Skip to main content

Posts

Showing posts from July, 2009

பாரெல்லாம் பைந்தமிழ்!

பாரெல்லாம் பரவி இருந்த என் பைந்தமிழ் இன்று பள்ளிக் கூடங்களில் மறுக்கப் படுகின்றதே? தரணி எல்லாம் தவழ்ந்து வந்த என் தீந்தமிழை இன்றைய மழலையர் கற்க முடியாதபடி தனியார் பள்ளிகள் ஆங்கில கல்வி புகட்டுகின்றனவே? உலகெல்லாம் ஓங்கி ஒலித்த என் தமிழை ஒழித்துக் கட்ட தமிழின துரோகிகள் முனைந்து விட்டனரே? இதை தடுப்பவர் யார்? திரண்டு வாருங்கள் தமிழர்களே! அழிகின்ற தமிழை காக்கும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது! பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்த நம் தமிழ் நாம் வாழ்ந்த காலத்தில் அழிந்தது என்று சரித்திரம் சொல்லக் கூடாது. தாய்மொழியை உதறுபவன் தன தாயை இகழ்ந்ததற்கு சமம். தமிழ் வழிக் கல்வியை தடுப்பவனை தாய் தடுத்தாலும் விடேன். இப்படியெல்லாம் சரளமாக எழுதிக் கொண்டிருந்த கவிக் கோவின் கண் முன்னே ஏராளமான கைத்தட்டுக்களும் பாராட்டுக்களும் விரிந்தன. தமிழ் குடிதாங்கி, தமிழின காவலர், தமிழ் செம்மல் என்றெல்லாம் ஏராளமான பட்டங்களை ஏற்கனவே சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் தான் வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் பட்டங்கள் சுமக்க வேண்டுமோ என்ற ஒருவித சந்தோச பயம் கூட அவருக்கு வந்தது. இந்த போராட்டத்தை எதிர்த்து சில தமிழின த...

டாலரின் சுழற்சிக் கதை.

எனது முந்தைய பதிவின் அடிப்படையில் ஒரு நண்பர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருந்தாலும், அந்த கேள்வி பதில் பலரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியதாலும் இதை ஒரு பதிவாகவே உருவாக்கி விட்டேன். கேள்விகள் "1.அமெரிக்க அரசு இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து வெளிவிடுகிறதே,இதற்கு எதுவும் வரைமுறை (அ)கட்டுப்பாடு இல்லையா? 2.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விட்டும் டாலர் மதிப்பு 48.25 யாக இருப்பது எப்படி? 2007ல் இதன் மதிப்பு 38 ரூபாய் தானே இருந்தது. 3.இப்படி டாலர் அளவக்கு அதிகமாக அடித்து புழக்கத்தில் விடுவதால் டாலர் மதிப்பு குறையும் என்று கூறிகிறார்கள் ஆனால் அவ்ர்கள் டாலரை மற்ற நாட்டு பங்குசந்தைலும், மற்ற நாட்டு பொருட்களை வாங்கி குவித்தால் டாலர் மதிப்பு எப்படி குறையும்? இது மற்ற நாட்டு பொருளாதாரத்தை பாதிக்காதா ? " இந்த கேள்விகளுக்கு சற்று விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு சீனாவை எடுத்துக் கொள்வோம். சீனா ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்த பொருட்களில், உள்ளூர் உபயோகம் போக மீதியை அமெரிக்காவிற்கு...

மீண்டும் ஒரு சூப்பர் பப்புள்!

பங்கு சந்தை தனது ஆரவாரமான வெற்றிநடையை சென்ற வாரமும் தொடர்ந்துள்ளது. சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மீண்டுமொருமுறை முக்கிய நிலையான 15000 புள்ளிகளுக்கு மேலே முடிவடைந்துள்ளது. உலகின் மற்ற பங்கு சந்தைகளும் கூட வெகுவாக உயர்ந்துள்ளன. சீனாவின் ஹாங்செங் குறியீடு 20000 புள்ளிகளுக்கு மிக அருகே உள்ளது. அமெரிக்காவின் டௌ ஜோன்ஸ் குறியீடு 9000 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் சற்று தெளிவான நிலையை அடைந்து விட்டாலும் கூட தனது "குறைந்த வட்டி கொள்கையை" தொடரப் போவதாக அந்நாட்டு மத்திய வங்கித் தலைவர் கூறியதும் பன்னாட்டு நிறுவனங்களின் காலாண்டு நிதியறிக்கைகள் சென்ற ஆண்டை விட மிகச் சிறப்பாக இருந்ததும் சென்ற வாரத்தில் உலகின் முக்கிய பங்கு சந்தைகள் மிகப் பெரிய அளவில் முன்னேற்றமடைய உதவியாக இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவின் வீட்டு விற்பனை அதிகமானதும் நம் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் சிறப்பாக இருந்ததும் கூட உள்ளூர் சந்தை உயர உதவியாக இருந்தன. நேற்று ஒரு பன்னாட்டு பரஸ்பரநிதியின் நிதி மேலாளர் கூறினார், " அமெரிக்க அரசாங்கம் கிட்டத்...

ஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால்?

சாதாரண ஹீரோக்கள் ஆக இருப்பவர்கள், அவர்கள் நடித்த சில படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்று விடுகிறார்கள். குறிப்பிட்ட சில படங்கள் வெற்றி பெற்றதற்கான உண்மையான காரணங்கள் வேறாக இருந்தாலும், உதாரணமாக நல்ல கதை, திரைக்கதை, இசை மற்றும் இதர தொழிற் நுட்ப விஷயங்கள் காரணங்களாக இருந்தாலும், திரைப்படத்தின் வெற்றிக்கான முழுக்காரணமும் அந்த படங்களின் முக்கிய கதாபாத்திரமான நடிகர்தான் என்ற ஒரு மாயை உருவாகுகிறது. இந்த மாயை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் இதர தொழிற் நுட்ப கலைஞர்களுக்கும் கூட ஏற்படுகிறது. விளைவு, ஒட்டு மொத்த ரசிகர்களுக்காக என்று இல்லாமல் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்களுக்காக (ரசிகர் வட்டம் என்பது கூட ஒரு மாயைதான்) என்று படம் தயாரிக்க முனைகிறார்கள். சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கூட, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று துவக்கத்தில் இருந்த ஆர்வங்கள் மாறிப் போய், கமர்ஷியல் ஹிட் படங்கள் செய்ய வேண்டும் என்று விளைகிறார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், திரைப் பட விரும்பிகள்தான்!...

பில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு!

பிரபலமான இந்த வசனத்தை பலரும் கேட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இங்கே! டிஸ்கி: இந்த படங்கள் ஏற்கனவே பதிவுலகில் வெளியிடப் பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். மேலும் இந்த படங்கள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் மட்டும்தானா என்பதை உறுதி படுத்த முடியவில்லை. கான்செப்ட் நன்றாக இருந்ததால் மட்டுமே இங்கு பதிவிடப் பட்டது. நன்றி.

கிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்!

இன்று காலையில் பார்த்த ஒரு பத்திரிக்கை செய்தி, ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் கோபத்தை வரவழைத்தது. பத்திரிக்கை செய்தி இதுதான்! மன்மோகன் சிங்கைப் பற்றி ஹில்லாரி கிளிண்டனிடம் அத்வானி கம்ப்ளைன்ட் செய்தார். இந்த செய்தி எனக்கு "டீச்சர்! இவன் எனது பல்பத்தை திருடிட்டான்" என்ற ஸ்கூல் ஞாபகத்தை வரவழைத்தது. அப்படி என்ன குற்றச்சாட்டு என்று பார்ப்போம். பல மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையை (பயங்கரவாதத்தைப் பற்றி வலியுறுத்தாமலேயே) இந்தியா மீண்டும் துவங்க சம்மதித்தது மற்றும் பலுசிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டிற்கு வலுவான பதில் அளிக்காதது ஆகியவை. மேலும் முக்கியமாக, மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானால் தண்டிக்கப் படாத நிலையில் பேச்சு வார்த்தையை புதிப்பிப்பது சரியல்ல என்றும் அத்வானி தெரிவித்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. மேற்சொன்ன குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் தெரிவித்திருக்க வேண்டிய, ஆனால் தெரிவிக்காமல் போன இன்னொரு குற்றச்சாட்டு, பல வருடங்கள் எ...

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்

ரூபாய் நிலவரத்தை பற்றி புரிந்து கொள்ள, அதன் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு நாட்டின் நாணயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி பண வீக்கம் ஏற்றுமதியாளர்கள் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்த அரசுக்கு வழங்கப் பட்டுள்ள தர நிர்ணயம் ஏற்றுமதி-இறக்குமதி வணிக பற்றாக்குறை பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் நாடுகளுக்கிடையே இருக்கும் வட்டி வீத வித்தியாசங்கள் மேற்சொன்னவை பற்றி இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வலைதளத்தில் பாருங்கள். http://dailyrupee.blogspot.com/2009/07/factors-impacting-rupee-movement.html நன்றி.

