Skip to main content

Posts

Showing posts from April, 2009

ஆடு புலி ஆட்டம்!

சென்ற வாரம், உலக சந்தைகள் ஓரளவுக்கு நிதானித்த போதிலும், நமது சந்தைகள் தமது வெற்றி நடையை ஏழாவது வாரமாக தொடர்ந்தன. இறக்கம் வரும் என்று காத்திருந்தவர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம். முதல் மூன்று நாட்கள் சற்று தடுமாறினாலும், கடைசி இரண்டு நாட்களில் சந்தையின் முக்கிய குறியீடுகள் வலுவான எதிர்ப்பு அரண்களை முறியடித்து பெருமளவு முன்னேறி உள்ளன. அதே சமயம் முதல் மூன்று நாட்களில் இதுகாறும் பெருமளவு முன்னேறிய சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் லாப விற்பனை காரணமாக வீழ்ச்சி அடைந்தது குறிப்பிடத் தக்கது. ஏற்கனவே சொன்ன படி, உலக சந்தைகள் சென்ற வாரம் பெரும்பாலும் வீழ்ச்சியையே சந்தித்தன. ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சீனா குறியீடுகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் வீழ்ந்தன. பொதுவாகவே இந்த சந்தைகளுடன் ஒன்றாகவே இதுகாறும் பயணித்து வந்த நமது சந்தை இந்த வாரம் ஒரு மாறுதலாக தனித்து முன்னேற்றத்தைக் கண்டது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். சென்ற வாரம் இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதங்களை (Repo and Reverse Repo Rates) 0௦.25% குறைத்தது. மேலும் வரும் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் (GDP Growth) ஆறு சதவீ...

பதிய விரும்பியதும் தவறிப் போனதும்

கிட்டத்தட்ட ஓரிரு நாட்களுக்கு ஒருமுறையேனும் புதிய பதிவுகளை பார்க்க முடியும் இந்த வலைப் பூவில் சென்ற வாரம் முழுக்க எந்த ஒரு புதிய பதிவினையும் இட சந்தர்ப்பம் வாய்க்க வில்லை. சில நண்பர்கள் தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் என்னை தொடர்பு கொண்டு நலம் கூட விசாரித்தனர். அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கணினியில் ஏற்பட்ட சிறிய தொழிற்நுட்ப கோளாறு, அதிகப் படியான பணி நிர்பந்தங்கள், சில சொந்த வேலைகள், சில மன மாற்றங்கள் ஆகியவையே மேற்சொன்னவாறு பதிவுகள் இட முடியாமைக்கு முக்கிய காரணங்கள். இருந்த போதும், பதிவுக்கான சில "பொருள்கள்" எனது மனதில் ஊஞ்சலாடிக் கொண்டே இருந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வார துவக்கத்தில், இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முழுமையாக பணி நிமித்தமாக தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் (சமீபத்திய மும்பை தாக்குதலில் பாதிக்கப் பட்டது) நான் இருக்க நேரிட்டது. 'அரண்மனை' என்ற பெயருக்கு ஏற்றபடி நாம் ஏதோ "அரண்மனையில்தான்" தங்கி இருக்கிறோமோ என்ற பிரமிப்பை உருவாக்கும் வகையில் பாரம்பரியமும் கலை நேர்த்தியும் ஒருங்கே...

காலம் மாறி விட்டதா?

