Skip to main content

இந்தியாவின் பெருமை!



பத்து வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பல்வேறு போராட்டங்கள், பற்பல முட்டுக்கட்டைகள் பலமடங்காகிப் போன செலவினங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று பந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலம் பொது மக்களுக்காக திறந்து விடப் பட்டிருக்கிறது.



இந்த பாலத்தின் முக்கிய சிறப்புக்கள் இங்கே.



இந்த எட்டுவழி பாலத்தின் நீளம் 5.6 கி.மீ.

மொத்த சிமென்ட் உபயோகம் 90,000 டன். இரும்பு 40,000 டன்



இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவு

மைய தூணின் உயரம் 126 மீட்டர்.



பாலத்தைக் கட்டியது ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி. அணுமின் நிலையங்கள் போன்ற உயர் தொழிற்நுட்ப அமைப்புக்களை உருவாக்குவதில் வல்ல தனியார் நிறுவனத்தினர்.



மூவாயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உழைத்து இந்த பாலத்தை உருவாக்கி உள்ளனர்



இந்த கட்டுமானப் பணி பல ஆண்டுகள் தள்ளிப் போனதால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது."

இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை வாங்கினேன். லாபத்தை எதிர் நோக்கி அல்ல. ஏதோ ஒரு அணிலின் பங்கு என்று வைத்துக் கொள்ளலாம்.



இந்த நிறுவனத்திற்கும், அதன் தலைவருக்கும், பணியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அதே வேளையில் மனதை நெருடும் ஒரு விஷயத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது. இந்த பாலம் வழியாக பயணம் செய்ய செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஐம்பது. இது ஒரு பக்க பயணத்திற்கு மட்டும். மேலும் இந்த பாலத்தில் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

சாதாரண மக்கள் ஒவ்வொரு முறையும் ஐம்பது ரூபாய் கட்டி இந்த பாலத்தில் பயணம் செய்வது பொருளாதார ரீதியாக கடினமான ஒரு விஷயம்.

பெருமை மிக்க இந்த பாலத்தில் பயணம் செய்யப் போகிறவர்கள் பெரும்பாலும் மேல் தட்டு மக்கள் மட்டும்தான் எனும் சேதி இன்றைய தேதியில் இந்தியாவில் பெருமைப் பட வைக்கும் விஷயங்கள் அனைத்தும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் சொந்தமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கூடவே, எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம் என்ற காலம் எப்போது இந்தியாவில் வரும் என்ற பெருமூச்சையும் எழுப்புகிறது.

நன்றி.

Comments

அது என்ன போக்குவரத்து பாலமா இல்ல சுற்றுலாதளமா?

50 ரூபா இருந்தா ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகுன்னு என் பொண்டாட்டி சொல்லுவா!
நன்று.
நேற்றைய லேசர் ஷோ கொண்டாட்ட படங்களையும் இணைத்திருக்கலாம்.
Maximum India said…
நன்றி வால்பையன்

//அது என்ன போக்குவரத்து பாலமா இல்ல சுற்றுலாதளமா?

50 ரூபா இருந்தா ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகுன்னு என் பொண்டாட்டி சொல்லுவா!//

உண்மைதான் தல.

ஐம்பது ரூபாய் என்பது இந்தியாவில் வாழும் பல குடும்பங்களின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு.

இங்கு அது சில நிமிடங்கள் சேமிக்க உதவும் செலவு.

எல்லாமே காசுதான்.

நன்றி .
Maximum India said…
//நன்று.
நேற்றைய லேசர் ஷோ கொண்டாட்ட படங்களையும் இணைத்திருக்கலாம்//

மன்னிக்கவும்

அந்த படங்கள் கைவசம் இல்லை.

இந்த கொண்டாட்டங்களை என்னால் நேரில் பார்க்க முடிந்தது என்றாலும் செல்போன் கைவசம் இல்லாததால் படம் பிடிக்க முடிய வில்லை.