ரூபாய் நிலவரம்!

பொதுவாகவே பங்கு சந்தைகளை பற்றி விவாதிக்கவும், பங்குகளை பற்றிய தகவல்களை பரிமாறவும் ஏராளமான வலைதளங்கள் உள்ளன. அதே சமயத்தில், ரூபாய் வர்த்தகத்தைப் பற்றி அதிக வலைதளங்கள் இருப்பதாக தெரிய வில்லை. வர்த்தக தொலைக்காட்சிகளில் கூட ரூபாய் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. உண்மையில் ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் பாமரர் முதல் பங்கு சந்தை வரை பலரையும் அதிக அளவில் பாதிக்கின்றன. உதாரணமாக ரூபாய் தன மதிப்பை இழக்கும் பட்சத்தில் பங்கு சந்தையை உச்சிக்கு கொண்டு செல்லும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். அதே போல நலிந்த ரூபாய் இறக்குமதி செலவினத்தை அதிகப் படுத்தி பணவீக்கத்திற்கு வழி வகுத்து விடும். அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும். ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றியும் ரூபாய் வர்த்தகத்தின் செயல்பாடு பற்றியும் விவாதிப்பதற்காக ஒரு புதிய பதிவு பூவை உருவாக்கியுள்ளேன். http://dailyrupee.blogspot.com/ ...

அசர வைத்த அதிரடி ஆட்டம்!

பங்கு சந்தை மீண்டுமொருமுறை பலரையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. பட்ஜெட்டில் பங்கு சந்தையை திருப்தி படுத்துமளவுக்கு ஒரு விஷயமும் இல்லை, இந்திரா காந்தி காலத்திற்கு நாட்டை காங்கிரஸ் எடுத்துச் செல்கிறது என்றெல்லாம் காரணங்கள் சொல்லி ஒரே வாரத்தில் 1500 புள்ளிகள் (சென்செக்ஸ்) வீழ்ந்த சந்தை, அடுத்த வாரத்திலேயே முன் சொன்ன விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு கிட்டத்தட்ட 1200 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேர்தல் முடிவுக்கு அடுத்த நாள் சந்தை ஒரு பெரிய இடைவெளியுடன் துவங்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தொழிற்நுட்ப அடிப்படையின் படி (Technical Analysis) அந்த இடைவெளி நிரப்பப் பட வேண்டும் என்று நம்பிய பல சந்தை தாதாக்கள் பட்ஜெட்டுக்குப் பின்னர் விற்ற பின் வாங்கும் (Shorting) முடிவை எடுத்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் விற்பனை எதுவும் இல்லாததால் துண்டை காணோம் துணியை காணோம் என்று அவசரகதியாக தம்முடைய விற்பனை நிலையை (Short Position) சமன் (Short Covering) செய்ததே இந்த அதிரடி மீட்சிக்கு முக்கிய காரணம் ஆகும். உலக சந்தைகளின் சாதகமான போக்கும், பாராளுமன்றத்தில் சந்தை உணர்வுகள...

மிதி எனும் நதியின் கதை

ஜூலை 2005, மும்பையில் ஒரே நாளில் 95 செ.மீ மழை. மும்பை வெள்ளக்காடானது. போக்குவரத்து மற்றும் தொழில் ஸ்தம்பித்தது. நூற்றுக் கணக்கானவர்கள் பலியானார்கள் மழை நாள் அன்று நான் பெங்களூரில் இருந்தாலும், மழை நாளுக்கு இரண்டு நாள் கழித்து மும்பைக்கு பணிமாறுதலை முன்னிட்டு விமானத்தில் குடும்பத்துடன் பயணம் செய்கிறேன். மும்பைக்கு மதியம் வந்து சேர வேண்டிய விமானம் நடு இரவில் வந்து சேருகிறது. அதுவும் மும்பைக்கு மேலே நடு வானில் பலமுறை வட்டமடித்த பிறகு. விமான ஓடுதளம் பாதிக்கப் பட்டதனால், ஒரே ஒரு ஓடுதளத்தில் அனைத்து விமானங்களும் இயக்கப் படுகின்றன. மூன்று முறை கீழே இறக்க முயற்சி செய்து பின்னர் ஒவ்வொரு முறையும் நேர்குத்தாக விமானத்தை மேல் எழுப்பிய விமானி, "அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த விமானத்துடன் மோதாமல் தப்பியதாக" அறிவிக்கிறார். அம்மா கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே வருகிறார். விமானதளத்துக்கு வெளியே மும்பை, இது வரை பார்த்திராத வண்ணம் வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டுக்கு செல்ல டாக்ஸி கிடைப்பது கடினமாக இருக்கிறது. சாலையின் ஓரத்தில் வாகனங்கள் அநாதாரவாக விடப் பட்டுள்ளன. அடுத்த நாள், மளிகை சாமானம் வாங்க கலா...

