Skip to main content

தோல்வி எமக்கில்லை!

எட்மன்ட் ஹில்லாரி சரித்திரத்தின் ஒரு சிறு நிகழ்வு நமக்கு ஒரு நல்ல வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.

எட்மன்ட் ஹில்லாரி - டென்சிங் இணை எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக எட்டிப் பிடித்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால், பல முறை கண்ட தோல்விக்கு பின்னர்தான் அந்த சாதனை சாத்தியமாயிற்று என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக் குறியே.

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்வதற்காக ஹில்லாரி 1951 மற்றும் 1952 ஆண்டுகளில் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தாலும், அவருடைய புகழ் இங்கிலாந்தில் பெருமளவுக்கு பரவி இருந்தது. 1952 முயற்சி தோல்வி அடைந்த சில வாரங்களுக்குள்ளேயே இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில் முக்கிய உரையாற்றும்படி ஹில்லாரிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.

மேடையை நோக்கி சென்ற ஹில்லாரிக்கு பலத்த கைத்தட்டலுடன் வரவேற்பு இருந்தது. ஆனால் மைக்கின் முன்னே நிற்காமல் சற்று ஓரமாக நின்ற ஹில்லாரி, எவரெஸ்ட் மலை படத்தை பார்த்துச் சொன்னாராம்.

" எவரெஸ்ட்! இந்த முறை என்னை தோற்கடித்து விட்டாய். ஆனால் அடுத்த முறை உன்னை நான் தோற்கடிப்பேன். காரணம், நீ வளர முடிந்த வரை வளர்ந்து விட்டாய். ஆனால் நான் இனியும் வளர்ந்து கொண்டே இருப்பேன்"

சொன்னபடியே அடுத்த வருடம் எவரெஸ்ட் மலையை முறியடித்த ஹில்லாரி, மனித முயற்சியின் மகத்துவத்தை நிலைநாட்டி உலக சரித்திரத்தில் அழியாப் புகழை பெற்றுள்ளார்.

நமது வாழ்க்கையிலும் இப்படித்தான், "தாண்டி செல்ல முடியாதோ" என்று அஞ்சும் அளவுக்கு பெரிய பெரிய பிரச்சினைகள் தடையை வந்து நிற்கின்றன.

ஹில்லாரியின் வார்த்தைகளை மனதில் பதியம் போட்டுக் கொள்வோம்.

மனித முயற்சியின் மகத்துவத்திற்கு நிகரேதுமில்லை என்பதை மனனம் செய்து கொள்வோம்.

பிரச்சினைகளை விட நாம் அதிக உயரம் வளரும் போது, எவரெஸ்ட்டும் கூட எறும்பு போல காட்சி தரும்.

நன்றி.

Comments

//பிரச்சினைகளை விட நாம் அதிக உயரம் வளரும் போது, எவரெஸ்ட்டும் கூட எறும்பு போல காட்சி தரும். //

சரியான பாயிண்ட்!
Maximum India said…
நன்றி வால்பையன்!
ஆமா சார், ஒரு நல்ல வாழ்வியல் பாடம்.
Btc Guider said…
//நமது வாழ்க்கையிலும் இப்படித்தான், "தாண்டி செல்ல முடியாதோ" என்று அஞ்சும் அளவுக்கு பெரிய பெரிய பிரச்சினைகள் தடையை வந்து நிற்கின்றன.//

முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.

அருமையான பகிர்வு நன்றி சார்.
Maximum India said…
//முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.//

உண்மைதான் ரஹ்மான்!

நன்றி.

(வெகு நாட்களுக்கு பிறகு வலைதளத்தின் ஊடே சந்திக்கிறோம். மிக்க மகிழ்ச்சி)
Maximum India said…
நன்றி பீர்!
Naresh Kumar said…
நல்ல கருத்துக்கள்....

அருமையான பகிர்வு!!!
Maximum India said…
நன்றி நரேஷ்!

உங்களிடமிருந்து கடந்த ஒரு மாதமாக பதிவுகளே இல்லையே?

அடுத்த பதிவு எப்போது?

நன்றி.
Naresh Kumar said…
//நன்றி நரேஷ்!

உங்களிடமிருந்து கடந்த ஒரு மாதமாக பதிவுகளே இல்லையே?

அடுத்த பதிவு எப்போது?//

ஆணி ஓவரு!!!

பதிவு எப்பன்னு எனக்கே தெரியலை...எப்பியாவுது சந்துல ஆட்டோ ஓட்டனும்!!!
KARTHIK said…
அருமையான பதிவுங்க
நன்றி
Maximum India said…
நன்றி கார்த்திக்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.