Skip to main content

கிளாஸ் டீச்சராகிப் போன கிளிண்டன்!

இன்று காலையில் பார்த்த ஒரு பத்திரிக்கை செய்தி, ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் கோபத்தை வரவழைத்தது.

பத்திரிக்கை செய்தி இதுதான்!

மன்மோகன் சிங்கைப் பற்றி ஹில்லாரி கிளிண்டனிடம் அத்வானி கம்ப்ளைன்ட் செய்தார்.

இந்த செய்தி எனக்கு "டீச்சர்! இவன் எனது பல்பத்தை திருடிட்டான்" என்ற ஸ்கூல் ஞாபகத்தை வரவழைத்தது.

அப்படி என்ன குற்றச்சாட்டு என்று பார்ப்போம்.

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பாகிஸ்தான் அரசுடனான பேச்சுவார்த்தையை (பயங்கரவாதத்தைப் பற்றி வலியுறுத்தாமலேயே) இந்தியா மீண்டும் துவங்க சம்மதித்தது மற்றும் பலுசிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டிற்கு வலுவான பதில் அளிக்காதது ஆகியவை.

மேலும் முக்கியமாக, மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானால் தண்டிக்கப் படாத நிலையில் பேச்சு வார்த்தையை புதிப்பிப்பது சரியல்ல என்றும் அத்வானி தெரிவித்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

மேற்சொன்ன குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லாமல் இல்லை. அவர் தெரிவித்திருக்க வேண்டிய, ஆனால் தெரிவிக்காமல் போன இன்னொரு குற்றச்சாட்டு, பல வருடங்கள் எதை எதிர்த்து இந்தியா போராடியதோ, அந்த ஒப்பந்தத்திலேயே இந்தியா கையெழுத்திட்டது.

கார்பன் வெளியீடு பற்றிய ஒருதலைபட்சமான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும், இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக இந்தியா போராடிய போது முக்கிய பணியாற்றிய ஒரு அரசு அதிகாரி வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்ததாக பத்திரிக்கை செய்திகள் வெளியிடப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதும் அவசர அவசரமாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை துவங்கியதும், அமெரிக்க நிர்பந்தங்களின் அடிப்படையில், முக்கியமாக ஹில்லாரி கிளிண்டனின் வருகையை முன்னிட்டுத்தான், என்பது நாடறிந்த ரகசியம்.

இந்த நிலையில், யார் இதற்கெல்லாம் முக்கிய காரணமோ, அவரிடமே சென்று நம் எதிர்கட்சி தலைவர் முறையிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

அதே சமயத்தில் இந்தியா இறையாண்மை கொண்ட ஒரு சுதந்திர நாடு. இந்திய தலைவர்களின் தவறு குறித்து மக்களிடமோ அல்லது மக்கள் பிரதிநிதி சபையிலோதான் முறையிட வேண்டும். இதை விடுத்து அந்நிய நாட்டிடம் அதுவும் நம்மை ஆட்டிப் படைக்க விரும்பும் ஒரு நாட்டின் பிரதிநிதியிடம் முறையிடுவது என்ன விதத்தில் நியாயம்?

நன்றி.

Comments

அமெரிக்கா தான் நாட்டாமைங்கிறது தவிர்க்க முடியாத உண்மை ஆகி கொண்டு வருகிறதோ!

மீண்டும் காலணி ஆதிக்கம்!
நாடு உருப்பட்டுரும்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//அமெரிக்கா தான் நாட்டாமைங்கிறது தவிர்க்க முடியாத உண்மை ஆகி கொண்டு வருகிறதோ!//

இத அவங்க சொல்றாங்களோ இல்லையோ, நம்ம பெருசுங்க போட்டி போட்டுக்கிட்டு சரணம் போடுறாங்க!

நன்றி!
Naresh Kumar said…
இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை!!!
Maximum India said…
//இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை!!!//

இந்தியாவின் சாபக்கேடு என்று கூட சொல்லலாம். தமக்குள்ளே அடித்துக் கொண்டு இந்த மண்ணிற்குள் அந்நியரை வரவழைத்த வரலாற்றுக் காலம் ஞாபகத்திற்கு வருகிறது.

