Skip to main content

வழியிலே மேடுபள்ளம்!

பெரும்பாலான உலக சந்தைகள் சென்ற வாரம் பெரியதொரு வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தன. சீனா அரசு கொண்டு வந்த கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கை, ஒபாமா அமெரிக்க வங்கிகளின் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென்று அறிமுகப் படுத்த விரும்பும் சட்ட திருத்த நடவடிக்கை மற்றும் கிரீஸ் அரசின் கடன் தடுமாற்றம் ஆகியவை பங்கு சந்தை மனநிலையை வெகுவாக பாதித்தன.

உள்ளூரை பொறுத்தவரை மிகப் பெரிய கட்டுமானத்துறை நிறுவனமான லார்சென் டூப்ரோ எதிர்பார்ப்புக்கு குறைவாக லாபம் ஈட்டியது அந்த நிறுவனத்தின் பங்கினை மட்டுமல்லாமல், பல கட்டுமானப் பங்குகளையும் கீழே விழச் செய்தது.

இந்தியாவின் புள்ளியியல் துறையின் தலைவர் பணவீக்க விகிதம் இரண்டு இலக்கத்தை தொட வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறியதும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததும் உள்ளூர் சந்தையை தடுமாறச் செய்தன.

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய தலைமை வங்கி "ரொக்க இருப்பு விகிதத்தை" (CRR) அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரியல் எஸ்டேட், வாகனத் துறை போன்ற Interest Rate Sensitive துறை பங்குகளை வீழ்ச்சி செய்ய அடிகோலியது.

ஒபாமாவின் கட்சி அமெரிக்க மேல்சபையில் சூப்பர் மஜோரிட்டி இழக்கும் பட்சத்தில் ஒபாமா கொண்டு வர விரும்பிய "மருத்துவ நல" மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் இருக்கலாம் என்ற அச்சத்தில் மருந்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்தன. சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால் கச்சா எண்ணெய் & உலோகங்களின் தேவை குறையலாம் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட துறை பங்குகளும் வீழ்ந்தன.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை மிகப் பெரிய அளவில் விற்பனை செய்தன. இந்திய நிதி நிறுவனங்கள் ஓரளவுக்கு பங்குகளை வாங்கியது சந்தையின் வீழ்ச்சியை மட்டுப் படுத்த உதவியது.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தது நாளைய சந்தை துவக்கத்தை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. வரும் வியாழன்று நிகழவுள்ள "மாதாந்திர எதிர்கால நிலை வர்த்தகத்தின் நிறைவு" சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். அமெரிக்க வங்கிகளை எந்த அளவுக்கு ஒபாமா கட்டுப் படுத்த விரும்புகிறார் என்பதையும் அந்த முயற்சி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் இந்திய வரவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் கூர்மையாக கவனிக்க வேண்டியிருக்கும்.

வரும் வெள்ளியன்று இந்திய தலைமை வங்கி, தனது நிதி கொள்கையின் காலாண்டு அறிக்கையை வெளியிடவுள்ளது. அந்த அறிக்கையில் வட்டி வீதங்களை தலைமை வங்கி உயர்த்துமா என்பதையும் சந்தை அச்சத்துடன் கவனித்து கொண்டிருக்கும்.

பாரதிய ஸ்டேட் வங்கி, மகிந்திரா, ஸ்டெரிலைட், ஹிண்டல்கோ, SAIL டாட்டா மோட்டார், டாட்டா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்கள் வரும் வாரத்தில் தமது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடவுள்ளன. இந்த காலாண்டு அறிக்கைகள் சந்தையின் எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பதும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

இவை மட்டுமல்லாமல், அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்க தலைமை வங்கியின் வட்டி நிர்ணய முடிவு மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி போன்றவையும் நமது சந்தையின் போக்கினை பாதிக்கும்.

ஆக மொத்தத்தில், வரும் வாரத்தில் நமது சந்தை பல மேடு பள்ளங்களை சந்திக்கும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. குறுகிய கால வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும் வலுவான பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

வரைபட தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி இன்டெக்ஸ் 4950 & 4780 அளவுகளில் நல்ல அரணை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளது. 5180 புள்ளிகள் எதிர்ப்பாக இருக்கக் கூடும்.

வரும் வாரம் எல்லாவகையிலும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Comments

manjoorraja said…
கடந்தவாரம் முழுவதும் சந்தையில் இறங்குமுகமாகவேஇருந்தது. லார்சன் ட்யூப்ரோ மற்றும் சைனாவினால் தான் என நினைத்தேன். மேலதிக தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி.
Maximum India said…
நன்றி மஞ்சூர் ராசா!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...