Skip to main content

இதுவும் போலிதான்!

இந்தியாவில் மற்ற பலவற்றையும் போலவே "தேசிய ஒருமைப்பாட்டு கூக்குரல்களும்" போலியானவையே என்று தோன்றுகிறது.

தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம், ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர்.

சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". "மும்பையை காப்பாற்றியது உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தில் பிறந்த "தேசிய படைவீரர்கள்" வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதல்லவா?

காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரிவினைவாதங்களின் ஆரம்பக்கட்டங்களில், வலுவான உள்ளூர் அரசியல் கட்சியை ஒடுக்குவதற்காக பிரிவினைவாதிகளை வளரவிட்டதும், சமீபத்திய தெலுங்கானா பிரச்சினையில் இரண்டு பக்கமும் தலையையும் வாலையும் காட்டியதும் பெரிய தேசிய கட்சிகள்தான் என்பதையும் யாரும் மறக்க முடியாது.

நம்மூர் பாமாகவைப் போலவே சிவசேனாவும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை கூறினாலும், அவர்களுடைய நம்பகத்தன்மை குறைவாக உள்ளதானால் மக்கள் அவற்றை முழுமையாக புறக்கணிக்கின்றனர். ஆனால் இவர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ராகுல் காந்தி போன்ற "பச்சோந்தி தேசியவாதிகள்" என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் வெளிப்படையாக தெரிந்து விட்டால் எளிதாக ஒதுங்கி விடலாம். நல்லவர்கள் போல நாடகமாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதுதான் மிகவும் கடினமான காரியம்.

நன்றி.

பின்குறிப்பு

இந்த பதிவை எழுத தூண்டுகோலாக அமைந்தவை

தேன்கூடு

திருச்சிக்காரன்

Comments

Thomas Ruban said…
அரசியல்வாதிகளிடம் சில விசியங்களை எதிர்ப்பார்க்ககூடது (அதுவும் முக்கியமாக தேர்தல் நேரங்களில்). ராகுல் காந்தியும் விதி விலக்கல்ல!!!

நல்ல சிந்தனை. பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
// அரசியல்வாதிகளிடம் சில விசியங்களை எதிர்ப்பார்க்ககூடது (அதுவும் முக்கியமாக தேர்தல் நேரங்களில்). ராகுல் காந்தியும் விதி விலக்கல்ல!!!//

உண்மைதான் தாமஸ் ரூபன்!

நன்றி!
Naresh Kumar said…
இங்க நோக்கம், அடுத்த பிரதமர் பதவிக்கு அவரை தயார் செய்யனும்...

அதான் அவரை விட்டு ஏதாவது செய்தி வந்திட்டிருக்கு!!!

திடீர்னு இறங்கி ரெண்டாம் வகுப்பு ரயில் பெட்டிக்கு போனாராம், எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்களாம், ஏடிஎம் ல பணம் எடுத்தாராம்,(பாஸ் நீங்க எங்க எதுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் வந்துதுன்னு சொல்ல முடியுமா!!!)

இதெல்லாம் கூட விட்டுடல்லாம்....ஆனா இந்த மாதிரி காரியாங்களாலேயே அவரு பெருசா சாதிச்சிட்டாருன்னு சொல்ற கூட்டத்தை நினைச்சாத்தான் பயமா இருக்கு!!!!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...