தொடர்ந்து ஆறாவது வாரமாக இந்திய பங்குச் சந்தை வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. விடா நம்பிக்கையாளர்களால் கூட நம்ப முடியாத இந்த காளை ஓட்டம் (Bull Run), சரித்திரம் இதுவரை கண்ட மீட்சி முன்னேற்றங்களிலேயே (Relief Rally) மிகவும் வலுவானதாகவும் வேகமானதாகவும் கருதப் படுகிறது. இந்த ஓட்டம் தொடருமா? விழுந்து கிடக்கும் கரடி மீண்டும் எழுந்திருக்குமா? காளை ஓட்டம் தடைபடுமா? இந்தியாவில் தொடரும் விடுமுறைகளால் கூட காளை ஓட்டத்தை கட்டுப் படுத்த முடியவில்லை. சென்ற வாரம் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் வர்த்தக விடுமுறையாக இருந்தாலும், மீதம் உள்ள நாட்களில் சந்தை வெகுவாக முன்னேற்றம் கண்டது. இன்போசிஸ் நிறுவனம் சென்ற காலாண்டில் சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வருவாய் மற்றும் லாப முன்னேற்றம் கண்டிருந்தாலும், வருங்காலத்திற்கான வருவாய் மற்றும் லாபக் கணிப்பு (Guidance) சந்தையின் எதிர்பார்ப்புக்கு மிகவும் குறைந்து காணப் பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சந்தை துவக்கத்தில் பெருமளவு வீழ்ச்சி கண்டது. கரடிகள் கொஞ்சம் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவர்கள் உற்சாகம் வெகுநேரத்திற்கு நீடிக்க வில்லை. . உலக சந்தைகள் தொடர்ந்து ...

புள்ள புடிக்கவரங்க வந்துட்டாங்கைய்யா! வந்துட்டாங்க!

இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் மாட்சுகள் ஆரம்பமாகி விட்டன. மக்களை ஐபிஎல் பக்கம் இழுக்க பல நாட்களாகவே விளம்பர வலைகளை வீசிக் கொண்டிருந்த கிரிக்கெட் நிறுவனங்கள் இன்று தமது "புள்ள புடிக்கும்" வேலையை முழு வீச்சில் துவங்கி விட்டன. இன்றைக்கு காலைச் செய்தித் தாளை கிரிக்கெட் பற்றிய விளம்பரங்களே முழுவதுமாக அடைத்துக் கொண்டிருந்தன. அனைத்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட் புராணங்கள் முழு வீச்சில் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட, உலகில் இன்றைய தேதியில் உலகில் கிரிக்கெட்டை விட்டால் வேறு எந்த நிகழ்வும் இல்லை என்பது போல செய்தி நேரம் கிட்டத்தட்ட முழுவதுமாக கிரிக்கெட்டுக்கு ஒதுக்கப் பட்டு விட்டது. கிரிக்கெட்டில் இந்த முறை ஈடுபாடு காட்டக் கூடாது என்று நாம் எவ்வளவுதான் தலைகீழ் பிரயத்தனம் செய்தாலும், இந்த 'தொத்து வியாதியில்' இருந்து நம்மால் தப்பவே முடியாது. ஏனென்றால், நாம் தினந்தோறும் தொடரும் அனைத்து ஊடகங்களிலும் இதே செய்தியை மட்டுமே அதிகம் பார்க்க முடியும். அலுவலக விவாதங்களிலும் மெல்ல மெல்ல கிரிக்கெட் உள்ளே நுழைந்து விடும். ஒரு கட்டத்தில் "எங்கும் கிரிக்கெட் எதிலும் கிரிக...

இது ஒரு (விண்) திரை விமர்சனம்

உலக அதிசயங்களில் ஒன்றாக கருத வல்ல செரேங்கிட்டி நிலப்பகுதியின் (கிழக்கு ஆப்ரிக்கா) வன விலங்குகள் ஆண்டுதோறும் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை துல்லியமாக விளக்கும் ஒரு ஆவணப் படத்தை (மிகப் பிரமாண்டமாக) ஒரு விண் திரையில் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தின் பெயர் "Africa – The Serengeti”. இந்த படத்தை திரையிட்டு வரும் அரங்கு, (சமீபத்தில்) மும்பை அறிவியல் வளாகத்தில் துவங்கப் பட்டுள்ள "அரை உருண்டை வடிவ விண் திரை" அரங்கான ‘Science Odyssey’ உலகின் அரிய நிகழ்வுகளை அருகில் இருந்து பார்ப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தர வேண்டுமென்பதற்காக "பிரத்யேகமாக" இந்த திரை அரங்கு உருவாக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள திரையானது அரங்கின் கூரையில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த திரையை பார்வையாளர்கள் அண்ணாந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஐந்தாவதாக உருவாக்கப் பட்டுள்ள இந்த அரங்கில், பார்வையாளர்கள் அண்ணாந்து பார்ப்பதற்கென பிரத்யேக இருக்கைகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன. சரி இப்போது கதைக்கு வருவோம். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள செரேங்கேடி பகு...

