தொடர்ந்து ஏழாவது வாரமாக நமது பங்கு சந்தை வெற்றிக் கொடியை நாட்டி வந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அதிவேகமான மீட்சி, உலக சந்தைகளின் சாதகமான நிலை மற்றும் மிக முக்கியமாக ஏராளமான அந்நிய முதலீட்டாளர்களின் வரவு ஆகியவை இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள்.
அதே சமயத்தில் தற்போது நம்முடைய பங்குசந்தை 2010 ஆம் ஆண்டின் அதிக பட்ச நிலைக்கு மிக அருகிலே வர்த்தகமாகி வருகின்றது என்பதும் தினந்தோறும் பல சிறிய/இடைநிலை பங்குகள் அதிவேகமான வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. எதிர்கால வர்த்தகநிலையின் (F&O Open Position) அளவு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலேயே காணப் படுவது, நமது பங்குசந்தையில் ஏராளமான வர்த்தக நிலை (Trading Position) எடுக்கப் பட்டதையே வெளிக்காட்டுகின்றது. இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதாரத்தின் பங்கு மதிப்பீடுகள் (Valuation Ratios) அளவுக்கு சற்று அதிகமாகவே காணப் படும் என்றாலும் 2008 இல் நிகழ்ந்தவற்றையும் நாம் மறந்து விட முடியாது.
எனவே புதிய வர்த்தக நிலை எடுப்பவர்கள் சற்று அதிகப் படியான எச்சரிக்கையுடன் சந்தையை அணுகவும். நீண்ட கால முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகள் செய்ய பொறுத்திருக்கலாம்.
நிபிட்டி குறியீடு 5280 -5320 என்ற நிலையில் இன்னும் கூட நல்ல எதிர்ப்பை சந்தித்து வருகின்றது. இந்த நிலை முழுமையாக முறியடிக்கப் பட்டால் இன்னும் நூறு புள்ளிகள் வரை நிபிட்டி வேகமாக முன்னேற வாய்ப்புள்ளது.
குறுகிய கால பங்கு வர்த்தகர்கள், அரேவா டி அண்ட் டி (Areva T&D), சின்டெக்ஸ் (Sintex), டாடா கெமிகல்ஸ், அடானி பவர், ரிலையன்ஸ் பவர் ஆகிய பங்குகளின் போக்கை தொடர்ந்து கவனித்து வரலாம்.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
4 comments:
The chart shows an upside break-out of the trend line. It has not been commented nor a likely trget given
//இது விபத்து பகுதி! கவனம் தேவை!//
சரியான நச் தலைப்பு.
பதிவுக்கு நன்றி சார்.
நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!
உங்கள் கேள்விக்கு பதிலாக ஒரு பதிவினையே இட்டு விட்டேன். தயவு செய்து பாருங்கள்.
நன்றி!
நன்றி தாமஸ் ரூபன்!
Post a Comment