Skip to main content

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்

ரூபாய் நிலவரத்தை பற்றி புரிந்து கொள்ள, அதன் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு நாட்டின் நாணயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி
பண வீக்கம்
ஏற்றுமதியாளர்கள் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை
அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்த அரசுக்கு வழங்கப் பட்டுள்ள தர நிர்ணயம்
ஏற்றுமதி-இறக்குமதி வணிக பற்றாக்குறை
பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள்
நாடுகளுக்கிடையே இருக்கும் வட்டி வீத வித்தியாசங்கள்

மேற்சொன்னவை பற்றி இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வலைதளத்தில் பாருங்கள்.

http://dailyrupee.blogspot.com/2009/07/factors-impacting-rupee-movement.html

நன்றி.

Comments

தற்போது 48.20 ஆக இருக்கிறது!
எதிர்கால நிலை எதாவது உண்டா?
Maximum India said…
//தற்போது 48.20 ஆக இருக்கிறது!
எதிர்கால நிலை எதாவது உண்டா?//

சற்று நீண்ட காலத்திற்கான இலக்காக 46 ஐ வைத்துக்கொள்ளலாம். குறுகிய கால நோக்கில், பங்கு சந்தைகளின் போக்கில் அடிப்படையில் ரூபாய் பயணிக்கும்.

நன்றி வால்பையன்!
Thomas Ruban said…
//நாணயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி
பண வீக்கம்
ஏற்றுமதியாளர்கள் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை
அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்த அரசுக்கு வழங்கப் பட்டுள்ள தர நிர்ணயம்
ஏற்றுமதி-இறக்குமதி வணிக பற்றாக்குறை
பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள்
நாடுகளுக்கிடையே இருக்கும் வட்டி வீத வித்தியாசங்கள்//


அந்நிய நாட்டு முதலியிடுகள்.

ரூபாய் மதிப்பு ஏறினால் ஜவிலி துறைக்கு நல்லது.
ரூபாய் மதிப்பு இறங்கினால் IT துறைக்கு நல்லது.

நன்றி..நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...