Skip to main content

ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளா?

திருட்டு டிவிடியில் சினிமா படம் பார்த்தால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் படுவர் என்று ஒரு சட்டம் வரப் போவதாக பத்திரிக்கை செய்தியில் பார்த்தவுடன் என்னுள் பல கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கே பதிய விரும்புகின்றேன்.

இந்த திருட்டு டிவிடி சட்டம் உள்ளூர் படங்களுக்கு மட்டும்தானா அல்லது உலகப் படங்களுக்குமா?

ஒருவேளை உலக படங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினால் நிறைய ஜாம்பவான்கள் சிறையில்தானே தமிழ் படம் தயாரிக்க வேண்டியிருக்கும்?

அப்படி சிறையில் இருந்துகொண்டே திரைப்படம் எடுப்பவர்கள் சிறைஞானி என்று அழைக்கப் படுவார்களா?

இன்றைய தேதியில் வெளிவரும் பல தமிழ் படங்களை பார்ப்பதே ஒரு பெரிய தண்டனைதானே?

இதற்கும் மேல் ஒரு குண்டர் சட்டம் தேவையா?

ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்கும் சட்டம் செல்லாது என்று அரசியல் சாசனம் சொல்கின்றதே?

தீவிரவாதிகள் எல்லோரும் கூவிக் கூவி திருட்டு டிவிடி விற்கிறார்கலாமே? அதனால்தான் கொஞ்ச நாட்களாக குண்டு சத்தம் குறைவாக கேட்கின்றதோ?

அப்படியே அவர்களை திரைப்படங்களையும் தயாரிக்க சொல்லி விடுங்களேன். கைதாகாமலேயே நிறைய பேரை வதைக்கலாமல்லவா?

இன்றைய தேதியில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டே வீட்டில் "சிவனே என்று" தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட கைது செய்ய முடியுமே?

இப்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டு, பலர் பேர் முன்னிலையில், ஏன் வீடியோ ஆதாரத்துடன் தவறு செய்தாலும் கூட தண்டிக்க முடியாதுதானே?

அப்படியிருக்கும் போது எதற்கு ஒரு இன்னொரு புதிய சட்டம்?

ஏதோ செய்வது போல காட்டிக் கொள்ளத்தானோ?

ஒரு திரைப்படம் அரங்கில் வெளிவருவதற்கு முன்னரே திருட்டு டிவிடியில் வெளிவருகின்றது என்றால் அது உள்ளாட்கள் உதவியின்றி நடக்காது என்பது சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு தெரியாதா?

தொலைத்த இடத்தில் தேடாமல், வெளிச்சம் இருக்கும் வேறொரு இடத்தில் ஒன்றும் கிடைக்காது என்பது அந்த சகலகலா வல்லவர்களுக்கு தெரியாதோ?

எல்லாம் ஒரு விளம்பரம்தானோ?

ஆக மொத்தத்தில் எல்லாருக்கும் பொழுது நன்றாகவே போயிற்று. எனக்கும் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வெகுஜன பதிவு ஆயிற்று.

மொத்தத்தில் ஏதேனும் ஒன்று செய்து தமிழர்களின் சினிமா பார்க்கும் நேரத்தை குறைத்தால் சரிதான்.

ஆகா! ஒரு மெசேஜும் ஆயிற்று.


நன்றி!

Comments

Unknown said…
சூப்பர்.
Naresh Kumar said…
நீங்க வேற, கூடிய சீக்கிரம் கலைஞருக்கு திரையுலகினர் பாராட்டு விழா எடுக்குறாங்களாம்!!! காரணம் என்ன தெரியுமா???

திருட்டு விசிடியை ஒழிச்சிட்டாராம்.....

காசு கொடுத்து தியேட்டருக்கு போயி பாக்கும் போது அவ்ளோ மொக்கை போட்டதுக்காக படத்தோட ஆட்களை குண்டர் சட்டத்தில் உள்ள தள்ள முடியுமா???
3டி வகை படங்கள் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்பது போன்று கட்டாயமயமாக்கப்பட்டது நல்ல முயற்சி!
தொழில்நுட்பங்களில் திரைதுறை முன்னேறுவதே திருட்டு வி/சி/டி யை ஒழிக்க ஒரே வழி!
Thomas Ruban said…
வித்தியாசமாவும் அதே “நறுக்”கோடும் இருக்கு சார். அசத்தல்பதிவு.

//ஒருவேளை உலக படங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினால் நிறைய ஜாம்பவான்கள் சிறையில்தானே தமிழ் படம் தயாரிக்க வேண்டியிருக்கும்?
அப்படி சிறையில் இருந்துகொண்டே திரைப்படம் எடுப்பவர்கள் சிறைஞானி என்று அழைக்கப் படுவார்களா?

