Skip to main content

ஆயில் இந்தியா பங்கு வெளியீடு - முதலீடு செய்யலாமா?

மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அடானி பவர் மற்றும் என்.எச்.பி.சி நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் ஒரு சிறப்பான துவக்கம் (Listing) பெறாத நிலையில், இந்த வருடத்தின் மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக (Initial Public Offer) ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் வரும் வாரத்தில் வெளியிடப் படவுள்ளன. இந்த வெளியீட்டின் சிறப்பியல்புகள் பற்றியும் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாமா என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம்.

முதலில் பங்கு வெளியீட்டைப் பற்றிய சில தகவல்கள்.

பங்கு வெளியீட்டு தேதி - செப்டம்பர் 7 முதல் 10 வரை
பங்கு வெளியீட்டு விலை - Rs.950 முதல் Rs.1050 வரை
குறைந்த பட்ச முதலீடு - 6 பங்குகள்
வெளியிடப் படும் பங்குகளின் எண்ணிக்கை - சுமார் 264 லட்சம்.

ஆயில் இந்தியா நிறுவனம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்பு, உற்பத்தி, எரிவாயுவை சுத்திகரிப்பு செய்து எல்பிஜி வாயுவாக மாற்றுவது, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து சேவை போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அடுத்தபடியான பெரிய இந்திய தேசிய எண்ணெய் & எரிவாயு நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆயில் இந்தியா ஒரு அரசு நிறுவனம். இந்தியா மற்றும் பல வெளிநாடுகளிலும் இதனுடைய ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன. இதனுடைய பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு படுகைகள் வடகிழக்கு இந்தியப் பகுதியில் அமைந்துள்ளன.

இந்த பங்கு வெளியீட்டின் சாதகங்கள்

முந்தைய பங்கு வெளியீடுகள் போல அல்லாமல், இந்த பங்கு வெளியீட்டின் விலை நிர்ணயம், முதலீட்டாளர்களுக்கு சற்று சாதகமாக அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இதனுடைய விலை/பங்கு வருவாய் (Price/EPS) மற்றும் விலை/பங்கு மதிப்பு (Price/Book Value) ஆகிய விகிதங்கள், போட்டி நிறுவனமான ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் கைவசம் ஏராளமான எரி படுகைகள் இருப்பதும் இந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பு விகிதம் (Success Ratio) அதிகமாக இருப்பதும் கூட சாதக அம்சங்கள்.

எண்ணெய் மற்றும் எரிவாயுவை தேவை உலகளவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து கொண்டே போவது ஒரு நல்ல விஷயம்.

இந்த துறையின் மீதான அரசின் விலை நிர்ணய கட்டுப்பாடுகளும் மான்யங்களும் ஒருவேளை குறைக்கப் பட்டால், இந்த நிறுவனத்திற்கு பெரிய சாதகமாக இருக்கும்.

இப்போது பாதக அம்சங்கள்.

இந்த நிறுவனம் ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால், அரசின் பிடி எப்போதுமே பலமாக இருக்கும். அரசியல் தேவைகளுக்காக இது போன்ற நிறுவனங்களின் லாபநோக்கம் விட்டுக் கொடுக்கப் படுவதும் ஒரு பாதக அம்சம்.

இதனுடைய முக்கிய உற்பத்திப் பொருட்களான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிக ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகி வருவதால், இந்த நிறுவனத்தின் லாப போக்கிலும் ஏற்றத்தாழ்வு உருவாகலாம்.

ஏற்கனவே சொன்னபடி முந்தைய இரண்டு பெரிய பங்கு வெளியீடுகளும் வெற்றிபெறாத நிலையில், இந்த பங்கு வெளியீட்டிற்கான தேவை (Demand for IPO) சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்புண்டு.

மொத்தத்தில், லிஸ்டிங் லாபத்திற்காக அல்லாமல், நீண்ட கால நோக்கில் ஒரு வலுவான, நிதானமான முன்னேற்றம் அடையக் கூடிய வாய்ப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு சொந்தக்காரர்களாக விரும்புவர்கள் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.

நன்றி!

டிஸ்கி: பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இங்கு வெளியிடப் படும், பங்குகள், சந்தை மற்றும் பொருளாதாரம் பற்றிய கருத்துகள், தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. முதலீடுகளுக்கான பரிந்துரைகள் அல்ல. முதலீடுகள் தன் சொந்த பொறுப்பிலேயே இருக்க வேண்டும்.

Comments

//அரசியல் தேவைகளுக்காக இது போன்ற நிறுவனங்களின் லாபநோக்கம் விட்டுக் கொடுக்கப் படுவதும் ஒரு பாதக அம்சம். //

இந்தியாவுக்கு இருக்கும் பெரிய சனியனே இது தானே!
Thomas Ruban said…
அவசரத்தில் எழுதியுள்ளிர்கள் போல இருக்கு.இன்னமும் நிறைய விவரங்களை கொடுத்திர்க்கலாமோ? என நான் நினைக்கிறேன் சார் இருந்தாலும், நன்றாக உள்ளது.