பைபாஸ் பயணம்!

வாழ்க்கை எனும் சாலையில் முறையான பயணம் செய்தாலும் சில சந்தர்ப்பங்களில் நெறிமுறையற்ற சில சக பயணிகளை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் "மோதிப் பார்த்து விடு" என்ற அறைகூவலுடன் சிலர் நம்மை நேருக்கு நேராக எதிர் கொள்கின்றனர். இன்று முற்பகல் கூட, "நீயா நானா என்று பார்த்து விடலாம்" என்று சவால் விடும் வகையில், ஒருவர் முரட்டுத் தனமாக என்னிடம் நடந்து கொண்டார். முதலில் சற்று தணிந்து போனாலும், மோதல் தொடர்கதையாக, அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது. இன்று காலைதான், என்னுள் வேறுவிதமான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. "மக்களை திருத்துகிறேன், கெட்டவர்களை தட்டிக் கேட்கிறேன்" என்று கிளம்பிய பலர் இறுதியில் தாமே தீவிரவாதிகளாகவும் தாதாக்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு சோதனையாகவே இருந்தது. அப்போது, நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இரண்டு நிமிடம் நேரம் இருக்கிறதா என்று கேட்ட அவர், ஒரு பெரிய கதையின் (மகாபாரதம்) சிறிய கிளைக் கதையை கூறினார். பாண்டவர்களின் வனவாசம் மற்றும் தலைமறைவு வாசம் முடிகின்ற தருணம் ...

அங்கும் இங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

நாளை வெளியிடப் படவுள்ள மத்திய பட்ஜெட் சந்தைகளைப் பொறுத்த வரை ஒரு மிக முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது. ஏற்கனவே, கடனில் தத்தளிக்கும் மத்திய அரசால் அதிசயம் எதுவும் நிகழ்த்த முடியாமல் போனாலும், நிதி சீர்திருத்தங்களில் அரசின் உறுதிப்பாடு மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அரசின் திட்டங்கள் ஆகியவை பங்கு வணிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. பெரும்பாலான சந்தை வணிகர்கள் இந்த பட்ஜெட் பல நல்ல விஷயங்களை கொண்டிருக்கும் என்றே நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையின் விளைவாக, சென்ற வாரம் பெரும்பாலான உலக சந்தைகள் வீழ்ந்த போதிலும் நமது சந்தை ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. உலக சந்தைகளைப் பொறுத்த வரை, அமெரிக்க பொருளாதாரத்தின் மீட்சி, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்க படுகிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா போன்ற நாடுகள் தமது வளர்ச்சியை ஓரளவுக்கு தொடர்ந்தாலும் உலக வணிகத்தைப் பொறுத்த வரை இத்தகைய நாடுகளின் பங்கு மிகவும் குறைவானதே. மேலும் இந்தியா போன்ற நாடுகளின் மக்கள் சேமிப்பில் அதிகம் கவனம் செலுத்த அமெரிக்கர்கள் மட்டுமே அதிகப் படியான (சொல்லப் போனால் வரவுக்கு மீறிய்) செலவு செய்து வந...

அன்புள்ள அமெரிக்கா!

உனது பிறந்த நாள் வந்து விட்டது.! ஆனால் இதை உனது மண்ணின் பிறந்த நாள் என்று சொல்ல முடியாது. அந்த மண்ணின் மைந்தர்களின் உரிமை நாள் என்றும் கூட கூற முடியாது. குடியேற வந்து ஏற்கனவே குடியிருந்தவர்களை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர், தமது சொந்த தாய்நாட்டின் தொப்புள் கொடி அறுத்த நாள் என்று வேண்டுமானால் சொல்லலாம். முதல் முறையாக மக்களின் உரிமைகளுக்கு மரியாதை கொடுத்த நாடு நீ. மன்னர்களின் அதிகாரம் முடிந்து பிரபுக்களின் ஆதிக்கத்தை முடித்து மக்கள் கையில் அதிகாரம் கொடுத்த நாடு நீ. ஜனநாயகம் கூட சுரண்டல் நாயகம் ஆகலாம் என்ற பிரிட்டிஷ் பேரரசை உதாரணமாக கொண்டு, அரசுக்குக் கூட மக்கள் உரிமைகளை பறிக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டமாக கொண்டு வந்த நாடு நீ. வாழ்வும் தாழ்வும் எல்லாம் மக்கள் கையில் என்று, அரசாங்கத்தின் கையை சுருக்கி, மக்களிடமே பொறுப்பு அனைத்தையும் கொடுத்த நாடு நீ. சந்தை பொருளாதாரத்தின் தாய் நீ. உழைப்பு எங்கேயோ இருக்க, தொழிற் நுட்பம் எங்கேயோ இருக்க சந்தைகளை மட்டுமே உன்னகத்தே கொண்டு உலகின் பொருளாதாரத்தையே உன்னை நம்பி இருக்க செய்தாய். கிழக்கு மனதை வளர்க்க முயல மேற்கின் சிகரமாகிய நீ பணத்தை வளர்க்க ம...