நன்றி நரேஷ்!
KARTHIK said…
திரை மறைவுல என்ன டீல் நடந்துதோ அதுல அவரக்கு சரியானா பங்கு போயிருக்காது.அதனால கடுப்பாகி இருப்பார்.
What we can do? Our Leaders are like that.
பாகிஸ்தானுடன் comprehensive talks நடத்த இந்தியா தயார் என செய்தி வந்தவுடன், திருமதி சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்திலேதான் மிகவும் சத்தமாக குரல் எழுப்பினார். ஆனால், அரசு தரப்பிலிருந்து தரப்பட்ட உரையில் சரியான விளக்கம் தரப்படவில்லை. ( என் மனைவி தினமும் குழம்பிலே உப்பு அதிகம் போட்டு விடுகிறாள் என்பது போல் வீதியில் பார்த்தவரிடம் புலம்புவது போன்று ) க்ளிண்டனிடம் புலம்பியிருக்கிறார் அட்வாணி
தவிரவும், பின்னூட்டத்திலே நண்பர்கள் சொல்லி , இருப்பது போல அமெரிக்கா நாட்டாண்மையை உலகமே ஒப்புக்கொண்டு இருக்கும் போது நாம் அவர்களிடம் "முறை இடுவதில் " தவறு இல்லை. ஆனால், அது நீங்கள் சொல்லி இருப்பது போல், வகுப்பு ஆசிரியையிடம் அழுவது போல் தான் தோன்றும் தான்
Thomas Ruban said…
//இவர்களைப் போன்ற தலைவர்கள்தான் இந்தியாவை ஆளவேண்டியிருப்பதுதான் நம் நேரக் கொடுமை!//

இன்று இருக்கும் தலைவர்கள் பலரும் தேச நலனில் அக்கரை இல்லாதவர்கள்.தங்களுடைய சுய நலன்க்காகபாடுபடுபவர்கள். அவர்களை மட்டும் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை மக்களும் (தேச நலனில் அக்கரை இல்லதவர்க்கே )
அப்படிபடவ்ர்க்கே ஆதரவு அளிக்கிர்னர்.

அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.

நன்றி..நன்றி..
இரு வேறாக சொல்லலாம்...ஒன்று.. எந்த வெளி நாட்டு பிரஜை வந்தாலும் இந்தியாவில் ஒரு மாதிரி பேசி பார்டர் தாண்டியதும் மாற்றி பேசுவது வாடிக்கை..மேலும் உள் நாட்டின் தேவை அடிப்படையிலும் வளர்ச்சியின் அடிப்படையிலும் தான் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படுகின்றன.. தலைவர்களின் விசிட் அதற்க்கு ஒரு டோக்கன் போல..ஆக ஹிலாரி வந்து போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. இரண்டு.. எப்படி என்றாலும் அமெரிக்கா இன்றும் அசைக்க முடியாத சக்திதான்..ஆக மாற்று பிரதமராக ஓரளவுக்காவது மதிக்கப்படும் ஒரு தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி வாய்பை நெருக்கத்தில் இழந்த ஒரு வசீகரமான தலைவரிடம் தான் கருத்தை சொல்லியதில் அல்லது புலம்பியதில் ஒன்றும் தவறில்லை..
Maximum India said…
நன்றி கார்த்திக்!

//திரை மறைவுல என்ன டீல் நடந்துதோ அதுல அவரக்கு சரியானா பங்கு போயிருக்காது.அதனால கடுப்பாகி இருப்பார்.//

இருக்கலாம்! அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?

நன்றி!
Maximum India said…
நன்றி நையாண்டி நைனா!
Maximum India said…
// என் மனைவி தினமும் குழம்பிலே உப்பு அதிகம் போட்டு விடுகிறாள் என்பது போல் வீதியில் பார்த்தவரிடம் புலம்புவது போன்று ) //

உதாரணம் நன்றாகவே இருக்கிறது சார்!
Maximum India said…
//அரசியல்வாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.//

உண்மைதான் தாமஸ் ரூபன்!

நன்றி!
Maximum India said…
//மேலும் உள் நாட்டின் தேவை அடிப்படையிலும் வளர்ச்சியின் அடிப்படையிலும் தான் முதலீடுகளும் ஒப்பந்தங்களும் செயல்படுத்தப்படுகின்றன.. //

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு. நம்ம தலைவருங்க மேலே அநியாயத்துக்கு நம்பிக்கை வைக்கிறீங்க!

//ஆக மாற்று பிரதமராக ஓரளவுக்காவது மதிக்கப்படும் ஒரு தலைவர் அமெரிக்கா ஜனாதிபதி வாய்பை நெருக்கத்தில் இழந்த ஒரு வசீகரமான தலைவரிடம் தான் கருத்தை சொல்லியதில் அல்லது புலம்பியதில் ஒன்றும் தவறில்லை..//

இது கொஞ்சம் புதுசா இருக்கு!

நன்றி பொதுஜனம்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...