காலாண்டு நிதி அறிக்கைகளை வெளியிடத் தயங்கும் இந்திய நிறுவனங்கள்.

மந்த நிலையில் உலகப் பொருளாதாரம். இதை உறுதி செய்யும் வகையில் அன்றாடம் வெளிவரும் பொருளாதாரத் தகவல்கள். அதே சமயம் பெருமளவு முன்னேறிக் கொண்டிருக்கும் பங்கு சந்தைகள். 'கண் கட்டி வித்தை' போல ஒரு மாதத்திற்குள்ளேயே பல மடங்கு விலை உயர்ந்து விட்ட இந்திய நிறுவனப் பங்குகளில் ( இவ்வளவு விலை உயர்ந்த பிறகு) முதலீடு இப்போது செய்யலாமா என்று விழி பிதுங்கும் முதலீட்டாளார்கள். இவர்களின் கலங்கரை விளக்கமாக கருதப் படுபவை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விளக்கும் காலாண்டு நிதி அறிக்கைகள். இந்த நிதி அறிக்கைகளை உடனடியாக வெளியிடத் தயங்கும் இந்திய நிறுவனங்கள். தயக்கத்திற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம். ஒரு நிறுவனத்தின் பங்கு இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் ஆகும் பட்சத்தில், அதனுடைய (தணிக்கைச் செய்யப் படாத) காலாண்டு நிதி அறிக்கை காலாண்டு முடிந்த ஒரு மாதத்திற்குள் வெளியிட வேண்டும். மார்ச்சுடன் நிறைவடையும் காலாண்டிற்கு (அல்லது நிறுவனத்தின் நிதி ஆண்டின் கடைசி காலாண்டு) மட்டும் ஒரு விதி விலக்கு உண்டு. அதாவது, தணிக்கை செய்யப் படாத காலாண்டு அறிக்கையை வெளியிட தேவை இல்லை. அதற்கு பதிலாக தணிக்கைச் செய்யப் பட்ட...

உலகிலேயே பெரிய பணக்கார நாடு வாங்கியிருக்கும் கடன் அளவு எவ்வளவு தெரியுமா?

கஷ்டப் பட்டு சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. இப்படி கடன் வாங்கியே பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நம்மூரில் கூட பார்க்கலாம். துளியும் கடன் சுமை இல்லாத பலர் சாதாரண சைக்கிள்களில் செல்வார்கள். ஆனால் வங்கிகளில் பல கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர்கள் (அதில் வாராக் கடன் அதிபர்களும் அடக்கம்) மிகப் பெரிய கார்களில், ஏன் சில சமயங்களில் தனியார் ஜெட்டில் கூட செல்வார்கள். அதே போல, இந்தியா போன்று குறைவாக கடன் வாங்கிய நாடுகள் எல்லாம் ஏழை நாடுகளாக அறியப் படும் வேளையில், உலகிலேயே அதிக கடன் வாங்கிய நாடு ஒரு வலுவான பணக்கார நாடாக அறியப் படுகிறது. ஒவ்வொரு நாளும் பில்லியன் டாலர் கணக்கில் அதிகரித்து செல்லும் அமெரிக்காவின் கடன் தொகை கடைசியாக கிடைத்த தகவலின் படி 11 டிரில்லியன் டாலர் அளவையும் தாண்டி விட்டது. இந்திய மதிப்பில் இது எவ்வளவு தெரியுமா? ஏறத்தாள ரூ. 55,00,00,00,00,00,000.00. தலை சுற்றுகிறதா? அதாவது ஐநூத்தி ஐம்பது லட்சம் கோடி ரூபாய். (இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவே கிட்டத்தட்ட நா...