நன்றி யூர்கன்
நல்ல தகவல், இந்த பாலம் இல்லை என்றால் 70 கிமீ சுற்ற வேண்டுமாமே? அதைக்காட்டிலும் 50 ரூபாய் கொடுத்துவிடுவது நேரத்தையும் மிச்சப்படுத்துமே...
Maximum India said…
அன்புள்ள பீர்!

கருத்துரைக்கு நன்றி!

//நல்ல தகவல், இந்த பாலம் இல்லை என்றால் 70 கிமீ சுற்ற வேண்டுமாமே? அதைக்காட்டிலும் 50 ரூபாய் கொடுத்துவிடுவது நேரத்தையும் மிச்சப்படுத்துமே...//

மன்னிக்கவும். மாற்றுப் பாதையின் தூரம் பத்து கி,மீ க்கும் குறைவே. ஆனால் அந்த பாதையில் உள்ள 23 சிக்னல்கள் , கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை தவிர்க்க விரும்புவர்களுக்கு இந்த பாலம் மிகவும் உதவியாக இருக்கும். ஞாயிற்று கிழமைகளில் இந்த பாலத்தில் நேர மிச்சத்திற்கான பயணம் என்று ஏதும் இருக்காது என்று நம்பலாம்.

நன்றி.
Naresh Kumar said…
இங்க சென்னையில ஈசிஆர் ல காசு வாங்குறதுக்கே செம கடுப்பா இருக்கு எல்லாருக்கும்....

இதுல 50 ரூபா என்பது ரொம்பவே அதிகப்படியாக தோன்றுகிறது....

என்னதான் நேரம் மிச்சம் என்றாலும், மாதம் குறைந்த பட்சம் 2500 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பது, அவர்கள் பட்ஜெட்டில் துண்டல்ல, பெட்சீட்டே விழவைக்கும்....
Maximum India said…
நன்றி நரேஷ் குமார்

//இங்க சென்னையில ஈசிஆர் ல காசு வாங்குறதுக்கே செம கடுப்பா இருக்கு எல்லாருக்கும்....

இதுல 50 ரூபா என்பது ரொம்பவே அதிகப்படியாக தோன்றுகிறது....

என்னதான் நேரம் மிச்சம் என்றாலும், மாதம் குறைந்த பட்சம் 2500 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பது, அவர்கள் பட்ஜெட்டில் துண்டல்ல, பெட்சீட்டே விழவைக்கும்....//

உண்மைதான் நரேஷ் குமார்! இந்த கட்டணத்தை எதிர்த்து ஒரு தனியார் தொண்டு அமைப்பு பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி
Raja said…
இரும்பு 40,000 டன், இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ///

Sir, please double confirm. Steel usage only 40,000 Tonnes? Based on above, only one tonne (almost) is the weight for 1km steel rod?
Just curiosity only.. please don't mistake me.
Unknown said…
இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை வாங்கினேன். லாபத்தை எதிர் நோக்கி அல்ல. ஏதோ ஒரு அணிலின் பங்கு என்று வைத்துக் கொள்ளலாம்.

Good.
KARTHIK said…
இதெல்லாம் ரொம்ப கொடுமை

டீவில அன்னை சோனியா இந்தப்பாலத்த நாட்டுக்கு அர்ப்பனிக்குராங்கன்னு சொன்னாங்க இது தானா நாட்டுக்கு அர்ப்பனிக்குரது :-((

இதுக்கும் சேத்து நம்ம வரிப்பணத்த பயன்படுத்திருப்பாங்க.அதுல நாம போக 50 ருவா பணம் வேற.
என்ன கொடும சார் இது.
Thomas Ruban said…
//கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது."//


இந்த நிறுவனத்தின் தலைவர்க்கு ஒரு சல் சளுஇட்.இவரை போல நாட்டில் சில பேர் நினைப்பதால் தான் நாடு
இந்த நிலைளவது இருக்கிறது.
இந்த அருமையான பதிவு எழதிய உங்களுக்கும் நன்றி.
இந்த நிறுவனத்தின் பங்குகள் 25என்னிடமும் உள்ளது.இது போன்ற உலகத்தில் உள்ள ஐந்து பாலங்களில் இதுவும் ஒன்று.

