Skip to main content

நீதிக்கு தலை வணங்குவோம்!

இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இரண்டு முக்கிய தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை.

பல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

மற்றொரு தீர்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு.

"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேன். (இது பற்றிய எனது பழைய பதிவு)

மேலும் என்னைப் பொறுத்த வரை, சட்டப் படி ரிலையன்ஸ் நிறுவனம் என்பது ஒரு பொது நிறுவனம்தான் (Public Limited Company). ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலான குடும்ப ஒப்பந்தத்தில், பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த வரை பொது நிறுவனங்களிலும் கூட தனி நபர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் முகேஷ் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப் படின் அது ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

Comments

Thomas Ruban said…
//சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.//
கண்டிப்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம் சார்.
//
"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேம்//

மூன்று நீதிபதிகளின் கருத்தும் ஒரேமாதிரி இருந்திருந்தால்(2:1) இன்னமும் சிறப்பாக இருந்துறுக்கும்.
//பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//
அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.

பதிவுக்கு நன்றி சார்.
MCX Gold Silver said…
வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.//

கண்டிப்பாக. ஒரு பொது நிறுவனத்தின் சொத்துக்களை தனது சொந்த சொத்துக்களைப் போல அனுபவிக்கும் மனப்பாங்கு தவிர்க்கப் பட வேண்டியது. இல்லையென்றால் தடை செய்யப் பட வேண்டியது என்று நினைக்கிறேன்.
Maximum India said…
நன்றி DG!

//வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி//
கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன் நண்பரே!

நன்றி!
கசாபை கசாப்பு கடைக்கு அனுப்பும் தீர்ப்பு . மொத்த மக்களின் உணர்வின் வெளிப்பாடு. ஓம்பலே சுட்டு கசாப் இறந்திருந்தால் சுலபமாக பாகிஸ்தான் பெயர் காப்பாற்ற பட்டிருக்கும். மக்களை நாயை விட கேவலமாக கொன்றவர்களை பற்றியும் அவர்களின் மூலம் பற்றியும் தெரிந்து சட்ட ரீதியாக விசாரணை மேற்கொண்டு தண்டனை அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தவகையில் ஓம்பலேக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்து துணிச்சலாகவும் திறமையாகவும் வாதாடிய வழக்கறிஞர் மற்றும் மிக முக்கிய வழக்கை பாரபட்சமின்றி விசாரித்த நீதிபதி. கண் முன்னே பலரை கொன்றவனுக்கும் வாதாட ஒரு வழக்கறிஞரை அனுமதித்த நம் சட்டம் . கசாப் குறி தவறாமல் எய்யப்பட்ட சக்தி வாய்ந்த அம்பு மட்டுமே. எய்தவர்கள் கர்ம சிரத்தையாக அடுத்த தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொண்டு இருக்கலாம். மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்..( ஆண்டவா! கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//( ஆண்டவா! கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)//

கண்டிப்பாக. நக்சல் பிரச்சினையில் கூட பல அரசியல்வாதிகள் இரட்டை வேடம்தான் போடுகின்றனர்.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...