"சிறையோகி" என்று அழைக்கப் படுவார்கள்.
பதிவுக்கு நன்றி சார்..
Maximum India said…
நன்றி ரவிஷங்கர்!
Maximum India said…
நன்றி நரேஷ் குமார்!

//நீங்க வேற, கூடிய சீக்கிரம் கலைஞருக்கு திரையுலகினர் பாராட்டு விழா எடுக்குறாங்களாம்!!! காரணம் என்ன தெரியுமா???

திருட்டு விசிடியை ஒழிச்சிட்டாராம்.....//

அவ்வப்போது பாராட்டு விழாக்கள் அதுவும் சினிமா சம்பந்தப் பட்ட விழாக்கள் நடந்து கொண்டிருந்தால்தானே தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை பல தமிழர்களுக்கும் நன்றாக பொழுது போகும்.

தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவென்றே அவதரித்துள்ள கண்மணிகளின் ஆடை அலங்காரங்களை கண்வொட்டாமல் பார்க்கவென்று ஒரு கூட்டம். பார்த்துவிட்டு தவறென்று விமர்சனம் செய்ய ஒரு கூட்டம். தமிழை கடித்து குதறினாலும், மழலை தமிழென்று ரசிக்கவும் ஒரு கூட்டம். இந்த பாராட்டு விழாவை நேரடியாக மற்றும் மறு ஒளிபரப்பாக பலமுறை ஒளிபரப்பும் ஒரு கூட்டம். அதை ஏராளமான விளம்பரங்களுக்கிடையேயும் பார்த்து ரசிக்க ஒரு கூட்டம். பக்கங்களை நிரப்ப பத்திரிக்கையாளர்களுக்கும், நேரடி விமரசங்களை எழுதி அதிக "விசிட்டர்ஸ்" களை பதிவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. மொத்தத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாகவே முன்னேறி வருகிறது.



//காசு கொடுத்து தியேட்டருக்கு போயி பாக்கும் போது அவ்ளோ மொக்கை போட்டதுக்காக படத்தோட ஆட்களை குண்டர் சட்டத்தில் உள்ள தள்ள முடியுமா???//



நம்ம ஊரு போலீசு "குண்டாக" இருந்தார் என்று காரணம் காட்டிக் கூட சிலரை "குண்டர் சட்டத்தில்" அடைத்து விடுவார்கள். ஆனால் அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்க மாட்டார்கள்.


நன்றி!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//3டி வகை படங்கள் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்பது போன்று கட்டாயமயமாக்கப்பட்டது நல்ல முயற்சி!
தொழில்நுட்பங்களில் திரைதுறை முன்னேறுவதே திருட்டு வி/சி/டி யை ஒழிக்க ஒரே வழி!//

நல்ல யோசனை!

:)
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//"சிறையோகி" என்று அழைக்கப் படுவார்கள்.//

நம்மூரில் பட்டங்களை வழங்குவதை பெரிய வேலை என்ன இருக்க முடியும்?

நடக்கட்டும்! நடக்கட்டும்!

:)
Thomas Ruban said…
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் எல்லோர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அய்யா.
KARTHIK said…
// அப்படியே அவர்களை திரைப்படங்களையும் தயாரிக்க சொல்லி விடுங்களேன். கைதாகாமலேயே நிறைய பேரை வதைக்கலாமல்லவா? //

இப்போ கூட மும்பைல பல பெரிய படங்கள் தயாரிப்பது வெளிநாட்டுல இருக்குர இந்திய தாதாக்கள் தானாமங்க.
Maximum India said…
நன்றி கார்த்திக்!

//இப்போ கூட மும்பைல பல பெரிய படங்கள் தயாரிப்பது வெளிநாட்டுல இருக்குர இந்திய தாதாக்கள் தானாமங்க.//

அப்படித்தான் சொல்லப் படுகின்றது.

முந்தைய மும்பை வெடிகுண்டு தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் வரை நம்மூர் ஸ்டார்கள் தாவூத் இப்ராகிம் பார்ட்டிகளில் கலந்து கொண்டுதான் இருந்தார்கள். கடைசி தாக்குதலில் சம்பந்தப் பட்டிருந்த ஹீட்லி உடன் கூட நிறைய சினிமாகாரர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களுடைய அரசியல் செல்வாக்கு மற்றும் கவர்ச்சி அவர்களை நிறைய தரம் தப்ப வைத்திருக்கின்றது. மிகச்சிறந்த உதாரணம் - சஞ்சய் தத்

நன்றி.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...