Skip to main content

உங்கள் மூளை எந்த பக்கம்?

ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்போதுதான் நமது மனநிலையை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி எண் 1:

நீங்கள் எப்படிப் பட்ட மனிதர்?

அ. மற்றவர்கள் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும்.
ஆ. சமயத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வேன்.

கேள்வி எண் 2.

A = AM என்பது கீழ்கண்டவற்றில் எதனுடன் பொருந்தும்?

அ. P = PM
ஆ. HA = HAM

கேள்வி எண் 3

"வடக்கு - தெற்கு" என்பது எந்த இணையுடன் பொருந்தும்

அ. மேலே - கீழே
ஆ. கிழக்கு - மேற்கு

கேள்வி எண் 4.

15 மற்றும் 6 ஆகிய எண்களுக்கு உள்ள ஒற்றுமை கீழ்க்கண்ட இணைகளில் எதற்கு உள்ளது.

அ. 23 & 5
ஆ. 23 & 14

கேள்வி எண் 5.

"வேலை - விளையாட்டு" கீழ் கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. கட்டுப்பாடு - கட்டுப்பாடு இல்லாத நிலை
ஆ. தேவையான ஒன்று - தேவையில்லாத நிலை

கேள்வி எண் 6.

"கோபம் - குரோதம்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. மோசம் - மிக மோசம்
ஆ. அன்பு - காதல்

கேள்வி எண் 7

"தங்கம் - மஞ்சள்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. ராமர் - நீலம்
ஆ. எவர்சில்வர் - வெள்ளை

கேள்வி எண் 8:

"I - M " என்பது கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. U - R
ஆ. 9 - 13

கேள்வி எண் 9

நீங்கள் (அதிகம்) எப்படிப் பட்ட மனிதர்?

அ. நான் மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவேன்
ஆ. எனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன்

கேள்வி எண் 10

உங்களுக்கு அதிகம் பிடித்தது?

அ. உருவாக்கும் திறன்
ஆ. தெளிவான மனநிலை

இப்போது உங்கள் விடைகளை சரிபாருங்கள்.

உங்கள் விடைகளில் அதிகம் "அ" விடை வந்திருந்தால் உங்கள் வலது மூளையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பொருள். மாறாக "ஆ" என்று இருந்தால் இடது மூளை அதிகம் வேலை செய்கிறது என்று பொருள்.

இப்போது மூளையின் ஆதிக்கம் குறித்த பலன்களை பார்ப்போம்.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள், கலைத் திறமை, கற்பனைத் திறன் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள், கலைஞர்களாக அதிகம் வெற்றி பெறுவார்கள். வேகமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம், பல சமயங்களில் முன் யோசனை இல்லாத முடிவுகளையே எடுத்திருப்பார்கள். "எமோஷன்" மனநிலை அதிகம் கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை இவர்களால் சரியாக சொல்ல முடியாது.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய பழகிக் கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

இடது பக்க மூளை உள்ளவர்கள் மிகவும் நிதானித்து தர்க்க ரீதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழிற் முறை வல்லுனர்களாக வெற்றி பெறுவார்கள். அதே சமயம் "கலை" உணர்ச்சி இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும். ஒருவித "இயந்திர ரீதியான" வாழ்வு முறையை இவர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களால் அதிகம் விரும்பப் பட மாட்டார்கள்.

இடது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் தங்கள் கவனத்தை "உருவாக்கும் திறனை வளர்க்கும் பொழுது போக்கு அம்சங்களில் (உதாரணமாக வரைதல், எழுதுதல்)" செலுத்தினால் அவர்கள் மன நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.

உருவாக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தாலே ஒருவரின் மூளை சரியாக செயல் படும். அவர் தொழில் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

ஒன்றில்லாத மற்றொன்று உபயோகமில்லாதது. எனவே, உங்களது மூளையில் எந்த பகுதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு, உங்களை நீங்களே திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் வெற்றி காணுங்கள்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

Comments

MCX Gold Silver said…
தல எப்படி இப்படி எல்லா டாபிக்லியும் பின்றிங்க?அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்கலேன்!!!!!!!!!!
Maximum India said…
அன்புள்ள dg

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//தல எப்படி இப்படி எல்லா டாபிக்லியும் பின்றிங்க?அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்கலேன்!!!!!!!!!!//

எல்லா டாபிக்ஸும் இல்ல பாஸ். ஏதோ ஒன்றிரண்டு சப்ஜெக்ட்தான். ஒரு பொறியியலாளராக இருந்து கொண்டு நிதித்துறையில் பணி புரிகிறேன் அல்லவா? நமக்கு இடது மூளைதான் அதிக நேரம் வேலை செய்கிறது. அதனால்தான், இந்த பதிவில் சொல்லி உள்ளபடி, வலது மூளைக்கு ஓரளவுக்கேனும் வேலை கொடுக்க இந்த புதிய முயற்சிகள்.

