Skip to main content

Posts

Showing posts from March, 2010

நீங்கள் ரொம்ப புத்திசாலியா?

நாளை முட்டாள்கள் தினம். ஆனால் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது, நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று நம்புகிறீர்களா? ஆமாம் என்று சொல்பவர்கள் தயவு செய்து உங்கள் கீ போர்டில் உள்ள "F13 கீ "யை ஒரு தடவை அமுக்குங்கள். அமுக்கிட்டீங்களா? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்! நாளை ரொம்ப தூரம். இன்னைக்கே ஆரம்பிப்போம். "முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!" நன்றி!

டெக்னிகல் அனாலிசிஸ் - ஒரு அறிமுகம்!

ஏற்கனவே நமது பதிவுகளில் விவாதித்தபடி ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் பொதுவாக இருவகையாக ஆராயப் படுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிதி நிலைமைகளை வைத்து பங்கின் விலையை கணிக்க முயல்வது அடிப்படை ஆராய்ச்சி அல்லது Fundamental Analysis. இன்னொரு வகையான ஆராய்ச்சின் பங்கின் விலைகளின் போக்கினை (Trends) அடிப்படையாக வைத்துக் கொண்டே அந்த பங்கின் வருங்கால போக்கினை அறிய உதவும் தொழிற்நுட்ப வரைபட ஆராய்ச்சி அல்லது Technical Analysis. சென்ற பதிவில் நண்பர்கள் பார்வைக்காக ஒரு வரைபடம் வழங்கப் பட்டிருந்தது. அந்த வரைபடத்தை பற்றிய விரிவான குறிப்புக்கள் ஏதும் வழங்கப் படவில்லை என்று திரு.நெற்குப்பை தும்பி ஐயா குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பங்கினை பற்றி விவரிக்கும் போதே டெக்னிகல் அனலிசிஸ் பற்றிய சில விளக்கங்களை இந்த பதிவில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கின் விலையின் போக்கை வைத்துக் கொண்டே, அந்த நிறுவனத்தில் நிகழும் சில முக்கிய மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் டெக்னிகல் அனாலிசிசின் அடிப்படை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள் வெளியுலகத்திற்கு அறியவருவதற்கு ...

இது விபத்து பகுதி! கவனம் தேவை!

தொடர்ந்து ஏழாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அதிவேகமான மீட்சி, உலக சந்தைகளின் சாதகமான நிலை மற்றும் மிக முக்கியமாக ஏராளமான அந்நிய முதலீட்டாளர்களின் வரவு ஆகியவை இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள். அதே சமயத்தில் தற்போது நம்முடைய பங்குசந்தை 2010 ஆம் ஆண்டின் அதிக பட்ச நிலைக்கு மிக அருகிலே வர்த்தகமாகி வருகின்றது என்பதும் தினந்தோறும் பல சிறிய/இடைநிலை பங்குகள் அதிவேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. எதிர்கால வர்த்தகநிலையின் (F&O Open Position) அளவு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலேயே காணப் படுவது, நமது பங்குசந்தையில் ஏராளமான வர்த்தக நிலை (Trading Position) எடுக்கப் பட்டதையே வெளிக்காட்டுகின்றது. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதாரத்தின் பங்கு மதிப்பீடுகள் (Valuation Ratios) அளவுக்கு சற்று அதிகமாகவே காணப் படும் என்றாலும் 2008 இல் நிகழ்ந்தவற்றையும் நாம் மறந்து விட முடியாது. எனவே புதிய வர்த்தக நிலை எடுப்பவர்கள் சற்று அதிகப் படியான எச்சரிக்கையுடன் சந்தையை அணுகவும். நீண்ட கால முதலீட்ட...

தாடிக்காரன் தப்பு செஞ்சான்! மீசைக்காரன் மாட்டிக்கிட்டான!

