Skip to main content

அன்புள்ள அமெரிக்கா!

உனது பிறந்த நாள் வந்து விட்டது.!

ஆனால் இதை உனது மண்ணின் பிறந்த நாள் என்று சொல்ல முடியாது. அந்த மண்ணின் மைந்தர்களின் உரிமை நாள் என்றும் கூட கூற முடியாது. குடியேற வந்து ஏற்கனவே குடியிருந்தவர்களை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர், தமது சொந்த தாய்நாட்டின் தொப்புள் கொடி அறுத்த நாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முதல் முறையாக மக்களின் உரிமைகளுக்கு மரியாதை கொடுத்த நாடு நீ. மன்னர்களின் அதிகாரம் முடிந்து பிரபுக்களின் ஆதிக்கத்தை முடித்து மக்கள் கையில் அதிகாரம் கொடுத்த நாடு நீ.

ஜனநாயகம் கூட சுரண்டல் நாயகம் ஆகலாம் என்ற பிரிட்டிஷ் பேரரசை உதாரணமாக கொண்டு, அரசுக்குக் கூட மக்கள் உரிமைகளை பறிக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டமாக கொண்டு வந்த நாடு நீ.

வாழ்வும் தாழ்வும் எல்லாம் மக்கள் கையில் என்று, அரசாங்கத்தின் கையை சுருக்கி, மக்களிடமே பொறுப்பு அனைத்தையும் கொடுத்த நாடு நீ.

சந்தை பொருளாதாரத்தின் தாய் நீ. உழைப்பு எங்கேயோ இருக்க, தொழிற் நுட்பம் எங்கேயோ இருக்க சந்தைகளை மட்டுமே உன்னகத்தே கொண்டு உலகின் பொருளாதாரத்தையே உன்னை நம்பி இருக்க செய்தாய்.

கிழக்கு மனதை வளர்க்க முயல மேற்கின் சிகரமாகிய நீ பணத்தை வளர்க்க முயற்சி செய்தாய். உன்னுடைய ஆசை பேராசையாக உலகையே உனது பணம் கறக்கும் இயந்திரமாக மாற்ற முயன்றாய்!

பேராசை போராசையாக மாற புதியதொரு காலனி கலாச்சாரத்தையே உருவாக்கினாய்.

உன் பேராசைக்கும் போராசைக்கும் இன்று எத்தனை உயிர்கள் பலி என்பதை பார்த்தாயா?

வியட்நாம் முதல் ஈராக் வரை எத்தனை போர்கள்? மடிந்தது எத்தனைப் பேர்கள்? உடல் காயத்தை விட மனக்காயத்தால் துடிப்பவர்கள் எத்தனை பேர்?

உலகின் நாணயத்தையே உருவாகிய உன்னிடம் நாணயம் மட்டும் இல்லையே, ஏன்?

பாலஸ்தீனம் முதல் ஆப்கானிஸ்தான் வரை அடுத்த நாட்டு மக்களை பகடைக் காய்களாக மட்டுமே பார்ப்பதை நீ எப்போது நிறுத்தப் போகிறாய்?

நீ உருவாக்கிய ஒசாமாக்கள் இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக இருப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?

உன் மக்கள் உனக்கு பொன் குஞ்சுகள்தான்! அவர்கள் வளமாகவே வாழட்டும்!

ஆனால் அவர்களுக்கான உணவு எங்கள் வயிற்றில் இல்லை என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

இந்த சுதந்திர நாளில் உன்னை மனமார வாழ்த்துகிறேன்!

பல்லாண்டு நீடூழி வாழ்க!

அதே சமயம் இன்னொன்றும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

வாழு! வாழ விடு!

இதுவே உனது பிறந்த நாளின் எனது கோரிக்கையாக இருக்கும்.

என்னுடையது மட்டுமல்ல இந்த கோரிக்கை. இந்த உலகின் பல கோடி மக்களின் கோரிக்கையும் அதுவாகத்தான் இருக்கும்.

நிறைவேற்றுவாயா?

நன்றி.

Comments

எங்கே சாபம் இட்டுள்ளீர்களோ என்று பயத்தோடு வாசிக்க வந்தேன். நல்ல வேளை நாகரிகம் காத்துள்ளீர்கள்.

//உலகின் நாணயத்தையே உருவாகிய உன்னிடம் நாணயம் மட்டும் இல்லையே, ஏன்? //

நாணயம் இல்லாததால் தான் இன்று நாணயமும் அற்று கிடக்கிறது.
Maximum India said…
நன்றி பீர்!
அவன் உருப்படமாட்டாங்க!

நாடே திவாலாகிபோய் கிடக்கு!
Raman Kutty said…
வாழைப் பழத்தில் ஊசி... நன்றாக உள்ளது. இது நமது நாகரீகம், இதுவே அவர்களாக இருந்திருந்தால்..
Maximum India said…
நன்றி வால்பையன்!
Maximum India said…
நன்றி ராமன்!
Thomas Ruban said…
//வாழு! வாழ விடு!//

இந்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்குயாக மாறக்கூடது என்று எல்லாம் வல்ல இறைவனிடம்
வேண்டுவம் (மன்றடுவம்).
சுதந்திர நாளில் அமேரிக்கா மக்கள் வளமாகவே வாழட்டும் என்று வாழ்த்துவம்.
நன்றி..நன்றி...
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
Naresh Kumar said…
சோக்கா சொன்னீங்க போங்க...

நரேஷ்
Maximum India said…
நன்றி நரேஷ்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...