படங்கள் நன்றாக வந்துள்ளது நன்றி..
Thomas Ruban said…
//அது என்ன போக்குவரத்து பாலமா இல்ல சுற்றுலாதளமா?

50 ரூபா இருந்தா ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகுன்னு என் பொண்டாட்டி சொல்லுவா!//

ரோஜா சேடியில் சில முட்களும் இருக்கும்.

நன்றி..
Maximum India said…
//Sir, please double confirm. Steel usage only 40,000 Tonnes? Based on above, only one tonne (almost) is the weight for 1km steel rod?
Just curiosity only.. please don't mistake me.//

வாங்க ராஜா சார் வாங்க! இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?

கம்பியின் எடை கம்பியின் நீளம் மற்றும் விட்டம் சம்பந்தப் பட்டதும் கூட.

ஸ்டீல் உபயோகம் பற்றி பத்திரிக்கையில் படித்ததுதான். இருந்தாலும் உங்களுக்காக இன்னொருமுறை சரி பார்த்து சொல்கிறேன்.

பல நாள் கழித்து வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
Maximum India said…
நன்றி சிங்காரவேலு!
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்!

//இதெல்லாம் ரொம்ப கொடுமை

டீவில அன்னை சோனியா இந்தப்பாலத்த நாட்டுக்கு அர்ப்பனிக்குராங்கன்னு சொன்னாங்க இது தானா நாட்டுக்கு அர்ப்பனிக்குரது :-((

இதுக்கும் சேத்து நம்ம வரிப்பணத்த பயன்படுத்திருப்பாங்க.அதுல நாம போக 50 ருவா பணம் வேற.
என்ன கொடும சார் இது.//

உண்மைதான் கார்த்திக். நான் பதிவிலேயே சொல்லியபடி இது மனதை நெருடுகிற விஷயம்தான்.

நன்றி.
Maximum India said…
//இது போன்ற உலகத்தில் உள்ள ஐந்து பாலங்களில் இதுவும் ஒன்று.//

தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!
Maximum India said…
//ரோஜா சேடியில் சில முட்களும் இருக்கும்.//

ஆனால் ரோஜாவை விட முற்கள் பெரிதாக இருக்க கூடாது அல்லவா?

நன்றி தாமஸ் ரூபன்!
Naresh Kumar said…
இதெல்லாம் என்னங்க சாதனை????
பிசாத்து 1600 கோடி செலவு...

எங்க ஆளு மாயாவதி சிலை வைக்கறதுக்கே 1000 கோடி செலவு பண்ணியிருக்காங்க பாருங்க...

இந்த லட்சணத்துல இவங்க எல்லாம் நிதித்திட்டம் போட்டு மக்களோட பணத்தை ஒழுங்கா செலவு செய்யப் போறாங்களாம்
விளங்குனாப்லதான்
Maximum India said…
//எங்க ஆளு மாயாவதி சிலை வைக்கறதுக்கே 1000 கோடி செலவு பண்ணியிருக்காங்க பாருங்க...//

''தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட தானைத் தலைவி வாழ்க!''

இப்படி சொல்றதுக்கும் ஆள் இருக்கும் வரை நம்ம நாட்ட ஒண்ணும் பண்ண முடியாது போங்க!

நன்றி
Thomas Ruban said…
//Blogger யூர்கன் க்ருகியர்..... said...

நன்று.
நேற்றைய லேசர் ஷோ கொண்டாட்ட படங்களையும் இணைத்திருக்கலாம்.//

லேசர் ஷோ படங்கள் ling

http://sea-link.blogspot.com/
நன்றி .
Maximum India said…
தகவலுக்கு மிக்க நன்றி தாமஸ் ரூபன்!

குறிப்பிட்ட வலைப்பூவில் உள்ள புகைப் படங்கள் அருமை!

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...