அரசியல்வாதிகள் விளம்பர மாடல்கள் ஆனால்?

இது விளம்பர யுகம். விளம்பரம் இல்லாத பொருள் விலை போவது கஷ்டம். எத்தனை நாட்களுக்குத்தான் நாம் விளம்பரங்களில் நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், தொழிற் முறை மாடல்களையும் மட்டுமே பார்த்து போரடித்துக் கொண்டிருப்பது? நடப்பு விளம்பரங்களில் அரசியல்வாதிகளை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மேலே உள்ள மற்றவர்களாவது காமெரா முன் மட்டுமே நடிக்க முடிந்தவர்கள். ஆனால் நமது அரசியல்வாதிகளோ நல்ல தூக்கத்தில் எழுப்பி விட்டாலும் திறமையாக நடிக்கக் கூடியவர்களாயிற்றே? ப.சிதம்பரம் - அரசியலில் ஆக்ஷன் பண்ண அருமையான ஷூ " ஆக்ஷன் ஷூ" மம்தா பானர்ஜீ - உல்லாசப் பயணம் செய்ய உகந்த வாகனம் நானோ கார். யெஸ்! நம்மால் முடியும்! ராகுல் காந்தி - திருமணத்திற்கு வேண்டிய துணை தேட அவசியம் பாருங்கள் பாரத் மாட்ரிமோனி.காம். வருண் காந்தி - இந்தியாவில் பிறந்த அனைவருக்குமே உடனடித் தேவை! சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்! ஜீத்தி ரஹோ! பிரகாஷ் கரட் - உலக மக்கள் எல்லோரும் நம்பி பணம் போட உலகிலேயே நம்பர் ஒன் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி மூன்றாம் அணி - உறுதியாக ஓட்ட வைக்க 'பெவிக்கால்'. இதை யாராலும் பிர...

இன்று வாக்கு வேட்டை. நாளை மான் வேட்டை அல்லது மனித வேட்டை?

மும்பையில் ஒரு நெடிய பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற பல நாள் ஆசை நேற்றுத்தான் நிறைவேறியது. கார் அல்லது பைக் பயணத்தின் போது, பெரும்பாலும் நமது கவனம் சாலையின் மீதேதான் இருக்கும். லோக்கல் ரயில் பயணத்திலோ பெரும்பாலும் இருப்புப் பாதைகளையும் ரயில் நிலையங்களையும் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதே சமயம், டவுன் பஸ் பயணமோ நாம் வாழும் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது. கேட்வே ஆப் இந்தியாவின் அருகே இருந்து பந்திரா வரை செல்லும் ஒரு பேருந்தில் நேற்று நான் பயணித்த போது, (தென் மும்பையில் சியான் செல்லும்) முக்கிய சாலையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட ஐந்து கிமீ நீளத்திற்கு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. சரி ஏதோ தேர்தல் பிரச்சாரம் போல இருக்கிறது என்று எண்ணியிருந்த போது, சக பயணி ஒருவர் "சல்மான் கான் வருகிறார், பிரச்சாரம் செய்ய" என்று கூறினார். அப்போது அவர் கண்களில் ஒருவித பளபளப்பு இருந்ததை உணர முடிந்தது. சாலையிலும் மக்கள் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். கைகளில் மாலைகளோட...

இந்த இளம் 'கிராஜுவேட்டை' 'கங்க்ராஜுலேட்' பண்ணுங்க

ஒரு காலத்தில் 'கிராஜுவேட்' ஆக நமக்கெல்லாம் குறைந்த பட்சம் இருபது வயதுக்கு மேல் ஆக வேண்டி இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. மிகக் குறைந்த வயதிலேயே 'கிராஜுவேட்' ஆகி விடுகிறார்கள். மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்கு 'கிராஜுவேட்' (primary school) ஆனாலும் அதற்கென ஒரு தனி பட்டமளிப்பு விழா. இது வேறு யாரும் இல்லை. எனது செல்ல மகள். டிகிரி வாங்கி விட்டோம் என்று ஒரே பூரிப்பு. இந்த கிராஜுவேட் மேலும் பல கிராஜுவேஷன் பெற வேண்டுமென்று மனதார வாழ்த்துவோம். நன்றி.

