Skip to main content

அய்! இது கூட நல்லா இருக்கே?

சிறிய வயதில் பலரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடுவது உண்டு. 'போலீஸ்' சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்ள, 'திருடர்கள்' அனைவரும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஒரு "கவுண்ட் டவுனுக்கு" பிறகு "வரட்டா வரட்டா என்று பல முறை கேட்ட பிறகு, இந்த 'போலீஸ்' அந்த திருடர்களை தேட ஆரம்பிப்பார்.

இந்த கலி காலத்தில் நிஜ போலீஸ்-திருடர்கள் கூட இப்படித்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போல இருக்கிறது.

இன்று படித்த ஒரு செய்தி எனக்கு முதலில் சிரிப்பை வரவழைத்தது.

செய்தி இதுதான்.

"மீண்டுமொருமுறை இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது."

"இந்தியாவில் பல்வேறு குற்றங்களுக்காக (முக்கியமாக தீவிரவாத குற்றங்கள்) சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட பாகிஸ்தானியர்கள் முப்பது பேரை காண வில்லை. இவர்கள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் என்று அரசுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களை இந்திய போலீஸ் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்"

எனக்கு வந்த சந்தேகங்கள் சில.

இவர்களை ஏன் வலை வீசி கஷ்டப் பட்டு தேட வேண்டும்? சிறையில் இருந்து விடுவிக்கும் போதே எளிதாக பிடித்திருக்கலாமே?

அப்படி ஒருவேளை, இவர்களால் தீவிரவாத தாக்குதல் நடத்தப் படும் என்ற சந்தேகம் இருந்தால் ஏன் இவர்களை விடுவிக்க வேண்டும்? விடுவிக்காமலே இருந்திருக்கலாமே?

அப்படி விடுவித்தாலும், அவர்களை ஏன் இந்தியாவில் வைத்து விடுதலை செய்ய வேண்டும்? ஏன் அவர்களை நேரடியாக பாகிஸ்தானில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது?

ஒரு வேளை, இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியை பாகிஸ்தானில் விடுவித்ததற்கு கூச்சல் போடும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

நம் வீட்டை முதலில் ஒழுங்குப் படுத்துங்கள்! அப்புறம் அடுத்தவருக்கு அறிவுரை செய்யுங்கள்!

சிறிய வயதில் எனக்கு பெரியவர்கள் கொடுத்த அறிவுரை இது!

"பார்த்து விளையாடு! ஓவர் விளையாட்டு வினையாகி விடப் போகிறது"

அதே அறிவுரையை முக்கியப் பொறுப்பிலுள்ள ரொம்ப ரொம்ப பெரியவர்களுக்கு இந்த சிறியவன் கொடுக்க விரும்புகிறேன்.

நன்றி.

Comments

//இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?//

இது தான் காரணமாக இருக்கும்!
இடையில் சாகும் அப்பாவி மனிதர்கள் சாதரண காய்கள், அதனால் அவர்களை பற்றி அவர்களுக்கு கவலையில்லை!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//இடையில் சாகும் அப்பாவி மனிதர்கள் சாதரண காய்கள், //

சரிதான். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப் படும் காய்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.

நன்றி.
KARTHIK said…
யாராவது ரண்டு பேர் பணத்த வாங்கிட்டு இந்தமாதிரி ரீலீஸ் செய்வாங்காலா இருக்கும் !
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்!

//யாராவது ரண்டு பேர் பணத்த வாங்கிட்டு இந்தமாதிரி ரீலீஸ் செய்வாங்காலா இருக்கும் //

ரண்டு பேர் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ரண்டு பேர் மட்டும்தானா என்பது இப்போதைய கேள்வி.

நன்றி.

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.