மும்பை தாக்குதலில் கைதாகி விசாரனைக்குள்ளாகி வரும் கசாபின் வழக்கறிஞர் கூறிய மராட்டிய கவிதை இது. கசாப் ஏதோ சினிமா ஆசையில் இந்தியாவிற்கு வந்து ஜுஹு கடற்கரையோரம் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், அவனை அங்கிருந்து போலீசார் பிடித்து வந்து மும்பை தாக்குதல் வழக்கில் சிக்க வைத்து விட்டதாகவும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது போல உலகிற்கு காட்டவே போலீசார் அவனுக்கு எதிராக பொய் சாட்சியங்களை உருவாக்கியிருப்பதாகவும் திறம்பட வாதிட்ட அந்த வழக்கறிஞர் தன துணைக்கு மேற்சொன்ன மராட்டிய கவிதையும் சேர்த்துக் கொண்டார். சிங்க மராட்டியர்தம் கவிதைக்கு கேரளத்து தந்தங்கள் பரிசளிப்போம் என்று பாரதியே சொல்லியிருந்தாலும், தீவிரவாதத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்ட இந்திய மக்களில் எவரேனும் இந்த மராட்டிய கவிதைக்கு வாய் வழி பாராட்டேனும் அளிப்பாரா என்பது சந்தேகமே . சொல்லப் போனால் கசாப்புக்கு கூட இது கொஞ்சம் ஓவர் எனவே தோன்றியிருக்கும். அனைத்து வீடியோ மற்றும் இதர நேரடி ஆதாரங்களுமே சித்தரிக்கப் பட்டவை என்று ஆவேசமாக வழக்கறிஞர் வாதிட்டாலும் அந்த நேரம் கசாப் தலையை நிமிர்த்தக் கூட இல்லை என்று பத்திரிக்...

இந்த பதிவிற்கு ஒரு முப்பது வினாடி ஒதுக்குங்கள்!

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே. வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல. குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம். எனவே நண்பர்களே! வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள். தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்! டிஸ்கி: என்ன! முப்பது வினாடி நேரம் ஆகவில்லையே? நன்றி!

பணவீக்கம் - ஆதாயம் யாருக்கு?

இன்றைய மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Index Inflation) பத்து சதவீதத்திற்கு அருகாமையிலும் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index Inflation) பதினாறு சதவீதத்திற்கு மேலேயும் உள்ளன. இவை அரசின் கணிப்புக்கள் மட்டுமே. உண்மையான பணவீக்கம் இருபது சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்பது பர்ஸ் எவ்வளவு வேகமாக காலியாகிறது என்று அனுபவப் பட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவதில் அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்க வில்லை. எடுக்கப் பட்ட சிற்சில நடவடிக்கைகள் கூட மிகுந்த கால தாமதத்துடனேயே எடுக்கப் பட்டிருக்கின்றன. உண்மையில் பணவீக்கத்தினால் ஆதாயங்கள் உள்ளனவா அப்படியென்றால் யாருக்கு ஆதாயம் என்பதை இங்கே பார்ப்போம். பொதுவாகவே பொருளாதாரத்தில் அளவான பணவீக்கம் என்பது வரவேற்கப் படும் ஒன்று. பணவீக்கம் இருந்தால்தான் தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்ய பலரும் முன்வருவார்கள். அவ்வாறு முதலீடு செய்கையில் வேலைவாய்ப்புக்கள் பெருகும். சமூகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகள் பணவீக்கத்தை பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறியாக கரு...

ஹை! இது கூட நல்லாருக்கே?

பொதுவாக அமெரிக்காவில் சளி பிடித்தால் இந்தியாவில் தும்மல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. அமெரிக்க சந்தைகளின் போக்கை குறிவைத்தே இந்திய சந்தைகள் நகருவதாகவும் ஒரு பொதுவான கருத்து உண்டு. ஆனால் இன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் (இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதத்தை அதிகப் படுத்தியது) அமெரிக்காவின் சந்தையை பெருமளவு பாதித்ததாக அந்த நாட்டின் முக்கிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது உலக அரங்கில் இந்தியா இப்போது எவ்வளவு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுகின்றது. ஜெய் ஹிந்த்!

பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் - முதலீடு செய்யலாம்.

மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான "பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்" தனது பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. நாளைய தேதியில் (19.03.2010) முடிவடையும் இந்த வெளியீட்டின் (IPO) விலை Rs.290-310 என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மென்பொருட்களை அவுட்சோர்சிங் (Outsoruced Software Product Development - OPD) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் மற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாகவே (உலகப் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட 2009 ஆம் ஆண்டை தவிர) காணப் படுகிறது. இதன் விலை நிர்ணயமும் ஏற்கனவே வணிகமாகி வரும் மற்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களை விடவும் கவரக் கூடிய வகையில் உள்ளது. ஓரளவுக்கு மதிப்பில் சிறந்த இந்த நிறுவனத்தின் மிகச் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடு பலமடங்கு வரவேற்பை பெறும் என்று நம்புகின்றேன். சந்தையிலும் மென்பொருட் நிறுவனங்களின் பங்குகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு காணப் படுவதும், இந்திய மென்பொருட் நிறுவனங்கள் பெருமளவுக்கு சார்ந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதும் நல்...