கரணம் தப்பினால் மரணம்

இந்த சொற்றொடர் சர்க்கஸ் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல. மும்பையில் அன்றாடம் லோக்கல் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். மும்பையில் ஆண்டுதோறும் குண்டு வெடிப்பில் இறப்பவர்களை விட அதிகம் பேர் (ஆயிரக்கணக்கானோர்) ரயிலில் அடிபட்டே இறக்கிறார்கள் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்நிலைக்கு என்ன காரணம்? மும்பையின் பூகோள அமைப்பு சற்று விசித்திரமானது. நீளமாக வால் போன்று நீண்டு கிடக்கும் இந்த 'ஏழு தீவுகளால் ஆன நகரத்தில்' முக்கிய அலுவலகங்கள் யாவும் நகரத்தின் தென் கோடியில் அமைந்திருக்க, விண்ணளவு உயர்ந்த குடியிருப்பு வாடகைகள்/ விலைகள் இங்கு பணிக்கு செல்வோரை வட கோடிக்கு தள்ளி விட்டன. இதனால் காலையில் பெரும்பாலான மக்களின் பயணம் தெற்கு நோக்கி. மாலையில் அப்படியே நேரெதிரில். சாலைப் பயணம் என்பது போக்குவரத்து நெருக்கடியால் மிகவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ள, பல லட்சம் வருமானம் பெறுவோர் முதல் அன்றாட காய்ச்சிகள் வரை பயண நேரத்தை மிச்சப் படுத்த லோக்கல் ரயில் வசதியினையே நாடுகின்றனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட அறுபது லட்சம் பேர் மும்பை லோக்கல் வண்டிகளில் பயணிக்...

அரசியல்வாதியிடமே "ஆட்டைய" போட்ட பலே திருடர்கள்

நம்மூர் அரசியல்வாதிகள் ஜகதலப் பிரதாபன்கள். ஊரையே அடித்து உலையில் போட்டு காய்ச்சி சுவிஸ் பாங்கிற்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடிகள். அத்தகைய அரசியல்வாதி அதுவும் தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கிய கட்சி வேட்பாளரிடம், "அபேஸ்" செய்யவும் வல்ல சில வல்லவனுக்கும் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளார்கள் தெரியுமா? தென் கோவா தொகுதியில் போட்டியிடுபவர் திரு.நரேந்திர சவோய்க்கர். இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர். இவருடைய முக்கிய தேர்தல் கோஷம்: " கோவா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது". இது வரை மக்கள் இவர் கூற்றை நம்பினார்களோ இல்லையோ, இனி மேல் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். பலே திருடர்கள் இவரிடமே தமது கை வரிசையை காட்டி விட்டனர். அதுவும் ஒரு மிகப் பழைய தந்திரத்தை பயன்படுத்தி. சம்பவத்தன்று தென் கோவா தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நரேந்திர சவோய்க்கரின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர் தோளைத் தட்டிய ஒருவர், "கீழே கிடப்பது உங்கள் பணமா என்று பாருங்கள்" என்று சொன்னார். ஆவலுடன் கீழே குனிந்த (மற்றவர் பணத்தையே விடாத அரசியல் வியாதிகள் தங்கள் சொந்த பணத்தையா ...

