Skip to main content

வழியிலே மேடுபள்ளம்!

பெரும்பாலான உலக சந்தைகள் சென்ற வாரம் பெரியதொரு வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தன. சீனா அரசு கொண்டு வந்த கடன் கட்டுப்பாட்டு நடவடிக்கை, ஒபாமா அமெரிக்க வங்கிகளின் சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவென்று அறிமுகப் படுத்த விரும்பும் சட்ட திருத்த நடவடிக்கை மற்றும் கிரீஸ் அரசின் கடன் தடுமாற்றம் ஆகியவை பங்கு சந்தை மனநிலையை வெகுவாக பாதித்தன.

உள்ளூரை பொறுத்தவரை மிகப் பெரிய கட்டுமானத்துறை நிறுவனமான லார்சென் டூப்ரோ எதிர்பார்ப்புக்கு குறைவாக லாபம் ஈட்டியது அந்த நிறுவனத்தின் பங்கினை மட்டுமல்லாமல், பல கட்டுமானப் பங்குகளையும் கீழே விழச் செய்தது.

இந்தியாவின் புள்ளியியல் துறையின் தலைவர் பணவீக்க விகிதம் இரண்டு இலக்கத்தை தொட வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறியதும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததும் உள்ளூர் சந்தையை தடுமாறச் செய்தன.

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய தலைமை வங்கி "ரொக்க இருப்பு விகிதத்தை" (CRR) அதிகரிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ரியல் எஸ்டேட், வாகனத் துறை போன்ற Interest Rate Sensitive துறை பங்குகளை வீழ்ச்சி செய்ய அடிகோலியது.

ஒபாமாவின் கட்சி அமெரிக்க மேல்சபையில் சூப்பர் மஜோரிட்டி இழக்கும் பட்சத்தில் ஒபாமா கொண்டு வர விரும்பிய "மருத்துவ நல" மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் இருக்கலாம் என்ற அச்சத்தில் மருந்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்தன. சீனாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால் கச்சா எண்ணெய் & உலோகங்களின் தேவை குறையலாம் என்ற அச்சத்தில் குறிப்பிட்ட துறை பங்குகளும் வீழ்ந்தன.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை மிகப் பெரிய அளவில் விற்பனை செய்தன. இந்திய நிதி நிறுவனங்கள் ஓரளவுக்கு பங்குகளை வாங்கியது சந்தையின் வீழ்ச்சியை மட்டுப் படுத்த உதவியது.

இப்போது வரும் வார சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சென்ற வார இறுதியில் அமெரிக்க பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தது நாளைய சந்தை துவக்கத்தை ஓரளவுக்கு பாதிக்க வாய்ப்புள்ளது. வரும் வியாழன்று நிகழவுள்ள "மாதாந்திர எதிர்கால நிலை வர்த்தகத்தின் நிறைவு" சந்தையில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். அமெரிக்க வங்கிகளை எந்த அளவுக்கு ஒபாமா கட்டுப் படுத்த விரும்புகிறார் என்பதையும் அந்த முயற்சி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் இந்திய வரவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் கூர்மையாக கவனிக்க வேண்டியிருக்கும்.

வரும் வெள்ளியன்று இந்திய தலைமை வங்கி, தனது நிதி கொள்கையின் காலாண்டு அறிக்கையை வெளியிடவுள்ளது. அந்த அறிக்கையில் வட்டி வீதங்களை தலைமை வங்கி உயர்த்துமா என்பதையும் சந்தை அச்சத்துடன் கவனித்து கொண்டிருக்கும்.

பாரதிய ஸ்டேட் வங்கி, மகிந்திரா, ஸ்டெரிலைட், ஹிண்டல்கோ, SAIL டாட்டா மோட்டார், டாட்டா ஸ்டீல் போன்ற பெரிய நிறுவனங்கள் வரும் வாரத்தில் தமது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடவுள்ளன. இந்த காலாண்டு அறிக்கைகள் சந்தையின் எதிர்பார்ப்புக்களை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் என்பதும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

இவை மட்டுமல்லாமல், அடுத்த வாரம் வெளியிடப் படவுள்ள அமெரிக்க தலைமை வங்கியின் வட்டி நிர்ணய முடிவு மற்றும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி போன்றவையும் நமது சந்தையின் போக்கினை பாதிக்கும்.

ஆக மொத்தத்தில், வரும் வாரத்தில் நமது சந்தை பல மேடு பள்ளங்களை சந்திக்கும் என்றே இப்போதைக்கு தோன்றுகிறது. குறுகிய கால வர்த்தகர்கள் தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பெரிய சரிவின் போதும் வலுவான பங்குகளை மெல்ல மெல்ல சேகரித்து வரலாம்.

வரைபட தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி இன்டெக்ஸ் 4950 & 4780 அளவுகளில் நல்ல அரணை கொண்டிருக்கும் வாய்ப்புள்ளது. 5180 புள்ளிகள் எதிர்ப்பாக இருக்கக் கூடும்.

வரும் வாரம் எல்லாவகையிலும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!

நன்றி.

Comments

manjoorraja said…
கடந்தவாரம் முழுவதும் சந்தையில் இறங்குமுகமாகவேஇருந்தது. லார்சன் ட்யூப்ரோ மற்றும் சைனாவினால் தான் என நினைத்தேன். மேலதிக தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி.
Maximum India said…
நன்றி மஞ்சூர் ராசா!

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.