Friday, April 10, 2009

அரசியல்வாதியிடமே "ஆட்டைய" போட்ட பலே திருடர்கள்


நம்மூர் அரசியல்வாதிகள் ஜகதலப் பிரதாபன்கள். ஊரையே அடித்து உலையில் போட்டு காய்ச்சி சுவிஸ் பாங்கிற்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடிகள். அத்தகைய அரசியல்வாதி அதுவும் தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கிய கட்சி வேட்பாளரிடம், "அபேஸ்" செய்யவும் வல்ல சில வல்லவனுக்கும் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளார்கள் தெரியுமா?

தென் கோவா தொகுதியில் போட்டியிடுபவர் திரு.நரேந்திர சவோய்க்கர். இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர். இவருடைய முக்கிய தேர்தல் கோஷம்: " கோவா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது". இது வரை மக்கள் இவர் கூற்றை நம்பினார்களோ இல்லையோ, இனி மேல் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். பலே திருடர்கள் இவரிடமே தமது கை வரிசையை காட்டி விட்டனர். அதுவும் ஒரு மிகப் பழைய தந்திரத்தை பயன்படுத்தி.

சம்பவத்தன்று தென் கோவா தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நரேந்திர சவோய்க்கரின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர் தோளைத் தட்டிய ஒருவர், "கீழே கிடப்பது உங்கள் பணமா என்று பாருங்கள்" என்று சொன்னார். ஆவலுடன் கீழே குனிந்த (மற்றவர் பணத்தையே விடாத அரசியல் வியாதிகள் தங்கள் சொந்த பணத்தையா விட்டு விடப் போகிறார்கள்) அவரிடமிருந்த லேப்டாப் கணினியை பறித்துக் கொண்டு நொடியில் தலை மறைவாகி விட்டனர்.

அரசியல்வாதியையே கணநேரத்தில் அசத்திய அவர்கள் சாதாரணமான ஆட்களாக இருக்க முடியாது. சொல்ல முடியாது, அவர்கள் ஏதேனும் வேறு தொகுதிகளில் போட்டியிடுபவர்களாகவும் கூட இருக்கலாம்.

நரேந்திராவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே நேரத்தில், திருடர்களின் கைவரிசையில் ஏமாறலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் "கையிடம்" ஏமாந்து போகாதீர்கள் என்றும் ஒரு நல்லெண்ண எச்சரிக்கையும் விடுப்போம்.

நன்றி.

10 comments:

கும்மாச்சி said...

அண்ணே சொல்ல முடியாது, அவங்க "கைகளே" வாக இருக்கலாம்.

Maximum India said...

அன்புள்ள கும்மாச்சி

//அண்ணே சொல்ல முடியாது, அவங்க "கைகளே" வாக இருக்கலாம்.//

கலியுகம் தம்பி இது. ஒரு "கையே" இன்னொரு "கைய" நம்ப முடியாத காலம் இது.

நன்றி.

Admin said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Maximum India said...

கண்டிப்பாக இணைக்கிறேன் சரண்

நன்றி

மாசிலா said...

எந்தவித‌ முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாம இப்படி ஆபத்தா குனிஞ்சா ஆப்புதான் மிஞ்சும். ஹா! ஹா!

Maximum India said...

பின்னூட்டத்திற்கு நன்றி மாசிலா

பொதுஜனம் said...

ஜன நாயக திருடரிடம் பணத்தை நியாய மாகவா திருடமுடியும் ? இருப்பினும் அவர் பின்னால் திருட போவதை முன்பே உணர்ந்து கொஞ்சம் அட்வான்சாக மக்கள் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள். தப்பில்லை.

Maximum India said...

நன்றி பொதுஜனம்

//இருப்பினும் அவர் பின்னால் திருட போவதை முன்பே உணர்ந்து கொஞ்சம் அட்வான்சாக மக்கள் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள். தப்பில்லை.//

அய்! இது கூட நல்லாருக்கே?

வால்பையன் said...

திருட்டா இருக்காது!

முதல்ல இவரு ஆட்டைய போட்டிருப்பாரு!

அதான் கன்னம் வச்சு அவங்க ஆட்டைய போட்டாங்க!

Maximum India said...

நன்றி வால்பையன்

//திருட்டா இருக்காது!

முதல்ல இவரு ஆட்டைய போட்டிருப்பாரு!

அதான் கன்னம் வச்சு அவங்க ஆட்டைய போட்டாங்க!//

இருக்கலாம். நம்ம ஆளுங்கள நம்பவே முடியாது.

நன்றி

Blog Widget by LinkWithin