Skip to main content

அய்! இது கூட நல்லா இருக்கே?

சிறிய வயதில் பலரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடுவது உண்டு. 'போலீஸ்' சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்ள, 'திருடர்கள்' அனைவரும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஒரு "கவுண்ட் டவுனுக்கு" பிறகு "வரட்டா வரட்டா என்று பல முறை கேட்ட பிறகு, இந்த 'போலீஸ்' அந்த திருடர்களை தேட ஆரம்பிப்பார்.

இந்த கலி காலத்தில் நிஜ போலீஸ்-திருடர்கள் கூட இப்படித்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போல இருக்கிறது.

இன்று படித்த ஒரு செய்தி எனக்கு முதலில் சிரிப்பை வரவழைத்தது.

செய்தி இதுதான்.

"மீண்டுமொருமுறை இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது."

"இந்தியாவில் பல்வேறு குற்றங்களுக்காக (முக்கியமாக தீவிரவாத குற்றங்கள்) சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட பாகிஸ்தானியர்கள் முப்பது பேரை காண வில்லை. இவர்கள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் என்று அரசுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களை இந்திய போலீஸ் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்"

எனக்கு வந்த சந்தேகங்கள் சில.

இவர்களை ஏன் வலை வீசி கஷ்டப் பட்டு தேட வேண்டும்? சிறையில் இருந்து விடுவிக்கும் போதே எளிதாக பிடித்திருக்கலாமே?

அப்படி ஒருவேளை, இவர்களால் தீவிரவாத தாக்குதல் நடத்தப் படும் என்ற சந்தேகம் இருந்தால் ஏன் இவர்களை விடுவிக்க வேண்டும்? விடுவிக்காமலே இருந்திருக்கலாமே?

அப்படி விடுவித்தாலும், அவர்களை ஏன் இந்தியாவில் வைத்து விடுதலை செய்ய வேண்டும்? ஏன் அவர்களை நேரடியாக பாகிஸ்தானில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது?

ஒரு வேளை, இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியை பாகிஸ்தானில் விடுவித்ததற்கு கூச்சல் போடும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

நம் வீட்டை முதலில் ஒழுங்குப் படுத்துங்கள்! அப்புறம் அடுத்தவருக்கு அறிவுரை செய்யுங்கள்!

சிறிய வயதில் எனக்கு பெரியவர்கள் கொடுத்த அறிவுரை இது!

"பார்த்து விளையாடு! ஓவர் விளையாட்டு வினையாகி விடப் போகிறது"

அதே அறிவுரையை முக்கியப் பொறுப்பிலுள்ள ரொம்ப ரொம்ப பெரியவர்களுக்கு இந்த சிறியவன் கொடுக்க விரும்புகிறேன்.

நன்றி.

Comments

//இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?//

இது தான் காரணமாக இருக்கும்!
இடையில் சாகும் அப்பாவி மனிதர்கள் சாதரண காய்கள், அதனால் அவர்களை பற்றி அவர்களுக்கு கவலையில்லை!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//இடையில் சாகும் அப்பாவி மனிதர்கள் சாதரண காய்கள், //

சரிதான். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப் படும் காய்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

நன்றி.
KARTHIK said…
யாராவது ரண்டு பேர் பணத்த வாங்கிட்டு இந்தமாதிரி ரீலீஸ் செய்வாங்காலா இருக்கும் !
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்!

//யாராவது ரண்டு பேர் பணத்த வாங்கிட்டு இந்தமாதிரி ரீலீஸ் செய்வாங்காலா இருக்கும் //

ரண்டு பேர் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ரண்டு பேர் மட்டும்தானா என்பது இப்போதைய கேள்வி.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...