"முதல் உறுதி" நிதிகளில் முதலீடு செய்யலாமா?

பொதுவாக பங்குசந்தையில் முதலீடு செய்வதென்றால் பலருக்கும் வரும் முதல் பயம் "போட்ட முதல் முழுமையாக திரும்பி வருமா?" என்பதுதான். இது நியாயமான பயம்தான் என்பதில் சந்தேகில்லை. அதே சமயம், இந்த பயத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் (சில காப்பீட்டு நிறுவனங்கள் கூட) புதிய பங்கு திட்டங்களை (Capital Protection Schemes) அறிமுகப் படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பங்கு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் போட்ட பணம் போகாது (நுண்ணிய எழுத்துக்களில் "போட்ட பணம் போகாமலிருக்க முயற்சி செய்வோம்" என்ற டிஸ்கியுடன்) என்றும் விளம்பரம் செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம் அல்லது என்ன நஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஏற்கனவே சொன்னபடி "பங்கு சந்தையில் பங்கெடுக்க வேண்டும்", அதே சமயம் "முதலுக்கு மோசமாக கூடாது", "கொஞ்சம் குறைவான வருமானம் பங்குசந்தையில் இருந்து வந்தாலும் போதும்" என்றெல்லாம் விரும்புபவர்கள் ஏற்கும் வண்ணம் இந்த பங்கு நிதி திட்டங்கள் வடிவமைக்கப் படுகின்றன. முதலீட்டாளர்களின் பணத்தில் ஒரு குற...

பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே!

பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே! பொதுவாக பட்ஜெட் என்பது ஒரு அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கையாக மட்டுமே அறியப்படுகிறது. பல நாடுகளில் இதற்கு மேலே எந்த ஒரு முக்கியத்துவமும் பட்ஜெட்டிற்கு வழங்கப் படுவதில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் பட்ஜெட் மீது எப்போதுமே ஏராளமான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறையும் எதிர்பார்ப்புக்களுக்கு பஞ்சமில்லை. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் அரசாங்கத்திடமிருந்து ஏதேனுமொன்றை எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். பெரும் தொழில் அதிபர்கள் விரும்புவது முதலீட்டு சலுகைகள் மற்றும் வரிச்சலுகைகள். பங்குசந்தையின் விருப்பத்திற்கேற்ப பட்ஜெட் அமைய வேண்டுமென்று பங்கு வர்த்தகர்கள் விரும்புகின்றனர். மத்திய தர மக்கள் விரும்புவது வருமான வரி உயர்வு சலுகைகள் மற்றும் விலைவாசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். எளிய மக்கள் விரும்புவது தள்ளுபடிகள், மானியங்கள் மற்றும் விலைவாசி குறைப்பு நடவடிக்கைகள். சென்ற வாரம் வணிக தொலைகாட்சிகளில் பெரும் தனவந்தர்கள் பட்ஜெட் தொடர்பாக தமது விருப்பங்களை முன்வைத்த போது, எனக்கு ஒரு பழைய கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய அரசனிடம் ஏதேனும் பெற்ற...

ஏமாறாதே! ஏமாற விடாதே!

இரண்டு நாட்களாக பதிவுலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நித்யானந்தா செய்தது தவறா அல்லது ரஞ்சிதா செய்தது தவறா அல்லது இவர்கள் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சமயமாக்கியது தவறா என்றெல்லாம் ஏராளமான பதிவுகள்/பின்னூட்டங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பதிவில் இந்த தவறுகளைப் பற்றி அலசும் அளவுக்கு எனக்கு ஆன்மிகம், சாமியார்கள், திரை (நிழல்) உலக வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லை என்றாலும் எனக்கு தோன்றிய சில பொதுவான கருத்துக்களை மட்டும் இங்கு முன்வைக்க விழைகிறேன். எத்தனையோ முறை போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப அவற்றில் பணம் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர் நமது இந்திய மக்கள். சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட போன்சி என்ற பெயரில் ஏமாறுபவர் ஏராளம். அதே போலத்தான் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறும் பொதுமக்களின் தொடர்கதையும். பல சாமியார்களின் மோசடிகளைப் பற்றிய ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும், இந்த சாமியார் அப்படியல்ல என்று ரொம்பவும் அப்பாவித்தனமாக மீண்டும் மீண்டும் ஏமாறும் கதைகள் புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தொடர்ந்து ஏமாறுவதற...