இந்தியாவில் மற்ற பலவற்றையும் போலவே "தேசிய ஒருமைப்பாட்டு கூக்குரல்களும்" போலியானவையே என்று தோன்றுகிறது.
தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம், ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர்.
சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". "மும்பையை காப்பாற்றியது உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தில் பிறந்த "தேசிய படைவீரர்கள்" வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதல்லவா?
காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரிவினைவாதங்களின் ஆரம்பக்கட்டங்களில், வலுவான உள்ளூர் அரசியல் கட்சியை ஒடுக்குவதற்காக பிரிவினைவாதிகளை வளரவிட்டதும், சமீபத்திய தெலுங்கானா பிரச்சினையில் இரண்டு பக்கமும் தலையையும் வாலையும் காட்டியதும் பெரிய தேசிய கட்சிகள்தான் என்பதையும் யாரும் மறக்க முடியாது.
நம்மூர் பாமாகவைப் போலவே சிவசேனாவும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை கூறினாலும், அவர்களுடைய நம்பகத்தன்மை குறைவாக உள்ளதானால் மக்கள் அவற்றை முழுமையாக புறக்கணிக்கின்றனர். ஆனால் இவர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ராகுல் காந்தி போன்ற "பச்சோந்தி தேசியவாதிகள்" என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் வெளிப்படையாக தெரிந்து விட்டால் எளிதாக ஒதுங்கி விடலாம். நல்லவர்கள் போல நாடகமாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதுதான் மிகவும் கடினமான காரியம்.
நன்றி.
பின்குறிப்பு
இந்த பதிவை எழுத தூண்டுகோலாக அமைந்தவை
தேன்கூடு
திருச்சிக்காரன்
தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம், ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர்.
சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". "மும்பையை காப்பாற்றியது உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தில் பிறந்த "தேசிய படைவீரர்கள்" வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதல்லவா?
காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரிவினைவாதங்களின் ஆரம்பக்கட்டங்களில், வலுவான உள்ளூர் அரசியல் கட்சியை ஒடுக்குவதற்காக பிரிவினைவாதிகளை வளரவிட்டதும், சமீபத்திய தெலுங்கானா பிரச்சினையில் இரண்டு பக்கமும் தலையையும் வாலையும் காட்டியதும் பெரிய தேசிய கட்சிகள்தான் என்பதையும் யாரும் மறக்க முடியாது.
நம்மூர் பாமாகவைப் போலவே சிவசேனாவும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை கூறினாலும், அவர்களுடைய நம்பகத்தன்மை குறைவாக உள்ளதானால் மக்கள் அவற்றை முழுமையாக புறக்கணிக்கின்றனர். ஆனால் இவர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ராகுல் காந்தி போன்ற "பச்சோந்தி தேசியவாதிகள்" என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் வெளிப்படையாக தெரிந்து விட்டால் எளிதாக ஒதுங்கி விடலாம். நல்லவர்கள் போல நாடகமாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதுதான் மிகவும் கடினமான காரியம்.
நன்றி.
பின்குறிப்பு
இந்த பதிவை எழுத தூண்டுகோலாக அமைந்தவை
தேன்கூடு
திருச்சிக்காரன்
Comments
நல்ல சிந்தனை. பதிவுக்கு நன்றி சார்.
உண்மைதான் தாமஸ் ரூபன்!
நன்றி!
அதான் அவரை விட்டு ஏதாவது செய்தி வந்திட்டிருக்கு!!!
திடீர்னு இறங்கி ரெண்டாம் வகுப்பு ரயில் பெட்டிக்கு போனாராம், எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்களாம், ஏடிஎம் ல பணம் எடுத்தாராம்,(பாஸ் நீங்க எங்க எதுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் வந்துதுன்னு சொல்ல முடியுமா!!!)
இதெல்லாம் கூட விட்டுடல்லாம்....ஆனா இந்த மாதிரி காரியாங்களாலேயே அவரு பெருசா சாதிச்சிட்டாருன்னு சொல்ற கூட்டத்தை நினைச்சாத்தான் பயமா இருக்கு!!!!