(Face Value Rs. 10/- (2,64,49982 equity shares)தரநிர்நிய CRISIL ஏஜன்சி கிரேட்4(GRADE 4) கொடுத்துள்ளது.Market Lot 6 Equity Shares ஆசியாவிலே பழமையான லாபகரமான நிறுவனம். ONGC க்கு அடுத்து பெரிய நிறுவனம்).

//லிஸ்டிங் லாபத்திற்காக அல்லாமல், நீண்ட கால நோக்கில் ஒரு வலுவான, நிதானமான முன்னேற்றம் அடையக் கூடிய வாய்ப்புள்ள ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு சொந்தக்காரர்களாக விரும்புவர்கள் இந்த பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யலாம்.//

சரியாக சொன்னீர்கள் சார்.

பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
//அவசரத்தில் எழுதியுள்ளிர்கள் போல இருக்கு.இன்னமும் நிறைய விவரங்களை கொடுத்திர்க்கலாமோ? என நான் நினைக்கிறேன் சார் இருந்தாலும், நன்றாக உள்ளது.

(Face Value Rs. 10/- (2,64,49982 equity shares)தரநிர்நிய CRISIL ஏஜன்சி கிரேட்4(GRADE 4) கொடுத்துள்ளது.Market Lot 6 Equity Shares ஆசியாவிலே பழமையான லாபகரமான நிறுவனம். ONGC க்கு அடுத்து பெரிய நிறுவனம்).//

மன்னிக்கவும் தாமஸ் ரூபன்!

நேரக் குறைவு காரணமாக அதிகம் எழுத முடியவில்லை. ஆனால் முக்கிய சாதக பாதகங்களை தெரிந்த வரை எழுதியுள்ளேன்.

அதிகம் விளக்க வில்லையென்றாலும், முடிவான கருத்துரையை மிகுந்த ஆலோசனைக்கு பின்னரே வழங்கியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது . தனிப்பட்ட முறையில் நானும் கூட இதில் (பன்னிரண்டு பங்குகள்) முதலீடு செய்யலாம் என்ற முடிவும் எடுத்துள்ளேன்.

நன்றி!
Thomas Ruban said…
//அதிகம் விளக்க வில்லையென்றாலும், முடிவான கருத்துரையை மிகுந்த ஆலோசனைக்கு பின்னரே வழங்கியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது . தனிப்பட்ட முறையில் நானும் கூட இதில் (பன்னிரண்டு பங்குகள்) முதலீடு செய்யலாம் என்ற முடிவும் எடுத்துள்ளேன்.//

உங்கள் முடிவுக்கு வாழ்த்துகள் சார்.

NHPC பங்குகள்Rs.34/-32/- க்கு வாங்கினால் ஒரு வருடத்தில் 70/- ரூபாய் வரை போகும் என நினைக்கிறேன்.(இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)

நன்றி சார்.
நன்றிகள். நன்றாக எழுதியுள்ளீர்கள்.
Btc Guider said…
ஏற்கனவே வந்த NHPC Adani Power ஆகிய IPO களில் முதலீட்டு செய்தவர்கள் யாரும் உடனே IPO களில் முதலீட்டு செய்ய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்,அதே சமயம் மக்கள் ஏமாறும் சமயத்தில்தானே சந்தையை மேலேற்றி சம்பாதிக்கும் கும்பல் இங்கு இருக்கத்தானே செய்யும்.இனிவரும் காலங்களில் IPO நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டும் சரிபட்டுவரும்.
Maximum India said…
//NHPC பங்குகள்Rs.34/-32/- க்கு வாங்கினால் ஒரு வருடத்தில் 70/- ரூபாய் வரை போகும் என நினைக்கிறேன்.(இது என்னுடைய தனிப்பட்ட கருத்து) //

தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!
Maximum India said…
நன்றி அகில் பூங்குன்றன்!
Maximum India said…
//ஏற்கனவே வந்த NHPC Adani Power ஆகிய IPO களில் முதலீட்டு செய்தவர்கள் யாரும் உடனே IPO களில் முதலீட்டு செய்ய வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்,அதே சமயம் மக்கள் ஏமாறும் சமயத்தில்தானே சந்தையை மேலேற்றி சம்பாதிக்கும் கும்பல் இங்கு இருக்கத்தானே செய்யும்.இனிவரும் காலங்களில் IPO நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டும் சரிபட்டுவரும்.//

உண்மைதான் ரஹ்மான்!

IPO விலை நிர்ணயங்கள் அதிகமாக இருப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல. விலை நிர்ணயம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்தால்தான் IPOக்கள் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் வரும்.

நன்றி ரஹ்மான்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...