அப்பா எங்கே?

அப்பா! என்று அழைத்தேன். ஆனால், உதடுகள் பிரிந்தாலும் வார்த்தைகள் வெளியேற வில்லை. அப்பா இப்படி இருந்து இத்தனை வருடங்களாக ஒரு போதும் பார்த்ததில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அப்பா எப்படி இருக்கிறார் என்று பல வருடங்கள் வரை கண்டு கொண்டதே இல்லை. பெருசு, கிணற்றுத் தவளை என்றெல்லாம் கேலி பேசிய காலங்கள் கூட உண்டு. அப்போதெல்லாம், அப்பா கூறுவார், "உனக்கு நாற்பது வயதாகும் போதுதான் ஒரு தந்தையின் மனநிலை புரிய வரும்", என்று. ஆனால் கால ஓட்டத்தின் வேகம் ஒரு தந்தையின் மனநிலையை முப்பது வயதிலேயே ஓரளவுக்காவது உணர்த்தி விட்டது. "என்ன அப்பா! வேலைக்கு போகலையா?" என்று கேட்டேன். "நான் எப்பவுமே பிசி" என்ற விளம்பர வாசகங்கள் அப்பாவிற்கு நிறையவே பொருந்தும். மிகச் சிறிய வயதிலேயே வேலைக்கு செல்ல ஆரம்பித்த அவர், அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட தனியார் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார். பொருளாதார நிர்பந்தங்கள் எதுவும் இல்லையென்றாலும், தொழில் மீது இருக்கும் ஆர்வம் மற்றும் சோம்பி இருக்கக் கூடாது என்ற மனப் பாங்கு அவரை ஓய்வுக்குப் பின்னரும் வேலைக்கு செல்ல உந்தி வந்திருக...

முளிச்சுக்கிட்டாங்கையா! முளிச்சிக்கிட்டாங்க!

முன்னரே எழுதப் பட்ட ஒரு கதையின் பின்கதை சுருக்கம் இது. ஏற்கனவே அந்த கதையை படித்தவர்கள் நேராக பின்கதை சுருக்கத்திற்கு சென்று விடுங்கள். படிக்காதவர்கள் கதையை ஒரு முறை படித்து விட்டு பின்கதை சுருக்கத்திற்கு செல்லுங்கள். ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது? ''சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில், எனது சொந்த (ஊரின் பேச்சு) நடையில் ஒரு கற்பனையான சிறு (தொடர்?) கதை இங்கே. சரியாக புரிந்து கொள்வது உங்கள் பாடு. ஒரே ஒரு ஊரிலே (பரதம் பட்டின்னு வச்சிக்கோங்களேன்) ஒரு ஜகதலப் பிரதாபன் இருந்தாராம். அவரோட பேரு குரு அண்ணாத்தே-வாம். பழய பாலிஸ்டர் துணி வியாபாரியா பொழப்ப ஆரம்பிச்ச அவரு ஊரிலே பாதிய வளைச்சுப் போட்டுகிட்டாராம். அவருக்கு ரண்டு பசங்க இருந்தாங்களாம். ஒருத்தன் பேரு மகேஷுஅண்ணாத்தே . இன்னொருத்தன் பேரு சுநிலு அண்ணாத்தே. ரெண்டு பேரும் அப்பாவ விட அதிபுத்திசாலிங்கலாம். அந்த ஊரிலே கடுமையான நல்ல தண்ணி பஞ்சமாம். குடிக்கற தண்ணிய காசு கொடுத்து பக்கத்து ஊரிலே இருந்து வாங்க வேண்டியிருந்துச்சாம். ஒரு நாளு, ஊரு ஜனங்கெல்லாம் ஒண்ணா சேந்து, ஒரு முடிவு பண்ணாங்களாம். ஊருக்கு கிளக்கு பாத்த மாதிரி இருக்க...