சொந்த கார் கூட இல்லாத அரசியல் தலைவர்கள்

இவர்களுக்கு நம் 'மக்கள் காரான' நானோ காரை பரிந்துரைக்கலாமா? வருகிற மக்களவை தேர்தலை முன்னிட்டு நம் அரசியல் தலைவர்கள் அவர்களது சொத்து விவரத்தை சமீபத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த பட்டியலைப் பார்த்த போதுதான் நமது அரசியல் தலைவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்ட ஜீவனத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிய வந்தது. மாத சம்பளம் வாங்கும் நம்மைப் போன்ற நடுத்தர மக்களெல்லாம் நல்ல கார் வசதியோடு இருக்கும் போது, நமக்காக ஓடியாடி வேலை செய்யும் நமது அரசியல் தலைவர்கள் சொந்தக் கார் இல்லாமல் கஷ்டப் படலாமா? ஒரு வேளை இவர்களுக்காகத்தான் ரத்தன் டாட்டா நானோ கார் தயாரிக்க முடிவு செய்தாரா? சொந்தக் கார் இல்லாமல் கஷ்டப் படும் அரசியல்வாதிகள் கீழே. ஷரத் பவார்: உலகிலேயே அதிக வருமானம் பார்க்கும் விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். பல ஆண்டுகளாக மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் இருந்து வருபவர். மகாராஷ்ட்ராவின் அதுவும் முக்கியமாக "சர்க்கரை பிரதேசத்தின் " அசைக்க முடியாத தலைவர். பல வருடங்களாக இந்திய பிரதமர் பதவியின் கண் வைத்து வருபவர். (பதவிக்காக பல அணிகள் மாறி வந்தாலும் இது வரை ...

தொடரும் கிரிக்கெட் வெற்றிகள் - இந்திய அணியின் மாற்றத்திற்கு காரணம் என்ன?

உலகின் கடைசி அரணாக கருதப் பட்ட நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி இப்போது வெற்றிக் கொடி நாட்டி உள்ளது. 'உள்ளூரில் புலி வெளியூரில் எலி' என்றே ஒரு காலத்தில் கருதப் பட்டு வந்த இந்திய அணி , இந்த வெற்றியுடன் சேர்த்து, கடந்த எட்டு ஆண்டுகளில், கிரிக்கெட் விளையாடும் அனைத்து அந்நிய நாடுகளிலும் இந்திய அணி வெற்றிக் கனியை ருசித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. முன்பெல்லாம் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்தித்து வந்த இந்திய அணி, இப்போது உலகின் தலை சிறந்த மூன்று அணிகளில் ஒன்றாக கருதப் படுகிறது. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? காரணங்கள் என்ன? ஒரு சிறிய அலசல் இங்கே. 1990 களில் இந்திய அணியின் கேப்டன் ஆக இருந்த அசாருதின் சூதாட்ட புகார்களில் சிக்கி அணியை விட்டு விலக்கப் பட்ட நேரம் அது. கிரிக்கெட் ஜீனியஸ் ஆக கருதப் பட்ட டெண்டுல்கர் கேப்டன் பதவியில் சாதிப்பார் என்ற கணிப்பு விரைவிலேயே பொய்யாகி, இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே தென் ஆப்ரிக்க அணியிடம் மண்ணை கவ்வி மக்கள் மதிப்பை கிட்டத் தட்ட முழுமையாக இழந்திருந்த நேரம் அது. அதன் பின்னர் இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியிடம் முதல் டெஸ்டை மூன்று நாட்...

தேவை ஒரு வேகத் தடை ?

நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைப்பது மற்றும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது போன்ற உலகின் பல அரசாங்கங்கள் தொடர்ந்து எடுத்த எடுத்த முயற்சிகள், செய்திகளுக்காக, பல மாதங்களாக தவம் கிடந்த சந்தைகளுக்கு வரமாக கிடைத்தன. பலன், சந்தைகளின் வெற்றி நடை நான்காவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றி நடைக்கு தேவை இப்போதைக்கு ஒரு வேகத் தடை. இல்லையென்றால், மற்றுமொரு மிகப் பெரிய வீழ்ச்சிக்கு நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டியிருக்கும். சென்ற வார துவக்கம் பங்கு சந்தைகளுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அமெரிக்க வாகனத் துறைக்கு அந்த நாட்டு அரசு உடனடியாக மீட்டெடுப்பு உதவி எதுவும் உடனடியாக வழங்காது என்ற செய்தி சந்தைகளுக்கு இடியென வந்தது. நம் சந்தைகளின் முக்கிய குறியீடுகள் பெரிய அளவில் வீழ்ந்தன. அதே சமயத்தில், உள்ளூர் வர்த்தகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள சிறிய மற்றும் மத்திய ரக பங்குகள் அதிகம் வீழாதது குறிப்பிடத் தக்கது. வருட இறுதி மதிப்பிட்டுக்காக உள்ளூர் பரஸ்பர நிதிகள் பெருமளவில் பங்குகளை வாங்கியதும் சந்தை பெரிய அளவில் விழாமல் காப்பாற்றியது. அமெரிக்க வங்கிகள் தமது மதிப்பிழந்த சொத்துக்களை தமது ...

