பருப்பு வகைகள் அதிகம் சேர்ப்பது நல்லது. மேலும் வயிறு இன்னும் கொஞ்சம் கேட்கும் போதே நிறுத்தி கொள்வது நல்லது.

காலையில் அதிகம், மதியம் சற்றே குறைவு மற்றும் இரவில் மிக குறைவு என்ற வழக்கம் ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

ஜெய்னர்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, சூரியன் மறைவுக்கு பின் சாப்பிட மாட்டார்கள்.

அதன் சாராம்சம். இரவில் வயிற்றில் குறைந்த அளவு எனில் இருதயத்துக்கு குறைந்த பளு மற்றும் வேலை.

கொழுப்பு குறைந்த மாமிச உணவுகளை குறைத்து மீன் போன்ற உணவை அதிகம் சேருங்கள்.

பழம், காய்கறி மற்றும் கீரைகள் நல்லது.

உப்பு, எண்ணெய் அளவு குறையுங்கள்.

எடை அளவாக இருப்பது நல்லது (உயரத்திற்கு தகுந்தால் போல்). அதற்காக ஒரேயடியாக, ஒரே வேகத்தில் குறைப்பது நல்லது அல்ல.

மன சமநிலை முக்கியம்.

அலுவலக சிந்தனைகளை வீட்டில் உலவ விடாதீர்கள், குழந்தைகளுடன், அதிக நேரம் செலவிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். வருத்தப் படுவதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை.

தியானம் நல்லது. கடவுள் பக்தி உதவும்.


நாளை (28.09.2008), உலக இருதய நாள்.

நாளை, நாம் அனைவரும் ஒரு உறுதி மொழி எடுத்து கொள்வோம்.

அனைவர்க்கும் சொல்வோம்!


இதயத்தைப் பாதுகாப்போம்!


வருமுன் காப்போம்!


உலக இருதய நாள் வாழ்த்துக்கள்!

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

நலம் பயக்கும் அறிவுரைகள்.
இதய நாளை முன்னிட்டு வந்த உங்கள் பதிவு மிகவும் அருமை.
நன்றி.

Mohana Murali said...

இரா.மோகன முரளி

உலக இதய தினத்தை முன்னிட்டு வெளி இட்ட வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த இதய நாளில் உடல் தானத்தை ஊக்குவிப்போம்.

SurveySan said...

ok.

KARTHIK said...

// புகை பிடித்தல் அறவே கூடாது.

மது வகைகள் குறைக்கப் பட வேண்டும்.

காபி மற்றும் தேநீர் குறைங்கள்.//

((-:

plz remove this Word Verification

Blog Widget by LinkWithin