Skip to main content

சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், உலகெங்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் ஒரு நாடு சீனா. பொருளாதார தளர்ச்சியில் பல மேற்கத்திய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தனது அபரிமிதமான வளர்ச்சி வேகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒரு நாடு சீனா. இந்த நாட்டின் வேகமான வளர்ச்சியின் பலனை அடைய விரும்புவர்களுக்கு இப்போது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவில் முதலீடு செய்யலாம் என்பது ஒரு வரவேற்கத் தக்க செய்திதானே?

இந்தியாவின் பெஞ்ச்மார்க் முயுச்சுவல் பன்ட் (Benchmark Mutual Fund) இப்போது "ஹாங்செங் பங்கு குறியீட்டு நிதியினை (Hang Seng Benchmark Exchange Traded Scheme) " அறிமுகப் படுத்துகின்றது. இந்த நிதியில் தொண்ணூறு சதவீதம் ஹாங் செங் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப் படும். மீதம் உள்ள பத்து சதவீதம் நிதி மற்ற முதலீடுகளுக்காக உபயோகிக்கப் படும். இந்த நிதியின் போக்கு கிட்டத்தட்ட ஹாங்செங் குறியீட்டின் போக்கினை சார்ந்தே இருக்கும். இந்த நிதியில் குறைந்த பட்சம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூபாய் - பத்தாயிரம். கடந்த பெப்ரவரி 15 துவங்கிய இந்த புதிய பரஸ்பர நிதி பெப்ரவரி 24 வரை முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும்.

ஏற்கனவே சில பதிவுகளில் கூறியபடி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவை மிஞ்சும் நாள் தூரத்தில் இல்லை என்பதும் இந்திய தனியார் நிறுவனங்களின் வணிகம் மற்றும் மேலாண்மை திறன் சீனா நிறுவனங்களை விடவும் அதிகமாகவே இருந்து வருகின்றது என்பதையும் இங்கு மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். (இந்தியாவின் வளர்ச்சி சீனாவை மிஞ்சாது என்று பந்தயம் கட்டும் சில நண்பர்களுக்கு ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்தியா விஞ்சும் என்று கடைசியாக சொன்னது சீனாவை சேர்ந்த ஒரு பொருளாதார நிபுணர்தான்.) எனவே இந்திய பங்குகளும் சிறப்பான வாய்ப்புக்களை தந்த வண்ணமே இருக்கின்றன.

அதே சமயம், ஏற்கனவே சொன்னபடி, சீனாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியின் பயனை அடைய விரும்புபவர்களுக்கும், உலக பங்கு சந்தைகளில் தமது முதலீடுகளை விரிவு படுத்த விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

டிஸ்கி: பங்குசந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதர டிஸ்கிகளுக்கு பரஸ்பர நிதியின் விண்ணப்பத்தினை கவனமாக படிக்கவும்.

Comments

ரவி said…
வேர்ல்ட் எக்ப்போ 2010 ஷாங்காய்ல நடக்குது. பிஸினஸ் செய்ய நினைப்பவர்கள் ஒரு ட்ரிப் அடிக்கலாம்.

http://en.expo2010.cn/
Maximum India said…
தகவலுக்கு நன்றி ரவி!
Btc Guider said…
பங்கு சந்தை போகும் போக்கை பார்த்தால் எனக்கென்னவோ இந்தியா சீனாவை மிஞ்சுமா என்ற சந்தேகம்தான்?
பகிர்வுக்கு நன்றி சார்.
Thomas Ruban said…
தகவலுக்கு நன்றி சார். இருந்தாலும்......

பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி ரஹ்மான்!
நன்றி தாமஸ் ரூபன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.