இந்தியப் பொதுத் தேர்தல்கள் - சில சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய வரலாற்றில் 1989 தேர்தல்கள் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின. ஒரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டதுடன், இந்தியாவிற்கு மிகவும் புதியதான (1977 ஜனதா அரசு சற்றே வேறுபட்டது) ஒரு கூட்டணி ஆட்சி முறை அறிமுகப் படுத்தப் பட்டதுடன், அந்த முறை தொடர வலுவான அச்சாரமும் போடப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசியலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தொடருகின்ற சில பொதுவான விஷயங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. ஒரு கட்சி அல்லது ஒரு குடும்ப ஆட்சி என்றிருந்த நிலையிலிருந்து முற்றிலும் விலகி, இந்தியா ஒரு புதிய ஜனநாயக பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சில சுவாரஸ்யங்கள் இங்கே. 1989 க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 1991 காங்கிரஸ் அரசு தவிர அனைத்து அரசாங்கங்களும் பல கட்சிகளின் கூட்டணி அரசாங்கமாகவே அமைந்தன. 1991 தேர்தலில் கூட தேர்தலில் மெஜாரிடி பெற முடியாத காங்கிரஸ் மற்ற கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களின் துணையுடன் பின்னர் பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. 1996 இல் பிஜேபி தனி ஆட்சி...

புத்தாண்டு தினத்தின் பலன்கள்

பொதுவாக புத்தாண்டு பலன்கள் என்று சொல்லும் போது, அடுத்து வருகின்ற புதிய ஆண்டு மொத்தத்திற்கான பலன்கள் என்பதையே குறிப்பது வழக்கம். ஆனால் புத்தாண்டு தினத்திற்கென்றே சில பலன்கள் அதாவது சில நன்மைகள் உண்டு தெரியுமா? இந்தியா போன்ற பல்வேறு மதம், மொழி, இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் ஒரு பெரிய நாட்டில் பல புத்தாண்டு தினங்கள் வருவதுண்டு. தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விஷூ (மலையாளம்), யுகாதி (கன்னட மற்றும் தெலுங்கு), குடி படவா (மராத்தி), பார்சி புத்தாண்டு, கிருஷ்ணா பக்ஷா (ராஜஸ்தான்), முகரம் (இஸ்லாமியர்) என்று பல புத்தாண்டுகள் இங்குண்டு. அதே போல சில பண்டிகைகள் கூட புத்தாண்டு நாட்களாக கருதப் படுவதுண்டு. உதாரணம் பொங்கல் மற்றும் தீபாவளி (மறுநாள்) போன்றவை. அரசு தரப்பிலும் சில வருட முறைகள் பின்பற்றப் படுகின்றன. உதாரணம் சக ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு போன்றவை. எங்களைப் போன்ற நிதித் துறைகளில் உள்ளவர்களுக்கும் வேறு வேறு நாட்களில் புதிய ஆண்டுகள் பிறப்பதுண்டு. இந்தியாவில், ஏப்ரல் ஒன்று. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஜூலை ஒன்று. அமெரிக்க போன்ற சில நாடுகளில் அக்டோபர் ஒன்று. இப்படி சொல்லிக் கொண்டே ப...

உங்கள் மூளை எந்த பக்கம்?

ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே. கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்ப...