Skip to main content

சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், உலகெங்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் ஒரு நாடு சீனா. பொருளாதார தளர்ச்சியில் பல மேற்கத்திய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தனது அபரிமிதமான வளர்ச்சி வேகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒரு நாடு சீனா. இந்த நாட்டின் வேகமான வளர்ச்சியின் பலனை அடைய விரும்புவர்களுக்கு இப்போது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவில் முதலீடு செய்யலாம் என்பது ஒரு வரவேற்கத் தக்க செய்திதானே?

இந்தியாவின் பெஞ்ச்மார்க் முயுச்சுவல் பன்ட் (Benchmark Mutual Fund) இப்போது "ஹாங்செங் பங்கு குறியீட்டு நிதியினை (Hang Seng Benchmark Exchange Traded Scheme) " அறிமுகப் படுத்துகின்றது. இந்த நிதியில் தொண்ணூறு சதவீதம் ஹாங் செங் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப் படும். மீதம் உள்ள பத்து சதவீதம் நிதி மற்ற முதலீடுகளுக்காக உபயோகிக்கப் படும். இந்த நிதியின் போக்கு கிட்டத்தட்ட ஹாங்செங் குறியீட்டின் போக்கினை சார்ந்தே இருக்கும். இந்த நிதியில் குறைந்த பட்சம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூபாய் - பத்தாயிரம். கடந்த பெப்ரவரி 15 துவங்கிய இந்த புதிய பரஸ்பர நிதி பெப்ரவரி 24 வரை முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும்.

ஏற்கனவே சில பதிவுகளில் கூறியபடி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவை மிஞ்சும் நாள் தூரத்தில் இல்லை என்பதும் இந்திய தனியார் நிறுவனங்களின் வணிகம் மற்றும் மேலாண்மை திறன் சீனா நிறுவனங்களை விடவும் அதிகமாகவே இருந்து வருகின்றது என்பதையும் இங்கு மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். (இந்தியாவின் வளர்ச்சி சீனாவை மிஞ்சாது என்று பந்தயம் கட்டும் சில நண்பர்களுக்கு ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்தியா விஞ்சும் என்று கடைசியாக சொன்னது சீனாவை சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர்தான்.) எனவே இந்திய பங்குகளும் சிறப்பான வாய்ப்புக்களை தந்த வண்ணமே இருக்கின்றன.

அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, சீனாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியின் பயனை அடைய விரும்புபவர்களுக்கும், உலக பங்கு சந்தைகளில் தமது முதலீடுகளை விரிவு படுத்த விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

டிஸ்கி: பங்குசந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதர டிஸ்கிகளுக்கு பரஸ்பர நிதியின் விண்ணப்பத்தினை கவனமாக படிக்கவும்.

Comments

ரவி said…
வேர்ல்ட் எக்ப்போ 2010 ஷாங்காய்ல நடக்குது. பிஸினஸ் செய்ய நினைப்பவர்கள் ஒரு ட்ரிப் அடிக்கலாம்.

http://en.expo2010.cn/
Maximum India said…
தகவலுக்கு நன்றி ரவி!
Btc Guider said…
பங்கு சந்தை போகும் போக்கை பார்த்தால் எனக்கென்னவோ இந்தியா சீனாவை மிஞ்சுமா என்ற சந்தேகம்தான்?
பகிர்வுக்கு நன்றி சார்.
Thomas Ruban said…
தகவலுக்கு நன்றி சார். இருந்தாலும்......

பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி ரஹ்மான்!
நன்றி தாமஸ் ரூபன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...