பத்து வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பல்வேறு போராட்டங்கள், பற்பல முட்டுக்கட்டைகள் பலமடங்காகிப் போன செலவினங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று பந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலம் பொது மக்களுக்காக திறந்து விடப் பட்டிருக்கிறது. இந்த பாலத்தின் முக்கிய சிறப்புக்கள் இங்கே. இந்த எட்டுவழி பாலத்தின் நீளம் 5.6 கி.மீ. மொத்த சிமென்ட் உபயோகம் 90,000 டன். இரும்பு 40,000 டன் இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவு மைய தூணின் உயரம் 126 மீட்டர். பாலத்தைக் கட்டியது ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி. அணுமின் நிலையங்கள் போன்ற உயர் தொழிற்நுட்ப அமைப்புக்களை உருவாக்குவதில் வல்ல தனியார் நிறுவனத்தினர். மூவாயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உழைத்து இந்த பாலத்தை உருவாக்கி உள்ளனர் இந்த கட்டுமானப் பணி பல ஆண்டுகள் தள்ளிப் போனதால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது." இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந...
கொஞ்சம் மாத்தி யோசி!