Skip to main content

Posts

Showing posts from January, 2010

பொருளாதார மீட்சி ஏட்டு சுரைக்காய்தானோ?

கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சி வெறும் காகித வளர்ச்சி மட்டுமே என்றும் காகிதத்தில் மட்டுமே அமெரிக்கா பொருளாதார தளர்ச்சியில் இருந்து மீண்டிருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்க அரசு வழங்கிய ஏராளமான வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள்தான் அந்நாட்டை தற்காலிகமாக பொருளாதார தளர்சசியிலிருந்து விடுபடச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. கடந்த வாரம் வெளிவந்த மிக மோசமான "வீடு விற்பனை" புள்ளிவிபரம் இந்த கருத்தினை வலுப்படுத்துகின்றது. ஏற்கனவே மிகப் பெரிய கடனாளியாக உள்ள அமெரிக்க அரசாங்கம் வரும் ஆண்டிலும் தனது மானியங்கள் மற்றும் வரிச்சலுகைகளை தொடர முடியாத பட்சத்தில், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் தடைபட வாய்ப்புள்ளது என்ற சந்தேகம் இப்போது உலக சந்தைகளில் எழுந்துள்ளது. அமெரிக்காவின் நிலை இப்படி இருக்க, ஐரோப்பிய நாடுகளின் நிலையோ இன்னும் பலவீனமாக உள்ளது. கிரீஸ் நாட்டின் (திருப்பி செலுத்த முடியாத அளவினாலான)...

வழியிலே மேடுபள்ளம்!

பெரும்பாலான உலக சந்தைகள் சென்ற வாரம் பெரியதொரு வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தன. சீனா அரசு கொண்டு வந்த கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கை, ஒபாமா அமெரிக்க வங்கிகளின் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென்று அறிமுகப் படுத்த விரும்பும் சட்ட திருத்த நடவடிக்கை மற்றும் கிரீஸ் அரசின் கடன் தடுமாற்றம் ஆகியவை பங்கு சந்தை மனநிலையை வெகுவாக பாதித்தன. உள்ளூரை பொறுத்தவரை மிகப் பெரிய கட்டுமானத்துறை நிறுவனமான லார்சென் டூப்ரோ எதிர்பார்ப்புக்கு குறைவாக லாபம் ஈட்டியது அந்த நிறுவனத்தின் பங்கினை மட்டுமல்லாமல், பல கட்டுமானப் பங்குகளையும் கீழே விழச் செய்தது. இந்தியாவின் புள்ளியியல் துறையின் தலைவர் பணவீக்க விகிதம் இரண்டு இலக்கத்தை தொட வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறியதும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததும் உள்ளூர் சந்தையை தடுமாறச் செய்தன. அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய தலைமை வங்கி "ரொக்க இருப்பு விகிதத்தை" (CRR) அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரியல் எஸ்டேட், வாகனத் துறை போன்ற Interest Rate Sensitive துறை பங்குகளை வீழ்ச்சி செய...

இந்தியா மீண்டும் வளர்ச்சி பாதையில்?

இந்தியாவின் தொழிற் உற்பத்தி கடந்த ஒரு வருடங்களாக இல்லாத அளவிற்கு (11.7%) முன்னேறி இருப்பதாக சென்ற வாரம் வெளிவந்த அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றத்தின் பெரும்பகுதி, "புள்ளியல் மாயத்தின்" (Statistical Illusion) விளைவுதான் என்றாலும், இந்திய தொழிற் துறையில் மெல்ல மெல்ல நம்பிக்கை உயர்ந்து வருவதை மறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருப்பது கவனிக்கத் தக்கது. பிரதமர் இந்தியா வெகு விரைவில் அதிவேக வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். இதை ஒரு "பேச்சினால் உயர்த்தும் (Talking up Economy) உத்தி" என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த நம்பிக்கையில் ஓரளவுக்கேனும் உண்மையில்லாமல் இல்லை. உலகப் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மிக விரைவாக மீண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சொல்லப் போனால் இந்தியாவின் வளர்ச்சி சீனாவை மிஞ்சும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பல பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் பலம் அரசின் கட்டுப்பாடுகளிலேயே அமைந்திந்திருபபதால், அது நிரந்தரமா...

என்னால் என்ன முடியும்?

விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி அவர்கள் சொன்ன கதை இது! முன்னொரு காலத்தில் ஸ்காட்லாந்தில் பிளெமிங் என்ற ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தார். ஒரு முறை வயலுக்கு சென்று திரும்பும் அவர் ஒரு அலறல் சத்தத்தை கேட்டார். விரைந்து சென்ற பார்த்த போது, அங்கே ஒரு சிறுவன் புதைகுழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்தார். நிதானமான, ஆனால் நிச்சயமான அந்த மரண பயங்கரத்தில் இருந்து அந்த சிறுவனை அவர் மீட்டெடுத்தார். அடுத்த நாள் அந்த விவசாயி வீட்டின் முன்னே ஒரு அலங்கார வண்டி வந்து நின்றது. அதில் இருந்து ஒரு கனவான் இறங்கி வந்து, தன்னை அந்த சிறுவனின் தந்தை என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். தான் நம் விவசாயிக்கு மிகுந்த கடன் பட்டிருப்பதாகவும், அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ விரும்புவதாகவும் கூறினார். அவருக்கு பிளெமிங் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார். "நன்றி ஐயா! நீங்கள் எனக்கு ஏதேனும் உதவி செய்ய விரும்பினால், என் மகனை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். அவனை படிக்க வையுங்கள். ஒருவேளை அவன் என்னைப் போலவே இருந்தால், ஒருநாள் நிச்சயமாக உங்களை பெருமை அடைய செய்வான்" அந்த சிறுவனை அழைத்துச் சென்ற கனவான், தான் வா...

ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளா?

திருட்டு டிவிடியில் சினிமா படம் பார்த்தால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் படுவர் என்று ஒரு சட்டம் வரப் போவதாக பத்திரிக்கை செய்தியில் பார்த்தவுடன் என்னுள் பல கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கே பதிய விரும்புகின்றேன். இந்த திருட்டு டிவிடி சட்டம் உள்ளூர் படங்களுக்கு மட்டும்தானா அல்லது உலகப் படங்களுக்குமா? ஒருவேளை உலக படங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினால் நிறைய ஜாம்பவான்கள் சிறையில்தானே தமிழ் படம் தயாரிக்க வேண்டியிருக்கும்? அப்படி சிறையில் இருந்துகொண்டே திரைப்படம் எடுப்பவர்கள் சிறைஞானி என்று அழைக்கப் படுவார்களா? இன்றைய தேதியில் வெளிவரும் பல தமிழ் படங்களை பார்ப்பதே ஒரு பெரிய தண்டனைதானே? இதற்கும் மேல் ஒரு குண்டர் சட்டம் தேவையா? ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்கும் சட்டம் செல்லாது என்று அரசியல் சாசனம் சொல்கின்றதே? தீவிரவாதிகள் எல்லோரும் கூவிக் கூவி திருட்டு டிவிடி விற்கிறார்கலாமே? அதனால்தான் கொஞ்ச நாட்களாக குண்டு சத்தம் குறைவாக கேட்கின்றதோ? அப்படியே அவர்களை திரைப்படங்களையும் தயாரிக்க சொல்லி விடுங்களேன். கைதாகாமலேயே நிறைய பேரை வதைக்கலாமல்லவா? இன்றைய தேதியில் நடைமுறையில் இருக்கும் ச...

அளவுக்கு மிஞ்சினால்?

இன்று காலையில் பிசினெஸ் லைன் (Business Line) பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி எனக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இதுவரை செய்துள்ள முதலீட்டின் அளவு சுமார் 85 பில்லியன் டாலர்கள். அந்த முதலீட்டின் சந்தை மதிப்பு (செப்டம்பர் 2009) சுமார் 154 பில்லியன் டாலர்கள். கடைசியாக வந்த மத்திய வங்கி (RBI) தகவலின் படி இந்தியாவின் மொத்த அந்நிய செலவாணி கையிருப்பு சுமார் 284 பில்லியன் டாலர்கள். இந்த கையிருப்பில், அந்நிய பங்கு முதலீடுகள் மட்டுமல்லாமல் ஏற்றுமதி வருவாய், அந்நிய நாடுகளிடம் கடனாக பெற்ற தொகை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிய பணம் அனைத்தும் அடங்கும். மிக எளிதில் வெளியேறக் கூடிய பங்கு முதலீட்டு பணமானது (portfolio investment) மொத்த அந்நிய செலவாணி கையிருப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேலே இருப்பது, பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைத்திருப்பதாகவே கருதுகிறேன். ஒருவேளை அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு திடீரென்று வெளியேற முற்பட்டால், முன்னொரு காலத்தில் தங்கத்தை அடகு வைத்த நிலை கூட திரும்பக் கூடும்....

புத்தாண்டே வருக! வளமான வாழ்வு தருக!

எப்போதும் போலவே கடந்த ஆண்டும் சந்தை ஏராளமான ஆச்சரியங்களை உள்ளடக்கி இருந்தது. உலக பொருளாதார சிக்கல், வலுவிழந்த இந்திய நாணயம், தெளிவில்லாத அரசியல் சூழ்நிலை ஆகியவற்றுக்கும் இடையேயும் நம்பிக்கையுடனேயே தனது கணக்கை துவங்கிய இந்திய பங்கு சந்தைக்கு ஆரம்பத்திலேயே சத்யம் எனும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. 'எந்த புற்றில் எந்த பாம்போ' என்ற அச்சம் மேலும் மேலும் வலுவடைந்து மார்ச் மாத வாக்கில் சந்தை பல ஆண்டுகளுக்கான கீழ்நிலையை தொட்டது. "ஓவரான அவநம்பிக்கையில்தான் காளை ஓட்டம் துவங்குகிறது' என்ற சந்தை பொன் மொழிக்கேற்ப, மார்ச் மாதம் துவங்கிய காளை ஓட்டம் டிசம்பர் இறுதி வரையுமே தொடர்ந்து வந்தது மட்டுமல்லாமல், வருடத்தின் அதிக பட்ச நிலையிலேயே சந்தையின் முக்கிய குறியீடுகள் முடிந்திருப்பது குறிப்பிடத் தக்கது. காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த (கிட்டத்தட்ட) தனிப் பெரும்பான்மை, அசாதாரண அளவிலான அந்நிய முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவையே இந்த அசத்தல் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த வெற்றி புதிய ஆண்டிலும் தொடருமா என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். முதலில் சாதக ...