Skip to main content

ரூபாய் நிலவரம்!

பொதுவாகவே பங்கு சந்தைகளை பற்றி விவாதிக்கவும், பங்குகளை பற்றிய தகவல்களை பரிமாறவும் ஏராளமான வலைதளங்கள் உள்ளன. அதே சமயத்தில், ரூபாய் வர்த்தகத்தைப் பற்றி அதிக வலைதளங்கள் இருப்பதாக தெரிய வில்லை. வர்த்தக தொலைக்காட்சிகளில் கூட ரூபாய் பற்றிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை.

உண்மையில் ரூபாயின் ஏற்ற இறக்கங்கள் பாமரர் முதல் பங்கு சந்தை வரை பலரையும் அதிக அளவில் பாதிக்கின்றன. உதாரணமாக ரூபாய் தன மதிப்பை இழக்கும் பட்சத்தில் பங்கு சந்தையை உச்சிக்கு கொண்டு செல்லும் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார்கள். அதே போல நலிந்த ரூபாய் இறக்குமதி செலவினத்தை அதிகப் படுத்தி பணவீக்கத்திற்கு வழி வகுத்து விடும்.

அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பற்றியும் ரூபாய் வர்த்தகத்தின் செயல்பாடு பற்றியும் விவாதிப்பதற்காக ஒரு புதிய பதிவு பூவை உருவாக்கியுள்ளேன்.

http://dailyrupee.blogspot.com/

அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.

நன்றி

Comments

//அதே சமயம் நலிவடைந்த ரூபாய் வெளிநாட்டில் பணி புரியும் இந்தியர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். காரணம், அவர்களுடைய ரூபாய் மாற்ற அளவு அதிகமாகும்.//

ஹி..ஹி.. ஆமாம் சார், எனக்கு இரண்டிலும் தொடர்பிருக்கிறது.
Maximum India said…
நன்றி பீர்!

//ஹி..ஹி.. ஆமாம் சார், எனக்கு இரண்டிலும் தொடர்பிருக்கிறது.//

அப்படியென்றால் உங்களுக்கு இனிமேல் ரூபாய் நிலவரத்திலும் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்று சொல்லுங்கள். :-)
Thomas Ruban said…
//அறிவைத் தேடும் இந்த பயணத்திற்கு உங்கள் துணையையும் வேண்டி நிற்கிறேன்.//

உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.எங்களுடைய
ஆதரவு என்றும் உண்டு.

நன்றி..நன்றி..
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
முடிந்த அளவு தமிழிலும்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//முடிந்த அளவு தமிழிலும்!//

நிச்சயமாக.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...