Skip to main content

வேலை தேடி வந்த ஒபாமா!

பொதுவாக, வேலை தேடி அமெரிக்காவிற்கு செல்வது இந்தியர்களின் வாடிக்கை. அதுவும் அமெரிக்க தூதகரங்களின் வாசலில் விசா வேண்டி தவமிருப்பவர்கள் இந்தியாவில் ஏராளம். ஆனால் ஒரு மாறுதலுக்காக இப்போது ஒபாமா வேலை தேடி இந்தியாவிற்கு வந்துள்ளார்.

எப்போதுமே அமெரிக்க அதிபர்களின் வருகைகள் தில்லியை குறிவைத்தே அமைவதுண்டு. அவ்வப்போது அமெரிக்க சேவை தொழிலாளிகளின் தலை நகரங்களான பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அமெரிக்க அதிபர்களின் காலடிகள் படுவதுண்டு.

ஆனால் இந்த முறை டில்லிக்கு கொடுக்கப் பட்டது ஒரு நாள் மட்டுமே. பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் திரும்பிக் கூட பார்க்கப் படவில்லை. முதலாளிகளின் நகரமான மும்பைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதுவும் இந்திய தொழில் அதிபர்களுடன் போடப் பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கு பின்னரும், அந்த ஒப்பந்தத்தினால் எத்தனை அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகப் போகின்றன என்று வெளிப்படையாக அறிவிக்கப் பட்டது, இந்த பயணத்தின் முக்கிய நோக்கத்தினையும், காலசக்கரத்தின் மாற்றத்தையும் பறை சாற்றியது.

யாருக்குத் தெரியும்?

ஒரு ஒபாமா வேலைகள் தேடி இந்தியா வருகை தந்த இந்த காலமும் மாறிப் போய் பல ஒபாமாக்கள் வேலை தேடி இந்தியாவிற்கு ஓடி வரும் காலமும் வரலாம்!

நன்றி!

Comments

Thomas Ruban said…
//ஒரு ஒபாமா வேலைகள் தேடி இந்தியா வருகை தந்த இந்த காலமும் மாறிப் போய் பல ஒபாமாக்கள் வேலை தேடி இந்தியாவிற்கு ஓடி வரும் காலமும் வரலாம்!//

அதுவரைக்கும் நம் அரசியல்வியாதிகள் இந்தியாவை வேறு எந்த நாட்டிற்கும் விற்காமல் இருந்தால் சரி சார்.
KARTHIK said…
இதுவும் நல்லாத்தான் இருக்குங்க :-))
Maximum India said…
நன்றி கார்த்திக்!

நன்றி தாமஸ் ரூபன்!
he didn't come in search of work.
He came to rake up what is left.
He has to keep americans employed and get paid from Indians savings/resources and by making India indebted to USA.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...