நன்றி.
நல்ல கேள்விகள்!

ஒரே குழப்பத்துல ஒரு வேளை எனக்கு மூளையே இல்லையோனு நினைச்சிட்டேன்.
அடிக்கடி எந்த மாதிரி டெஸ்ட் வையுங்க!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ஒரே குழப்பத்துல ஒரு வேளை எனக்கு மூளையே இல்லையோனு நினைச்சிட்டேன்.
அடிக்கடி எந்த மாதிரி டெஸ்ட் வையுங்க!//

ஆமாங்க. நமக்கு மூளை இருக்கான்னு அப்பப்ப இந்த மாதிரி டெஸ்ட் வச்சுத்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அப்புறம் உங்க மூளை எந்த பக்கம்னு சொல்லவே இல்லையே? :)

நன்றி.
உண்மையிலேயே 5:5 ...எனக்கு எந்த மூளைன்னு நான் எடுத்துகிறது?
Maximum India said…
அன்புள்ள ஆண்ட்ரு சுபாசு

பின்னூட்டத்திற்கு நன்றி

//உண்மையிலேயே 5:5 ...எனக்கு எந்த மூளைன்னு நான் எடுத்துகிறது?//

நீங்கள் சமநிலையான மனிதர் என்று எடுத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில், பதிவிலேயே குறிப்பிட்டபடி,
இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

நன்றி.
/
ஆமாங்க. நமக்கு மூளை இருக்கான்னு அப்பப்ப இந்த மாதிரி டெஸ்ட் வச்சுத்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.
/

well said

எனக்கும் 5 : 5 தான் வந்தது.
Maximum India said…
அன்புள்ள மங்களூர் சிவா

//எனக்கும் 5 : 5 தான் வந்தது.//

உங்களுக்கும் முந்தைய பின்னூட்டத்திற்கான பதில்தான்.

நன்றி.
Mathivanan said…
மிகவும் நன்றி. நான் ஒரு பயிற்சியாளர் எனக்கு இது மிகவும் உதவும். எனக்கு வலது மூளை தான் செயல்படுகிறது அனேகமாக பயிற்சியாளராக இருப்பது சரிதான் என்று நினைக்கிறேன்.

மதிவாணன்
Raman Kutty said…
my answers are : 2,1,2,1,1,1,2,1,2,2

எனக்கு அ=5 ஆ=5 எனது நிலைமை என்னவோ..just a curiosity
Maximum India said…
அன்புள்ள மதி.

//மிகவும் நன்றி. நான் ஒரு பயிற்சியாளர் எனக்கு இது மிகவும் உதவும். //

மிகவும் சந்தோஷம். இந்த பரிசோதனைகள் ஒருவது மன சம நிலைக்கு மிகவும் உதவும்.

//எனக்கு வலது மூளை தான் செயல்படுகிறது அனேகமாக பயிற்சியாளராக இருப்பது சரிதான் என்று நினைக்கிறேன்.//

வலது மூளை கலைஞர்களுக்கும் உருவாக்கும் துறையில் இருப்பவர்களுக்கும் அதிகம் உதவி செய்யும். ஆனாலும், அவர்களுக்கும் கூட இரண்டு பக்க மூளையும் அதிக அளவில் வேலை செய்வது அவசியம். எனவே, இடது மூளைக்கும் நிறைய பயிற்சி கொடுங்கள்.

நன்றி.
நல்ல பதிவு.,
வாழ்த்துக்கள்..
Maximum India said…
அன்புள்ள ராமன்

//my answers are : 2,1,2,1,1,1,2,1,2,2

எனக்கு அ=5 ஆ=5 எனது நிலைமை என்னவோ..just a curiosity//

இந்த கேள்வி பதில்களின் படி உங்களுக்கு மனச் சமநிலை உள்ளது. ஏற்கனவே சொன்ன படி, இந்த கேள்வி-பதில்கள் ஒரு சிறிய பரிசோதனை முயற்சிதான். உங்கள் மனநிலையை நீங்களே பரிசோதிக்க முடியும். அதாவது நீங்கள் ஆராயும் மனநிலை உள்ளவரா அல்லது புதிய சிந்தனைகள் உள்ளவரா என்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ள முடியும்.

நன்றி.
Maximum India said…
நன்றி இளமாயா!
MoHaN said…
நல்ல பகிர்வு !!!:)
Maximum India said…
நன்றி மோகன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...