Skip to main content

பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் - முதலீடு செய்யலாம்.

மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான "பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்" தனது பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. நாளைய தேதியில் (19.03.2010) முடிவடையும் இந்த வெளியீட்டின் (IPO) விலை Rs.290-310 என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மென்பொருட்களை அவுட்சோர்சிங் (Outsoruced Software Product Development - OPD) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் மற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாகவே (உலகப் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட 2009 ஆம் ஆண்டை தவிர) காணப் படுகிறது. இதன் விலை நிர்ணயமும் ஏற்கனவே வணிகமாகி வரும் மற்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களை விடவும் கவரக் கூடிய வகையில் உள்ளது.

ஓரளவுக்கு மதிப்பில் சிறந்த இந்த நிறுவனத்தின் மிகச் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடு பலமடங்கு வரவேற்பை பெறும் என்று நம்புகின்றேன். சந்தையிலும் மென்பொருட் நிறுவனங்களின் பங்குகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு காணப் படுவதும், இந்திய மென்பொருட் நிறுவனங்கள் பெருமளவுக்கு சார்ந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதும் நல்ல விஷயங்கள். அதே சமயத்தில் ருபாய் மதிப்பு அதிகரித்து வருவதும், மென்பொருட் நிறுவனங்களுக்கான வரிச்சலுகைகள் (Tax Holidays for Software Technology Parks) திரும்பப் பெறப் படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருவதும் எதிர்மறை விஷயங்கள்.

ஆக மொத்தத்தில் சிறப்பியல் கூறுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் தொலை தூர நோக்கிலும் அல்லது லிஸ்டிங் லாபங்களை கருத்தில் கொண்டும் முதலீடு செய்யலாம் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!

நன்றி.

Comments

பெர்சிஷ்டேன்ட் - பெயரே நம்பிக்கை தருகிறது. - முதன் முறையாக ஒரு நிறுவனத்தை அழுத்தமாக பரிந்துரை செய்துள்ளீர்கள். முயற்சிக்கிறோம் .பங்கு சந்தையில் நோண்டி நோங்கேடுக்கும் பலர் மததியில் ஏதோ கொஞ்சம் பங்கெடுக்க விரும்பும் சிறு(வாடு) முதலீட்டளர்கள் கவனிக்கவும்.அனேகமாக 2010 ட்ரேடிங் வருடமாக தான் இருக்கும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் நல்ல பங்குகளை சாவகாசமாக வாங்கலாம்.மாயாவதி கழுத்தில் போடுவதற்கு பதில் இந்திய முன்னேற்றத்தில் பங்கு கொள்ளும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.நமக்கு நம் சந்ததியினர் சிலை வைப்பார்கள்.
Thomas Ruban said…
உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.

பகிர்வுக்கு நன்றி சார்.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.
உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.//

NTPC நிறுவனத்துடன் பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் முன்னதன் பங்குகள் ஏற்கனவே சந்தையில் வர்த்தகமாகி வந்தன என்பதுடன் அந்த பங்கின் சந்தை உத்தேச மதிப்பின் (Market Value) அளவிலேயே வெளியீட்டு விலை நிர்ணயம் செய்யப் பட்டது. ஆனால், பெர்சிஸ்டேன்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதன் ஒத்த நிறுவனங்களின் விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டது (Priced at a discount to its value) சாதகமான ஒன்றாகும்.

ஒரு பங்கினை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை பின்னர் ஒருமுறை நேரம் கிடைக்கும் போது விளக்க முயற்சிக்கிறேன்.

நன்றி!
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...