Skip to main content

அரசியல்வாதியிடமே "ஆட்டைய" போட்ட பலே திருடர்கள்

நம்மூர் அரசியல்வாதிகள் ஜகதலப் பிரதாபன்கள். ஊரையே அடித்து உலையில் போட்டு காய்ச்சி சுவிஸ் பாங்கிற்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடிகள். அத்தகைய அரசியல்வாதி அதுவும் தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கிய கட்சி வேட்பாளரிடம், "அபேஸ்" செய்யவும் வல்ல சில வல்லவனுக்கும் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளார்கள் தெரியுமா?

தென் கோவா தொகுதியில் போட்டியிடுபவர் திரு.நரேந்திர சவோய்க்கர். இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர். இவருடைய முக்கிய தேர்தல் கோஷம்: " கோவா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது". இது வரை மக்கள் இவர் கூற்றை நம்பினார்களோ இல்லையோ, இனி மேல் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். பலே திருடர்கள் இவரிடமே தமது கை வரிசையை காட்டி விட்டனர். அதுவும் ஒரு மிகப் பழைய தந்திரத்தை பயன்படுத்தி.

சம்பவத்தன்று தென் கோவா தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நரேந்திர சவோய்க்கரின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர் தோளைத் தட்டிய ஒருவர், "கீழே கிடப்பது உங்கள் பணமா என்று பாருங்கள்" என்று சொன்னார். ஆவலுடன் கீழே குனிந்த (மற்றவர் பணத்தையே விடாத அரசியல் வியாதிகள் தங்கள் சொந்த பணத்தையா விட்டு விடப் போகிறார்கள்) அவரிடமிருந்த லேப்டாப் கணினியை பறித்துக் கொண்டு நொடியில் தலை மறைவாகி விட்டனர்.

அரசியல்வாதியையே கணநேரத்தில் அசத்திய அவர்கள் சாதாரணமான ஆட்களாக இருக்க முடியாது. சொல்ல முடியாது, அவர்கள் ஏதேனும் வேறு தொகுதிகளில் போட்டியிடுபவர்களாகவும் கூட இருக்கலாம்.

நரேந்திராவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே நேரத்தில், திருடர்களின் கைவரிசையில் ஏமாறலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் "கையிடம்" ஏமாந்து போகாதீர்கள் என்றும் ஒரு நல்லெண்ண எச்சரிக்கையும் விடுப்போம்.

நன்றி.

Comments

அண்ணே சொல்ல முடியாது, அவங்க "கைகளே" வாக இருக்கலாம்.
Maximum India said…
அன்புள்ள கும்மாச்சி

//அண்ணே சொல்ல முடியாது, அவங்க "கைகளே" வாக இருக்கலாம்.//

கலியுகம் தம்பி இது. ஒரு "கையே" இன்னொரு "கைய" நம்ப முடியாத காலம் இது.

நன்றி.
Admin said…
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்
Maximum India said…
கண்டிப்பாக இணைக்கிறேன் சரண்

நன்றி
எந்தவித‌ முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாம இப்படி ஆபத்தா குனிஞ்சா ஆப்புதான் மிஞ்சும். ஹா! ஹா!
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி மாசிலா
ஜன நாயக திருடரிடம் பணத்தை நியாய மாகவா திருடமுடியும் ? இருப்பினும் அவர் பின்னால் திருட போவதை முன்பே உணர்ந்து கொஞ்சம் அட்வான்சாக மக்கள் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள். தப்பில்லை.
Maximum India said…
நன்றி பொதுஜனம்

//இருப்பினும் அவர் பின்னால் திருட போவதை முன்பே உணர்ந்து கொஞ்சம் அட்வான்சாக மக்கள் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள். தப்பில்லை.//

அய்! இது கூட நல்லாருக்கே?
திருட்டா இருக்காது!

முதல்ல இவரு ஆட்டைய போட்டிருப்பாரு!

அதான் கன்னம் வச்சு அவங்க ஆட்டைய போட்டாங்க!
Maximum India said…
நன்றி வால்பையன்

//திருட்டா இருக்காது!

முதல்ல இவரு ஆட்டைய போட்டிருப்பாரு!

அதான் கன்னம் வச்சு அவங்க ஆட்டைய போட்டாங்க!//

இருக்கலாம். நம்ம ஆளுங்கள நம்பவே முடியாது.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...